search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cockfight"

    • இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.

    நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.

    இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.
    • சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் இருந்து வெமுலவாடா பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வந்தது.

    பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்கியதும் டிரைவர் மற்றும் கண்டக்டர் உணவு சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அப்போது பஸ்சில் இருந்து சேவல் கூவும் சத்தம் கேட்டது. இதையடுத்து டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்சில் ஏறி பார்த்தனர். பயணிகளின் சீட்டுக்கு அடியில் ஒரு பை இருந்தது. பையை திறந்து பார்த்தபோது அதில் சண்டை சேவல் இருந்தது. பயணிகள் அதனை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பஸ் மேலாளர் மல்லையாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சண்டை சேவலை கரீம் நகர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். இரும்பு கூண்டில் அடைத்து சேவலுக்கு உணவு வழங்கினார்.

    பஸ்சில் சண்டை சேவலை விட்டுச் சென்றவர் வந்து சண்டை சேவலை மீட்டு செல்லலாம் என விளம்பரம் செய்தனர்.

    ஆனால் 3 நாட்களாக சேவலுக்கு சொந்தம் கொண்டாடி யாரும் வரவில்லை.

    இதனால் சண்டை சேவலை இன்று மாலை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் பந்தய சேவலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளதால் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்டை சேவலை ஏலம் எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×