search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chepauk Super Gillies"

    • முதலில் ஆடிய சேப்பாக் அணி 159 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சேலம்:

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 79 ரன்கள் எடுத்தார். ஹரிஸ் குமார் 20 ரன்னும், ஜெகதீசன் 15 ரன்னும், சஞ்சய் யாதவ் 15 ரன்னும் எடுத்தனர்.

    நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அருண் கார்த்திக் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார்.

    முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரீ நிரஞ்சன் 24 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரித்திக் ஈஸ்வரன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தனது அதிரடியை தொடர்ந்த அருண் கார்த்திக் சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்தில் 5 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், நெல்லை அணி 2 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அருண் கார்த்திக் 104 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அபராஜித் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதோஷ் பால் - ஜெகதீசன் களமிறங்கினர். பிரதோஷ் பால் 2-வது ஓவரிலேயே போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபராஜித் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 7-வது ஓவரில் சிஎஸ்ஜி அணி தனது 2 விக்கெட்டை பறிகொடுத்தது. ஜெகதீசன் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சஞ்சய் யாதவ் 15 ரன்னிலும் லோகேஷ் ராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சிஎஸ்ஜி அணி 74 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அபராஜித்துடன் ஹரிஸ் குமார் ஜோடி சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 101 ரன் இருந்தபோது ஹரிஸ் குமார் 20 ரன்னில் வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபா அபராஜித் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 79 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெல்லை அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளையும் லக்ஷய் ஜெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    • சேப்பாக் அணியின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.
    • அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.

     குறிப்பாக பாபா அபராஜித் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஆனால் கடைசி ஓவர் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ராமலிங்கம் ரோகித் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராஜ் 3வது பந்தில் பவுண்டரியும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும் அடித்தார். 5வது பந்தை எதிர்கொண்ட சசிதேவ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை எதிர்கொண்ட ரகில் ஷா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    கடைசி வரை போராடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    • திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ரகில் ஷா 3 விக்கெட், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார். சுபோத் 31 ரன், சரத் குமார் 25 ரன், சிவம் சிங் 21 ரன், ராகுல் 20 ரன்கள் அடித்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ரகில் ஷா 3 விக்கெட், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • டி.என்.பி.எல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது . 16-ந் தேதி வரை அங்கு 6 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 18-ந் தேதி முதல் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.

    நேற்று நடந்த 10 வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தியது. 2 போட்டியில் தோற்ற அந்த அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. 2 போட்டியில் வென்ற நெல்லை அணிக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.

    டி.என்.பி.எல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது ஆட்டமாகும். முதல் போட்டியில் சேலம் ஸ்பார் டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3-வது போட்டியில் கோவை கிங்சிடம் 8 விக்கெட்டில் தோல்வியை தழுவியது.

    2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கும் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அதில் இருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. திருச்சி அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    கோவை கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோற்றது. அந்தஅணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    • முதலில் ஆடிய சேப்பாக் 126 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை 128 ரன்கள் எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடந்தது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார்.

    கோவை கிங்ஸ் சார்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர் சச்சின் 14 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமாருடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுரேஷ்குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கோவை அணி 16.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது. சாய் சுதர்சன் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறினர்.
    • கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோவை பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக பந்து வீசினர். முன்னணி பேட்ஸ்மேன்கள்கூட நிலைக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 32 ரன்கள் அடித்தார். சசிதேவ் 23 ரன்கள் அடித்தார். கோவை கிங்ஸ் தரப்பில் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது.

    இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
    • கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 16-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன. 6 ஆட்டங்கள் கோவையில் நடத்தப்பட்டது.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நேற்று தொடங்கியது.

    2 ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை வீழ்த்தியது. சேலம் அணி முதல் வெற்றியை பெற்றது. திருச்சி அணி 2-வது தோல்வியை தழுவியது.

    2-வது போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது. மதுரை அணி 2-வது தோல்வியை தழுவியது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும் (52 ரன்), 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் (7 விக்கெட்) வீழ்த்தி இருந்தது. இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது.

    கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 70 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்சை வென்றது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    • 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது.
    • பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது.

    இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

    கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட் டிகள் இன்று முதல் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்னஸ்-கங்கா ஸ்ரீதர் ராஜா தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தன. இதனால் முதல் வெற்றியை பெறப் போவது சேலமா? திருச்சியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. மதுரை அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    டி.என்.பி.எல். போட்டியின் 9-வது 'லீக்' ஆட்டம் திண்டுக்கல்லில் நாளை (19-ந்தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    நாளைய போட்டியில் கோவை கிங்சை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. பிரதோஷ் ரஞ்சன்பால், பாபா-அபராஜித், சஞ்சய் யாதவ், கேப்டன் ஜெகதீசன், ஹரீஸ்குமார், ரகீல்ஷா போன்ற சிறந்த வீரர்கள் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் உள்ளனர்.

    கோவை கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் திருப் பூர் தமிழன்சை 70 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் நெல்லை ராயல் கிங்சிடம் கடைசி பந்தில் தோற்றது. அந்த அணி 2-வது வெற்றி வேட்கையில் இருந்தது.

    கோவை அணியில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். சாய் சுதர்ஷன் 2 ஆட்டத்தில் 2 அரைசதத்துடன் 176 ரன்கள் எடுத்துள்ளார்.

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 120 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய சேப்பாக் அணி 121 ரன்கள் எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடந்தது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது திருப்பூர் அணி.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்தனர்.

    சேப்பாக் அணி சார்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரதோஷ் பால் 25 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இந்த தொடரில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. பாபா அபராஜித் 46 ரன்னும், ஹரீஷ் குமார் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, ராதாகிருஷ்ணன் 36 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்கள், ராஜேந்திரன் 26 ரன்களும் (நாட்அவுட்) எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ஹரிஷ் குமார், ரகில் ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    ×