search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cattle"

    • கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார்.
    • மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.

    இவைகளை சாப்பிடுவதற்காக கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான எறுமை மாடுகள் மார்க்கெட்டுக்கு படையெடுக்கின்றன. இப்படி வரும் நூற்றுக்கணக்கான மாடுகளால் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. இப்படி பிடிக்கப்படும் மாடுகளை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அங்காடி நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, "கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது. அதுபோன்று அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு முதல்முறை அபராதம் விதிக்கப்படும்

    2-வது முறையாக பிடிபடும் மாடுகளை உரிமை யாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கமாட்டோம். அந்த மாடுகள் நிச்சயமாக ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை இனி மார்க்கெட் பகுதிக்கு வர விடமாட்டோம் என்று அதிகாரிகளிடம் உறுதி அளித்து எழுதி கொடுத்துள்ளனர்.

    இருப்பினும் மாடுகள் நடமாட்டத்தை கேமரா மூலமாக அங்காடி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி மார்க்கெட்டுக்குள் வரும் மாடுகளை பிடிக்க ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கயிறு மற்றும் தடியுடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுற்றி வருகிறார்கள்.

    • குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
    • சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் குறிப்பாக வடக்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் கோவை காலநிலை ஆராய்ச்சி மைய அறிக்கைப்படி, இந்த வாரம் திருப்பூரில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்சம் 31 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 100 சதவீதம், மாலை நேரம், 92 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால் போதியளவு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விவசாய நிலங்களில் நீர்பாசனம் மற்றும் மருந்து தெளிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும். மழைக்காலமாக இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த வெப்ப நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய கதகதப்பு ஏற்படுத்துவதுடன் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவு றுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகள் சுற்றி திரிகிறது.
    • இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லவும், அபராத தொகை விதிக்கவும் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாடுகளின் உரிமைதாரர்களுக்கு அபராத தொகையாக முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.3000- மற்றும் கன்று ஒன்றுக்கு ரூ.1500, இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.4000, கன்று ஒன்றுக்கு ரூ.2000, மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் அதன் அபராத தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.2500 வசூலிக்கப்பட்டு வந்தது.

    இதுநாள் வரை 43 மாடுகள், 42 கன்றுகள் பிடித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாநகராட்சியில் தொடர்ந்து சாலையோரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிப்பதற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதினால் முதல்முறை பிடிபடும் மாடு ஒன்றுக்கு அபராதம் ரூ.5000, கன்று ஒன்றுக்கு ரூ.1500 வசூலி க்கப்படும்.

    இரண்டாவது முறை அதே மாடு பிடிக்கப்படும் நிலையில் ரூ.10000-ம் கன்று ஒன்றுக்கு ரூ.5000 வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15000, கன்று ஒன்றுக்கு ரூ.10000 வசூலிக்கப்படும்.

    நான்காவது முறை அதே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் கோசாலைக்கு அனுப்பப்படும்.

    எனவே கால்நடை உரிமைதாரர்கள் தங்கள் கால்நடைகளை தங்களுக்கு உரிய இடத்தில் பராமரித்து, பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பைபாஸ் சாலையில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • கால்நடைகளை வீட்டில் கட்டி வைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெற்பயிர்கள் மற்றும் தானிய வகை பயிர்களை விளைவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வயல் பகுதிகளில் மேய்ந்த கால்நடைகளை பிடித்து கொண்டு விவசாயிகள் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகள் கால்நடைகள் விவசாய பயிர்களை சேதபடுத்தி வருகிறது.

    எனவே கால்நடைகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் தரப்பில் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    பின்னர் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,

    மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

    மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.

    • திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
    • தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது.

    முத்தூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால் உயிரிழப்பும் நேரிடும். கோமாரி நோய் குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல், சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் ஆகியவற்றால் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

    இந்த நோய்களுக்கான அறிகுறிகளானது கால்நடைகளுக்கு காய்ச்சல் வரும், மந்த நிலையில் தீவனம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ்நீர் வரும். சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும். குறிப்பாக இந்நோய் மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும். இதனால் மழை காலம் தொடங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், முகாம் அமைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவார்கள். இதனால் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.

    இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து காங்கயம் அரசு கால்நடைதுறை மருத்துவ மனையை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன் அறிவுரைப்படி நேற்று காங்கயம் ஒன்றியத்தில் 7 இடங்களில் முகாம் அமைத்து மாடு, எருமை உள்ளிட்ட 1050-கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதி கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • சாலையில் திரியும் கால்நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அரசரடி சந்திப் பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவ தால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வ தற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.

    இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரைய ரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங் கள் இருப்பதால் மற்ற சாலைகளை விட இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காண்பபடுகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து பெரியார், திருமங் கலம், விரகனூர் சுற்றுச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த சாலை எப்போதும் வாகனங் களால் பரபரப்பாக காணப் படும்.

    இந்த நிலையில் ஞான ஒளிவுபுரம் சாலைகளில் கேட்பாரற்று திரியும் கால் நடைகளால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல் பவர்கள், இருசக்கர வாக னங்களில் போவோர் அவதி யடைந்து வருகின்றனர். சாலையின் குறுக்கே கால் நடைகள் நடப்பதால் சாலை யின் இடது புறம் செலவதா அல்லது வலது புறம் கால் நடைகளை முந்தி செல் வதா? என செய்வதறியாது வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

    இதே போன்று மதுரை நகரில் 4 மாசி வீதிகள், காம ராஜர் சாலை, வெளிவீதிகள், ரெயில்நிலையம், தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, அரசரடி, வெள்ளைபிள்ளை யார் கோவில் தெரு, மகபூப் பாளையம், ஆனையூர், கூடல்நகர், கூடல்புதூர், பி.பி. குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாடுகள் ரோட்டில் விடப்படுகிறது. அவைகள் சாலையில் அமர்வதால் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சில சமயம் மாடுகளால் பொது மக்கள் பல இன்னல் களை சந்திக் கின்றனர். மேலும் சாணம் உள்ளிட்ட கழிவுகளால் சுகா தார சீர்கேடும் ஏற்டுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை யில் பள்ளி சென்ற குழந்தை மீது கால் நடைகள் தாக்கியதில் காய மடைந்த மாணவி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது. அதே போன்று சம்பவம் நடக்கும் முன்னரே மாநக ராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டால் பெரும் விபத் தினை தவிர்க்கலாம். எனவே இனியும் மாநக ராட்சி அதிகாரிகள் மெத்த னம் காட்டாமல் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கவும் அவற்றின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    • 14 மாடு, கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது.
    • கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.2ஆயிரம், கன்றுக்கு ரூ.1000 அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி பிரதான வீதிகளில் மாடுகள் அதிகளவு சுற்றிதிரிந்ததால் போக்கு வரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டுவந்தது.

    சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்திட பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் அறிவுறுத்தலி ன்படி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

    அதன்படி சுமார் 14 மாடு,கன்றுகள் பிடிக்கப்பட்டு அவை நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தது. கால்நடை உரிமையாளர்கள் மாட்டிற்கு 2ஆயிரமும், கன்றுக்கு ரூ.ஆயிரம் என தங்களது மாடுகளை அபராதம் செலுத்தி மீட்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் கால்நடை உரிமையாளர்கள் இதுவரை வந்து உரிமைக்கோரி மீட்கப்படாத 1காளை கன்றுக்குட்டி உள்ளிட்ட 4 கன்றுகளை நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் தனி வாகனத்தில் ஏற்றி பாதுகாப்புடன் மயிலாடுதுறை கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
    • இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    உடுமலை:

    உடுமலை அன்னபூரணி லேஅவுட் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும் இந்த பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகள் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அவல நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×