search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu Collector"

    • அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
    • உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் 29-9-2023 அன்று இணைய வழியில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945-ல் அட்டவணைகள் எச், எச் ஒன், எக்ஸில் (H, H1, X) குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் வருகிற 31-ந்தேதிக்குள் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

    மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மருந்து ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த உத்தரவினை பின்பற்றாத காரணத்தினால் மருந்து கடைகளின் உரிமையாளரின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கலர் மாக்கோலம் போடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் அங்கன்வாடி பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
    • 6 மாத காலம் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார மேலாளர் பணியிடம், மற்றும் திருப்போரூர்-2, புனித தோமையார் மலை-1, மதுராந்தகம்-1 என மொத்தம் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு 1 கணினி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வட்டார மேலாளர் பணிக்கான கல்வித்தகுதி:- ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி (எம்.எஸ்.ஆபிஸ்) பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான கல்வித்தகுதி விவரம்:-

    ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    கணினி உதவியாளருக்கான கல்வித்தகுதி:-

    பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஒரு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி-

    இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 20-06-2023 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம்.

    • படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
    • ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட மீனவ கிராமங்களில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 7 மணியளவில் எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆய்வு நடைபெறவுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்காக முன்னேற்பாடு பணிகள்:

    ஆய்வு செய்யப்படவுள்ள படகுகளின் பதிவுச்சான்று, வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய், பாஸ் புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்களை ஆய்வு குழுவினரிடம் அளிக்க வேண்டும்.

    மீன்வளத்துறையின் மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு தகவல் சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் போன்றவற்றை உடன் வைத்திடுமாறும் ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவுக்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் அனைத்து படகு உரிமையாளர்கள் அளிக்கப்பட வேண்டும். எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் வெளிப்பொருந்தும் எந்திரங்களின் படகில் பொருத்தியிருக்க வேண்டும்.

    பதிவு செய்யப்பட்டஎந்திரம் பொருத்தப்பட்ட எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளில் பதிவு எண் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். (ஸ்டிக்கர்) கண்டிப்பாக ஒட்டியிருக்க கூடாது.

    படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஆய்வின்போது காண்பிக்கப்படாத படகுகள் மற்றும் பழுதுள்ள படகுகளின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அந்த படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அந்த படகுகளின் பதிவுச்சான்று உரிய விசாரணைக்கு பிறகு ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆய்வு நாளன்று படகை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்ய கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்க படமாட்டாது. நாட்டுப்படகு ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற ஒரு நபர் படகை காண்பிக்க வேண்டும்.

    ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும். மீனவர்கள் ஆய்வு நடைபெறவுள்ள காரணத்தினால் 12.6.2023 இரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது படகுகள் பதிவுச்சான்றில் உள்ள தங்குதளத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும்.
    • போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும்.

    வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30க்குள் விண்ணப்பிக்கவும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள 5 சமையலர் மற்றும் சலவையாளர் போன்ற பணியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகம், தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டையில் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.

    இதுபோல செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாமல்லபுரம், திருப்போரூர் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும ஈஞ்சம்பாக்கம் அரசு புறநகர் ஆஸ்பத்திரியில் 3 பல் மருத்துவ உதவியாளர் தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் விணணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை.
    • தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுள் ஒன்று, மத்திய, அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுபதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன் பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவை. திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவி குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்தவும் திட்ட தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம் இனி வரும் காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற 6, ஏகாம்பரனார் தெரு (புதிய பஸ் நிலைய பின்புறம்), வேதாசலனார் தெரு, செங்கல்பட்டு என்ற முகவரியில் அமைந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
    • அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலகத்தின் மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பின் கீழ் கீழ்காணும் திட்டங்களில் பயன்பெற மீனவ பயனாளி, மீனவ விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீதம் மானியம் ரூ.12 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு அலகுக்கு மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர், மகளிருக்கு 60 சதவீத மானியம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    புதிய மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 0.5 ஹெக்டேருக்கான செலவினமான ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவினத்தில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்புக்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கான செலவினமான ரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    250 முதல் 1000 ச.மீ பரப்புள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் மீன்வளர்ப்பை ஊக்குவித்திட உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகுக்கு (1000 ச.மீட்டருக்கு) ஆகும் செலவினமான ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    எனவே இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை 600115 அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
    • சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    மேற்படி விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்துவரும் நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

    மேற்படி விருதினை பெறுவதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் நலனுக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான சமூக சேவை நிறுவனம் மற்றும் சமூக சேவை புரிந்து வரும் சமூக சேவகர்கள் https://awards.tn.gov.in என்கிற தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் மேற்படி விருதுக்கு விண்ணப்பித்து அதன் நகலுடன் செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் சமூக சேவகர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெற்ற குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று மற்றும் சேவை பற்றி ஆவணங்களை புகைப்படத்துடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்து 30.06.2022 அன்று மாலை 5. மணிக்குள் "மாவட்ட சமூக நல அலுவலகம், (சிஆர்சி) குறுவள மையக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், 85 ஆலப்பாக்கம், செங்கல்பட்டு - 603 003" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
    • காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவகல்லூரி கூட்டரங்கில் 75-வது ஆண்டு சுதந்திர திருநாள் அமுதம் பெருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து கடனுதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மேலாளர் ராஜாராம், செங்கல்பட்டு முன்னோடி வங்கி மேலாளர் சந்தோஷ்குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, மாற்று திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

    கூடுவாஞ்சேரி சாலையில் முதலை வந்ததாக பரவும் வீடியோ குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

    இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்து பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர்  ராகுல் நாத் முதலை வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான வீடியோ தவறானது. சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்.

    ×