search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "certification"

    • மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மத்திய மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதற்கு மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மருத்துவ முகாமை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் செவித்திறன் குறையுடைய மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து செவித்திறன் குறையுடைய மாணவ- மாணவிகள் பஸ், ரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கும், டோல்கேட்டில் செல்லும் போது உடன் செல்பவர்களுக்கு இலவச கட்டணம் ஆகியவற்றிற்கான இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, நிர்வாகி தர்மராஜ், மருத்துவர் அணி நிர்வாகிகள் டாக்டர்கள் சதீஷ், சுரேஷ், ராஜா, விக்னேஷ், பாஷா, ராஜராஜன், காயத்ரி, பிரகாஷ், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்க்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளாார்.
    • முறையான ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப் பித்துள்ள அனைத்து பொது மக்களுக்கும் எவ்வித தாமத மும் இன்றி உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் சான்றிதழ்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவிக்கையில் :-

    இ சேவை மையத்தில் சான்றிதழ் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் முறையாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ சேவை மையத்தில் ஆவணங்களை முறையாக இணையதளங்களில் பதிவு செய்யாததால் எங்களால் தகுந்த ஆவணம் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட முடியவில்லை. இதன் மூலம் பொது மக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்படுகிறது என் பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

    மேலும் இ சேவை மையத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனைத்து ஆவணங்களும் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும். முறையான ஆவணங்கள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இ- சேவை மையத்தில் ஆவணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இ சேவை மையத்தில் முறையாக பதிவு செய்யப் பட்ட விண்ணப்பதாரர் களுக்கு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை 15 நாட்களிலும், முதியோர் உதவித்தொகை சான்றிதழ் பட்டா உட்பிரிவு இனத்திற்கு 30 நாட்களிலும் சான்றிதழ் வழங்கப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அரசு அலுவலர் களை நேரில் சந்தித்து பயன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏதேனும் இடையூறு கள் இருந்தால் நேரடியாகவோ மொபைல் மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

    • பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
    • மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 - 24 ஆம் கல்வியாண்டு இளநிலை பாடப் பிரிவுகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மலா்விழி கூறியதாவது:-

    இக்கல்லூரியில் முதல் சுற்றுக் கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. முதல் நாளில் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பி.ஏ. பொருளியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

    நாளை காலை 9 மணிக்கு பி.எஸ்.ஸி. கணினி அறிவி யல், பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 3 ஆம் தேதி 9 மணிக்கு பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

    இதேபோல, இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 5 முதல் 7 ஆம் தேதி வரையும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூன் 8 முதல் 10 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    இக்கலந்தாய்வுக்கு மாணவிகள் குறித்த நேரத்தில் கட்டாயம் வர வேண்டும். வரும் போது எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்- 1, பிளஸ்- 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான உரிய சான்றிதழ் ஆகியவற்றின் அசல், நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்களை மாணவிகள் எடுத்து வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.
    • பயிற்சியின்போது தினசரி சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தி னால் ஆண்டு தோறும் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

    இந்த பயிற்சி முகாமில் மாணவ-மாணவிகளின் உடல் திறன் மற்றும் விளை யாட்டு திறனை மேம்படுத் தும் பொருட்டு தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளை யாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியின் போது தினசரி சிற்றுண்டி வழங்கப் பட்டது. பயிற்சி முகாமில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 245 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு, கலெக்டர் ஜெயசீலன் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன், ராம்கோ நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், பயிற்றுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.
    • இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பா னங்கள் மற்றும் பழச்சாறு களை அருந்துகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகள் பரவலாக அதி கரித்துள்ளது. இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

    சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம். குளிர்பா னங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொரு ட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக பயன்படுத் தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்க்கக் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி நாளை உறுதிப்படுத்திட வேண்டும்.

    பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய பழங்களையும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களையும் பயன்படுத்தக்கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும். எந்தவிதமான செயற்கை வண்ணங்களையும் இனிப்பு சுவை கூட்ட எவ்வித மான வேதிப்பொருட்களை யும் சேர்க்கக்கூடாது. பழச்சாற்றில் சேர்க்கப்படும் ஐஸ் கட்டிகளை உணவு பாது காப்பு உரிமம் பெற்று பாது காப்பான நீரில் தயாரிக்கப் பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்குதல் வேண்டும். முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கோப்பைக்களில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைக்களில் மட்டுமே வழங்க வேண்டும். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும்போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களின் வாய்ப்புறம் சீலிட்டு மூடி யிருத்தல், காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். இத்த கைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொது மக்களுக்கு தரமான, பாது காப்பான குளிர்பானங்கள், பழச்சாறுகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் உணவு வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொது மக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் இருந்தால் கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு 04142-221081 அல்லது 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்க லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐ.டி.ஐ) சேர்க்கை பெற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களின், தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியா ளர்கள், தங்களது தேசிய தொழிற்சான்றிதழ்களில் பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், போட்டோ, பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், பின்வரும் அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், நாமக்கல் கீரம்பூர், தட்டாங்குட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தேசிய தொழிற்சான்றி தழ்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்க ளுக்கு, கொண்டி செட்டிப்பட்டியில் உள்ள, மாவட்ட திறன் பயற்சி அலு வலக உதவி இயக்குனரை அணுகி கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தார்.
    • தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    தேசிய தரச்சான்று திட்டமானது ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் திட்டம் ஆகும். இத்திட்டமானது சுயமதிப் பீடு, மாநில அரசின் மதிப் பீடு மற்றும் மத்திய அரசின் மதிப்பீட்டை தொடர்ந்து சான்று வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி ஆனையூர் நகர்ப்புற சுகா தார நிலையத்தில் மத்திய அரசின் குழு பேராசிரியர் அரசு மருத்துவமனை (நாசிக்) அபிஷேக் சுபாஷ் கோசாவி மற்றும் மாவட்ட தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் (சூரத்) டாக்டர் மகேந்திர பட்டேல் ஆகிய இருவரால் மதிப்பீடு அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை மாநகராட்சி மஸ்தான்பட்டி மற்றும் முனிச்சாலை ஆகிய 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் (2022 முதல் 2023) பெற்றுள்ளது. மேலும் 2023-2024 ஆண்டில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இக்குழுவினர் மருத்துவ மனையில் உள்ள ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பரா மரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது மேயர் இந்திராணி பொன் வசந்த், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் ஸ்ரீகோதை, மாவட்ட தர மருத்துவ அலு வலர் பொன்பாத்திப்பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்று 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தகவல் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில் மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11, 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்–பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்க–கத்தால் ஆகஸ்ட்-2022-ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந்தேதிக்குள் உரிய விண்ணப்பித்து சமர்ப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.
    • 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சான்றிதழ் வழங்கல்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுயஉதவி கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 22 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலுடன் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவரும், சேரன்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவருமான சேரன்குளம் தி.மனோகரன் வழங்கினார்.

    • சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது.
    • பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தலைமைத்தும் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோர் பயிற்சி கடந்த 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

    பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழினையும், விளையாட்டுக் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்வில், நேரு யுவ கேந்தராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் ராஜகுமார், பொருளாளர் பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பெறப்பட்டது.
    • அச்சான்றிதழை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 454 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து தமிழ்நாடு குடிசை மற்றும் வாரியம் மூலம் வழங்கப்படும் புதிய குடியிருப்புவீட்டினை வாங்குவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலானகா சோலை யினை வழங்கினார்.

    தலைமைச் செயலகத்தில் 2021 -ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுடன் , விருதுத்தொகையாக ரூ.25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆறுமுக சீதாராமனுக்கு, முதல மைச்சர் வழங்கினார்.

    அச்சான்றிதழை அவர் கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.சுகபுத்ரா , கூடுதல் கலெக்ட (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

    பூதலூர்:

    பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா மற்றும் தாளடி‌ நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், நடவு பணிகளுக்கு மழை காரணமாக ஆட்கள் கிடைக்காததாலும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்‌ நடப்பாண்டு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை மறுநாள் (15.11.22) அன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பல கிராமங்களில் வாயல்களை நடவு பணிக்கு ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நாளை மறுநாள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பா மற்றும் தாளடி நடவு செய்த பிறகு சான்றிதழ் வழங்க ப்படும் என்று தெரிவித்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து தர ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×