search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coast Guard"

    • அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.
    • கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிக அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்த போதிலும் கடத்தல்காரர்கள் ஊடுருவி விடுகிறார்கள்.

    இந்நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உஷாரான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் அதற்குள் கடத் தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.

    இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த படகை பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாத்திரைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட நாட்டுப்படகு பாம்பனை சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.
    • கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர்.

    பெங்களூரு:

    கோவா மாநிலம் பனாஜியில் கிறிஸ்டோரே என்ற மீன்பிடி படகில் 27 மீனவர்கள் அரபிக்கடலின் நடுப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு படகு வழி தவறியது. இந்த படகில் இருந்த மீனவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து அவர்களுடைய படகு எந்த பகுதியில் உள்ளது? என ஆய்வு செய்தபோது கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் அருகே அங்கோலாவில் உள்ள பெலிகேரி துறைமுகத்திலிருந்து 30 கடல் மைல் தொலைவில் படகு தத்தளிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.

    கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து படகில் இருந்த 27 மீனவர்களும் பத்திரமாக மீட்டு அவர்களை மீட்டு பாதுகாப்பாக பெலிகேரி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

    • கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
    • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கடலோர காவல் குழுமஇன்ஸ்பெக்டர், ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை வகித்தார்கோடியக்கரை.

    மீனவகிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மீனவர்களிடம் பேசியதாவது

    கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணைபோகாமல் குற்றங்கள் மற்றும் கடத்தல், அந்நியர்கள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெஎழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாதுஎன்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினர்.

    • கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது.
    • கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் வேலு உள்பட 9 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதனை சரிபார்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீனவர்கள் 9 பேரும் கரைதிரும்ப முடியாமல் படகில் தத்தளித்தனர்.

    மேலும் காற்றின் திசைக்கு ஏற்ப விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற தமிழக விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை இயக்குனர் பழனிசாமி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் பழுதான படகில் மீனவர்கள் தத்தளிப்பதை அந்தபகுதி வழியாக வந்த சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் கண்டு பிடித்தனர். அவர்கள் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை கொடுத்து உதவினர். இதுபற்றி சரக்கு கப்பல் அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோரகாவல் படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று பழுதான விசைப்படகில் இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விசைப்படகை தங்களது படகில் கயிறு மூலம்கட்டி இழுத்தபடி நேற்று இரவு அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு காசிமேடு மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசைப்படகை சரிசெய்து மீனவர்கள் விரைவில் காசிமேடு திரும்ப உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    • கடல் சீற்றத்தால் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
    • காணாமல் போன ஒரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    கொச்சி:

    கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் ஒரே படகில் கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் கடந்த 28ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் கடற்சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. இதனால் கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர்.

    இதனிடையே, அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கடலோர காவல்படையினருக்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.  

    அந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

    குஜராத் அருகே கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். #CoastGuard #Fishermen
    போர்பந்தர்:

    குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய மீனவர்கள் 8 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய படகு திடீரென கடலில் மூழ்கியது. அதில் இருந்த 8 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக அவர்கள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை கப்பலை தொடர்பு கொண்டு உதவி புரியும்படி அபயக்குரல் எழுப்பினார்கள்.

    இதனை தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையிலும், கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்பு அவர்களை கடற்படை கப்பலில் ஏற்றி போர்பந்தர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். 
    10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    கடலூர் பகுதியில் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. இது தவிர 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மீனவ மாணவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை கிடைப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். வேலைக்கான பயிற்சியும் 20 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.
    இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடலோர காவல்படை துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த கீற்று கொட்டகையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 15 மூட்டைகளில் 960 கிலோ உரம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இந்த உர மூட்டைகள் எதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவைகள், தேயிலை தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி உரம் என்பதும், கோடியக்காட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கீற்று கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதேபோல் கடந்த மே மாதம் வேதாரண்யம் அருகே சிறுதலைகாடு கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ரூ. 185 கோடி செலவில் உருவான கடலோர காவல் படை புதிய ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. #Vijayaship #Patrolship
    சென்னை:

    சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கடலோரக் காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ கட்டப்பட்டது.

    பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன வடிவில் ரூ.185 கோடி செலவில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 2100 டன் எடையும், 98 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் இந்த கப்பல் செல்லும்.

    இந்த கப்பலில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவிகள், கண்காணிப்பு கருவிகள், அதிநவீன ரக துப்பாக்கிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பலின் பெரும்பான்மையான பாகங்கள் உள் நாட்டில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இந்த ரோந்து கப்பலில் 11 உயர் அதிகாரிகள், உள்பட 102 பேர் பணியில் இருப்பார்கள். 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

    கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    கடலோர காவல் படையை நவீனப்படுத்தும் வகையில் பழைய கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய ரோந்து கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.


    புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை துறைமுகத்தில் நடந்தது. பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’வை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பனித்தார்.

    இதில் கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திராசிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vijayaship #Patrolship
    அதிக உடல் எடை உள்ள வீரர்களுக்கு ராணுவ கேன்டீனில் மலிவு விலையில் மதுபானம் வழங்கப்பட மாட்டது என வடமேற்கு கடலோர காவல் படையின் கம்மாண்டர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். #CoastGuard
    அகமதாபாத்:

    தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள படைகள், மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை ராணுவ படைகளில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகளுக்கு தனியாக கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன.

    சந்தை விலையை விட அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் இந்த கேன்டீனில் விற்கப்படுகின்றது. வீரர்களுக்காக மலிவு விலையில் மதுபானமும் விற்கப்படுகின்றது. இந்நிலையில், வடமேற்கு கடலோர காவல்படை கமாண்டர் ராகேஷ் பால் விடுத்துள்ள சுற்றறிக்கையில், “உடல் எடையை கட்டுக்குள் வைக்காத வீரர்களுக்கு மலிவு விலையில் மதுபானங்கள் தரப்படாது. மருத்துவ பரிசோதனைகள் செய்து உடல் எடையை குறைக்காமல் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும்” என கூறப்பட்டுள்ளது.

    வடமேற்கு கடலோர காவல் படை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லையை கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்திய கடலோர காவல் படையின் நவீன ரோந்து கப்பல் ‘வீரா’ சென்னை அருகே நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
    சென்னை:

    இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கும் பணியில் சென்னை அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. கப்பல் கட்டும் தளம் ஈடுபட்டு வருகிறது. அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட 3-வது நவீன ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது.

    இந்த கப்பலை இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய கூடுதல் இயக்குனர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியால், அவரது மனைவி சுனிதா நாட்டியால் இருவரும் நாட்டுக்கு அர்ப்பணித்தனர். அந்த கப்பலுக்கு ‘வீரா’ என்றும் பெயர் சூட்டினர்.

    பின்னர் கூடுதல் இயக்குனர் ஜெனரல் நாட்டியால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தின்கீழ், இந்திய கடலோர காவல் படைக்கு தேவை யான 7 ரோந்து கப்பல்கள் தயாரிக்கும் பணி காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அண்ட்.டி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுவரை 3 ரோந்து கப்பல்கள் தயாரித்து அளித்துள்ளனர். தற்போது 3-வது கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

    முதல் ரோந்து கப்பலான விக்ரம் சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சி தொடக்க விழாவின்போது கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பலை உருவாக்க 2½ ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டனர். 2-வது கப்பல் அதைவிட குறைந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது ‘வீரா’ ரோந்து கப்பல் 21 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை பயணம் செய்யமுடியும்.

    எத்தகைய சூழ்நிலையிலும் இந்த கப்பலை இயக்க முடியும். இதில் 14 அதிகாரிகளுடன் மொத்தம் 102 வீரர்கள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இதன் ஆயுள் காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. பரமேஷ்வரன், எல்.அண்ட்.டி. நிறுவன நிர்வாக இயக்குனர் கண்ணன், நிர்வாக தலைவர் அரவிந்தன் உள்பட கடலோர காவல் படை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 
    ×