search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore corporation"

    • தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை
    • வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் தூய்மை பணி, திடக்கழிவு மேலாண்மை, டிரைவர் மற்றும் சுகாதார பணிகளில் சுமார் 4,000 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்களுக்கு தின கூலியாக 323 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டாக ஊதிய உயர்வு எதுவும் செய்யப்படவில்லை.

    தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் வழங்கு வதாக அறிவிக்க ப்பட்ட ஊக்கத்தொகையும் இதுவரை வழங்கப்ப டவில்லை.கடந்த சில ஆண்டுகளாக முறையான ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகள் வழங்க கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ஆயிரம் ரூபாய் போனஸாக வழங்க கோரிக்கை விடப்பட்டது.

    தொழிலாளர்களின் 19 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் நிர்வாகிகள் பன்னீர்செ ல்வம், செல்வராஜ், மணியரசு, செல்வம் உள்ளி ட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கோவை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பாக பதில் தரவில்லை.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 3000 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்பட்டது. இந்தத் தொகை கூட இந்த ஆண்டில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் சங்கங்க ளை சார்ந்தவர்கள் கூறியதாவது:-

    தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அரசாணைப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நிறுவனங்களுடன் பேசி முறையான சம்பளம் மற்றும் போனஸ் பெற்று தர முன் வரவில்லை. ஊதியம் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கோவை மாநகராட்சியில் தினமும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. போராட்டம் காரணமாக குப்பை அகற்றும் பணி நடத்தப்பட மாட்டாது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்.‌ எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெற தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
    • பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க கவுன்சிலர்கள் வந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களான பிரபாகரன், ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோரும் வந்தனர்.

    அவர்கள் மேயரின் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சி வளாகம் முன்பு தரையில் அமர்ந்து கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த பதாகைகளில், ஊழல் ஊழல் ஊழல் நடக்குதுங்கோ நடக்குதுங்கோ கோடியில் மேயர் வீடு சுண்ணாம்பு அடிக்கிறாங்கோ மக்கள் வரிப்பணம் விரயம் ஆகுதுங்கோ விரயம் ஆகுதுங்கோ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

    • கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.

    கோவை:

    கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும், மேயர் கல்பனா தீர்மானங்கள் கொண்டு வாசித்தார். முதலில் கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து அதிகளவிலான தண்ணீர் பெற்று தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறுவாணி அணையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து துணை மேயர் வெற்றி செல்வன், கோவை குனியமுத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து தார்சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், வளர்ச்சி பணிகள் உள்பட மேலும் 32 தீர்மானங்கள் இந்த மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    7-வதாக பாதாள சாக்கடை இணைப்பு திட்டத்திற்கான வைப்பு தொகையை 10 தவணையாக செலுத்தலாம் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

    கோவை மாநகராட்சி குப்பை கிடங்கில் 2 நாட்களாக எரியும் தீயை மேலும் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    கோவை:

    கோவை மாநகராட்சியில் குவியும் குப்பைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

    இதனால் அங்கு மலை போல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கு அடிக்கடி தீப்பிடித்து எரிவதும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நேற்று 2-வது நாளாக எரிய தொடங்கியது.

    இதற்கிடையே நேற்று இரவு மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென்று பரவியது. இதனால் விண்ணை தொடும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து தீப்பிடித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

    தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கலெக்டர் ராஜாமணி இன்று காலை வெள்ளலூர் சென்று தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தீயணைப்பு துறை டி.ஜி.பி. காந்திராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அவர் இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கு சென்று ஆய்வு செய்தார். இணை இயக்குனர் விஜய சேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் 9 மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    9 மாவட்டங்களில் இருந்து 50 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

    மேலும் சூலூரில் இருந்து ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீ பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தீப்பிடித்த வெள்ளலூர் குப்பை கிடங்கை கோவை மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி ஆகியோரும் பார்வையிட்டு பணிகளை முடக்கி விட்டுள்ளனர்.
    கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் குடிநீர், சாலை பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    கோவை:

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக் கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். முதல்- அமைச்சர் தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில், தெருவிளக்கு வசதிகள், குடிநீர் தேவைகள், கழிவுநீர் வடிகால்வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதிகள் என அடிப்படை கட்டமைப்புகளில் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்கிறது.

    எனவே கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி மற்றும் சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
    குடிநீர் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 794 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பேராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ.., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்று திறனாளிகள் அமைப்பு உள்ளிட்டவைகள் ஆதரவு தெரிவித்து இருந்தது.

    இந்த முற்றுகை - மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் போலீசார் தடையை மீறி முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    கோவை வடக்கு மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் கூறியதாவது-

    கோவை மாநகராட்சி குடிநீர் உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 800 பக்க ஒப்பந்த நகல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சில மாற்றத்துடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் 1200 பொது குடிநீர் குழாய் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

    குடிநீர் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்படும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முற்றுகை-மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கா நல்லூர் கிழக்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    ஆர். எஸ்.புரம் மேற்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலாளர் ராதிகா ஆகியோர் தலைமையிலும், குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகம் முன் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருப்பையா தலைமையிலும் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    மறியலில் ஈடுபட்ட 178 பெண்கள் உள்பட 794 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. #Plastic
    கோவை:

    தமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் முனைப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதை போலவே பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை முழுமையாக செயலாக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர்.

    தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருட்களை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் மக்கக்கூடிய பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக கோவையில் விற்பனை செய்யப்படும் ‘பயோ-பேக்குகள்’.

    பெங்களூரை சேர்ந்த ரிஜினோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிறுவன அதிபர் சிபி செல்வன் கூறியதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மக்கும் தன்மையிலான இந்த பைகள் 3 மாதத்தல் மக்கி விடும். எளிதாக தண்ணீரில் கரைந்து விடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும் போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போல் இல்லாமல், இந்த பைகள் சாம்பலாகி விடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது.

    தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மற்றும் மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பை போலவே காணப்படும் இந்த பயோ பேக்கை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசினாலும், பொடி, பொடி துகள்களாகி சில நாட்களில் மக்கி விடும். மருந்து கடைகள், ஓட்டல், ஜவுளிகடைகள், தொழிற்சாலைகளில் பொருட்கள் பார்சல் செய்ய ஏராளமானோர் இதனை வாங்குகின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் எங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோன்ற பைகள் போலியாக விற்கப்படுவதை தடுக்க இந்த பைகளில் கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அங்காடியில் இந்த பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 1 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் பல வகைகளில் பைகள் உள்ளன.

    தயாரிப்பு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த பைகளுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. பொதுமக்கள் இந்த பைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். எனவே தயாரிப்பு அதிகரிக்கும் போது விலை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Plastic
    ×