search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cellphone"

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.
    • தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது என அக்கட்சி புகார் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் வரும் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், தி.மு.க.வினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
    • மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.

    இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசலில் பயணிகள் பஸ்களில் ஏறும்போது செல்போன் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது.
    • 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றினர்.

    தென்காசி:

    தென்காசி பஸ் நிலையங்களில் குற்றால சீசன் நேரத்தில் கூட்ட நெரிசலில் பயணிகள் பஸ்களில் ஏறும்போது செல்போன் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது.

    கணவன்-மனைவி சிக்கினர்

    இந்நிலையில் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தொடர் செல்போன் திருட்டு சம்பந்தமாக தென்காசி குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, போலீசார் பாலமுருகன், முத்துக்குமார், சக்திவேல், சின்னராஜா மற்றும் பெண் போலீஸ் ஜக்கம்மாள்தேவி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த ஒரு பெண்ணையும், அவருடன் நின்றவரையும் பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தென்காசி உடையார் தெருவை சேர்ந்த அமல்ராஜ்(வயது 57) மற்றும் அவரது மனைவி அன்பரசி (45) என்பது தெரிய வந்தது. அவர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொது மக்களிடம் செல்போன்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றினர்.

    • அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை
    • சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம். பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும். நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவதனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும். இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும். சாப்பிடும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம். முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

    * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

    * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

    * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

    * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

    * காலையில் குளிக்கின்றார்களா?

    * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

    * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

    * குறிக்கோள் இருக்க வேண்டும்.

    * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

    * கடினமாய் உழைக்க வேண்டும்.

    * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

    * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

    * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

    ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம். இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

    • பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார்.
    • பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மின் வினி யோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி பாதுகாப்பு வகுப்பு இன்று காலை நடைபெற்றது.

    அதில் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், மின் பாதைகளில் பணிபுரியும் பொழுது மின் விநியோகத்தை நிறுத்தி நில இணைப்பு செய்து அதன் பின்பு பணி புரிவது அவசியம். காற்று திறப்பான்களை திறக்கும் பொழுதும், மூடும் போதும் கையுறையை உபயோகப்படுத்த வேண்டும். பெருமாள் புரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சூறை காற்றாக வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக் கிளைகளை மின்னோட்டத்தை நிறுத்தி அப்புறப்படுத்தி மின் தடங்கல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    மின்கம்பங்களிலும், மின்மாற்றிகளிலும் பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது. அப்படி பேசினால் அதனால் சிந்தனை சிதறல் ஏற்படும். தங்கள் பகுதி மின் நுகர்வோர்களிடம் அந்தந்த பகுதி பணியாளர்கள் தொலைபேசி எண்களையும், மின்னகம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இந்த பாதுகாப்பு வகுப்பில் பெருமாள்புரம் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • சுப்பையா தூத்துக்குடி திரேஸ்புரம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 4-ம் கேட் விஸ்வபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. தச்சு தொழி லாளியான இவர் நள்ளிரவில் வேலை முடிந்து தூத்துக்குடி திரேஸ்புரம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    செல்போன் பறிப்பு

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள், திடீரென அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சுப்பையா வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் தாளமுத்துநகரை சேர்ந்த முத்துராஜ் (20), முத்துராமன்( 19) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் உட்பட 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு வேறு வழிப்பறி சம்பவங் களில் தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன.
    • கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் செல்போன்கள், டி.வி.க்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கடந்த 2 ஆண்டுகளாகவே விலை உயர்ந்து காணப்படுகின்றன.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்தது.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. மேலும் சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கண்டெய்னரில் கொண்டு வருவதற்கான சரக்கு கட்டணம் தற்போது குறைந்துள்ளது. இது ஏற்கனவே கொரோனா தொற்று பரவலின்போது ரூ.6.55 லட்சம் ஆக இருந்தது. இது தற்போது ரூ.69 ஆயிரம் முதல் ரூ.81 ஆயிரம் ஆக குறைந்துள்ளது.

    மேலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்களின் விலையும் 60 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை குறைகிறது.

    இதுதொடர்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்தே வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உதிரி பாகங்கள் விலை குறைந்திருப்பதாலும், சீனாவில் இருந்து பொருட்களை கொண்டு வரும் கண்டெய்னர் கட்டணம் குறைந்திருப்பதாலும் இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் செல்போன், டி.வி., கம்ப்யூட்டர் விலை குறையும். இதன் மூலம் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் ரூ.16,400 ஆக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடந்த நிதியாண்டில் ரூ.11,500 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இது மேலும் குறையும். குறிப்பாக தீபாவளி பண்டிகை முதல் விலை நன்றாக குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தகவல் தொடர்பு வசதி முழுமையாக கிடைக்காததால் சின்னப்பநல்லூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னப்பநல்லூர் கிராமம். இங்கு சுமார் 420 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். 

    இப்பகுதியில் செல்போன் சேவை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை கள் முழுமையாக கிடைக்கா ததால் அப்பகுதி மக்கள் ஆன்லைன் சேவைகள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை மற்றும் இங்கு இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் ஆன்லைன் வகுப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

    அதுமட்டுமல்லாமல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் நிவாரண பொருட்கள், பொங்கல் தொகுப்பு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் இணைய சேவைகள் இல்லாததால் அப்பகுதி கிராமத்திலிருந்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயரமான பகுதிக்கு சென்று செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடும்ப அட்டையை வைத்து ஸ்கேன் செய்து விரல் ரேகைகளை பதிவு செய்த பின்பு அங்கிருந்து மீண்டும் அனைவரும் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்ந்து வருகிறது.

    பெரும்பாலான ஆண்கள்  பணிகளுக்கு வெளியூர்களுக்கு சென்று விடுவதால் வீட்டிலிருக்கும் பெண்கள் திடீரென மருத்துவமனைக்கோ அல்லது பிரசவத்திற்காக செல்வதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர சேவைகளுக்காக யாரை யேனும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அப்பகுதியில் இருந்து உடனடியாக தொடர்பு கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. 
    இந்த நிலையிலிருந்து இப்பகுதி கிராம மக்கள் மீள்வதற்காக தொலைத்தொடர்பு வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
    அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.
    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

    வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது கண்களை கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.

    அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில் குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும். முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதேபோல் டி.வி. அதிகநேரம் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதை தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக அமர்ந்து கொண்டு செல்போனை கையில் வைத்து கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதை தவிப்பது நல்லது.
    இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
    உலகின் 10  பகுதிகளில் உள்ள பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நடத்தப்பட்ட (மெக்காஃபி. )McAfee ஆய்வில், இந்தியக் குழந்தைகள் இளைவயதிலேயே  மொபைல் பயனபடுத்தும் அறிவை அடைகிறார்கள் என தெரியவந்து உள்ளது.

    ஆய்வின்படி, இந்தியாவில்  10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட  7 சதவீதம் ஆகும்  அதிகம்.

    இது இந்தியாவில்  குழந்தைகளை ஆன்லைன்  ஆபாயங்களுக்கு அதிகமாக உட்படுத்த வழிவகுத்தது.மேலும், சில 22 சதவீத இந்திய குழந்தைகள் இணைய அபாயத்தை  அனுபவித்துள்ளனர், இது உலகளாவிய சராசரியான 17 சதவீதத்தை விட 5 சதவீதம்  அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உலகளவில் 90 சத்வீத  பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாவலர்களாக தங்கள் பங்கை ஒப்புகொண்டு உள்ளனர்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 56 சதவீதம்  பேர் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பார்ஸ்வேர்டையும் 42 சதவீதம்  பேர் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பாஸ்வேர்டையும் பயன்படுத்துகிறார்கள்.

    இந்தியப் பெற்றோர்களிடையே இணைய அச்சுறுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் பற்றிய கவலை  47 சதவீதமாக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 57 சதவீதத்தை  விட 10 சத்வீதம்  குறைவாகும்.

    மேலும், ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம்  அதிகம்
    என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து மெக்காஃபி மார்க்கெட்டிங் துணைத் தலைவர் சச்சின் பூரி கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், அவர்களது இணைக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ள ஆன்லைன் பாதுகாவலர்களாக வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவை பெற்றோருக்கு வழங்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.
    வடமாநில வாலிபரை தாக்கி செல்போன் பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    மதுரை

    மதுரை நகரில் அண்மை காலமாக தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து பணம், நகை பறித்துச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த செயல்களில் பெரும்பாலும் இளம் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூபேஸ்குமார் (வயது 24). இவர் மதுரை பழங்காநத்தம் ரோட்டில் தங்கியிருந்து வெல்டிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு பூபேஸ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

    டி.வி.எஸ். நகர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென பூபேஸ்குமாரை வாகனத்தால் மோதச் செய்தனர். பின்னர் அந்த கும்பல் அவரை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு சென்றது. 

    கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த பூபேஸ்குமார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 

    இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலநாதன், பன்னீர் செல்வம் மற்றும் ஜெகதீசன், சுந்தரம், அன்பழகன், இதயச்சந்தி ரன்,  கணேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 

    இவர்கள் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில், வடமாநில வாலிபரை தாக்கிய நபர்கள் மற்றும் அவர்களது மோட்டார் சைக்கிள் வாகன எண் பதிவாகி இருந்தது. 

    இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது பழங்காநத்தம் தண்டல்காரன்பட்டி, திரிசூல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த  ெபான்னுச்சாமி மகன் சூர்யா (18), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதில் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். தலைமறை வாகன உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். 
    ×