search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cancer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார்.

    இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்த பிரபல நடிகையான டோலிசோஹி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் டோலி சோஹி சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். 'கலாஷ்', 'ஹிட்லர் திதி', 'டெவோன் கே தேவ் மகாதேவ்', 'ஜனக்' போன்ற பல டிவி நிகழ்ச்சிகளில் இவர் நடித்துள்ளார்.


    அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. டோலி சோஹியின் சகோதரியும் நடிகையுமான அமந்தீப் சோஹி மஞ்சள் காமாலை பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அடுத்த நாளே டோலிசோஹி மரணம் அடைந்திருப்பது இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சோம்நாத் அறிவிப்பு.
    • சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு சிசிச்சை.

    ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்படுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

    சந்தியான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்து 5ம் நாளிலேயே சோம்நாத் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மகேந்திரகிரியில் நடைபெற்ற இஸ்ரோ மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், சோம்நாத் பங்கேற்றிருந்தார்.

    • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
    • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

    உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

    உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

    ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

    கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

    பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

    "ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

    சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

    "பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

    வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

    • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
    • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • இந்தியாவில் 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
    • பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த நாடான இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிறு புற்றுநோய் ஆகிய 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.

    நம் நாட்டில் 9 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களில் 68 பேரில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    நம் நாட்டில் உத்தரபிரதேசத்தில்தான் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 2 லட்சம் பேருக்கு இந்த நோய் ஏற்பட்டது.

    இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேரை புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரும், பீகாரில் ஒரு லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் பாதிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த வரிசை மாறுகிறது.

    அதாவது இந்த பட்டியலில் கேரளாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 1 லட்சம் பேரில் 135 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 1 லட்சம் பேரில் 122 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.

    இந்த பட்டியலில் டெல்லி (103 பேர்) 3-வது இடத்திலும், கர்நாடகம் (102 பேர்) 4-வது இடத்திலும், கோவா (97 பேர்) 6-வது இடத்திலும், இமாசலபிரதேசம் (92 பேர்) 7-வது இடத்திலும், உத்தரகாண்ட் (91 பேர்) 8-வது இடத்திலும், அசாம் (90) பேர்) 9-வது இடத்திலும், பஞ்சாப் (89 பேர்) 10-வது இடத்திலும் உள்ளன.

    • விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.
    • குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    உலகம்முழுவதும் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். ஆறு மரணங்களில் ஒரு மரணம் புற்றுநோயால் ஏற்படுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை பரப்புவதும் இதில் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், விழிப்புணர்வுகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.


     

    ஆரம்பநிலையில் இந்த நோயை கண்டறிதலையும் சிகிச்சைகள்மூலம் புற்றுநோயை குணப்படுத்துதலை அதிகரிக்கவும் 2008-ம் ஆண்டு முதல் பிப்- 4 ந்தேதி 'உலக புற்றுநோய் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

    புற்றுநோய் இறப்பு விகிதத்தை, புற்றுநோய்த் தாக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், பூங்காக்கள், சமூகக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், தெருக்களிலும் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பல முயற்சிகள் உலக புற்றுநோய் நாளில் நடத்தப்படுகின்றன. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு தைரியத்தை ஊட்டுவதற்காக சிகையலங்காரம் செய்பவர்கள் பலர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர்.

    உடலின் செல்கள், ஜீன்களில் ஏற்படும் மரபுவழி கோளாறு மற்றும் உடலில் ஏற்படும் பல விளைவுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது.


     

    போதை பாக்குகள், புகையிலை, சிகரெட், மதுப்பழக்கத்தை கைவிட்டு புற்றுநோய் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதனால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். புற்றுநோய் வராமல் காப்பது நம் அனைவரது கடமை ஆகும்.

    புற்றுநோயைத் தடுப்பது மற்றும் கண்டறிதல், சிகிச்சையில் பிரமிக்க தக்க வகையிலான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலக புற்றுநோய் தினத்தின் 'கருப்பொருள்' புற்றுநோய்க்கு முன்னுரிமை அளிப்பதாகும். புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

    • சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
    • சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இளைய மகள் அக்ஷரா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

    சுரேஷ் சுமை தூக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேசுக்கு தொண்டை புற்றுநோய் பாதித்தது.

    அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்ததால் உடனடியாக பாம்பாடியில் உள்ள தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக அங்கேயே உள்நோயாளியாக சிகச்சை பெற்று வருகிறார். சுரேசை அவரது மனைவி சுனிதா உடனிருந்து கவனித்து வருகிறார்.

    சுரேஷ் புற்றுநோய் பாதித்து படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது குடும்பத்திற்கு வருமானம் இல்லாமல் போனது. இதனால் அவரது மூத்த மகன் பிளஸ்-2 படித்து முடித்தவுடன் வெல்டிங் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் சம்பாதிக்கும் பணத்தின் மூலமாகவே சுரேசின் குடும்பம் பிழைத்து வருகிறது.

    சுரேஷ் படுத்த படுக்கையாகி விட்டதால், அவரது மனைவி அவருடனேயே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களது இளைய மகள் அக்ஷரா பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

    தந்தையின் மீது மிகவும் பாசம் வைத்திருக்கும் அவர், சுரேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அங்கேயே இருந்து வருகிறார். தந்தைக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை நேரம் தவறாமல் அவரே வழங்கி வருகிறார். தொண்டை புற்றுநோய் பாதிப்பு காரணமாக சுரேசால் பேச முடியாது.

    இதனால் அவர் கூற நினைப்பதை பேப்பரில் எழுதி காண்பிப்பார். அதனை சிறுமி பார்த்து தந்தை கூறுவதை செய்தபடி இருக்கிறார். சிறுமி ஒருவர் தந்தையை பொறுப்பாக கவனித்து வருவதை அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்றவர்கள் வியந்து பார்க்கிறார்கள்.

    தந்தையை உடனிருந்து கவனித்தாலும் படிப்பையும் சிறுமியால் மறக்க முடியவில்லை. இதனால் தந்தை சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் உள்ள நூலகத்துக்கு சென்று வந்தார். மேலும் அங்கிருந்து புத்தகங்களை எடுத்துவந்து தந்தையுடன் உள்ள தனது தாய்க்கு கொடுத்து படிக்க செய்திருக்கிறார்.

    பள்ளி படிக்க வேண்டிய ஒரு சிறுமி, பள்ளிக்கு செல்ல முடியாமல் தந்தைக்கு சேவை செய்து வருவது பற்றிய தகவல் சில சிறுவர்கள் மூலமாக மருத்துவமனையில் நூலகம் அமைத்திருந்த பள்ளியின் நல்லபாடம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தெரியவந்தது.

    அவர்களின் மூலமாக சிறுமி அக்ஷரா பற்றிய விவரம் தற்போது வெளியுலகுக்கு தெரியவந்திருக்கிறது. சுரேசின் மருத்துவ செலவுக்கே அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூத்த மகன் மற்றும் தினக் கூலிகளாக பணிபுரியும் தனது தோழிகள் கொடுக்கும் பணத்தை வைத்தே கணவரின் மருத்துவ செலவுகளை சுனிதா செய்து வருகிறார்.

    இந்நிலையில் படிப்பில் ஆர்வமாக உள்ள மகளை எவ்வாறு பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

    • ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும்.
    • இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழி அதிகமாக சாப்பிடுவதால் ஆண்களுக்கு புரோஸ்டெட் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும். வறுத்த கோழிகளை சாப்பிடும் போது உடலுக்கும் கெடுதல்களை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.

    பிராய்லர் கோழிகள் விரைவில் வளர்ச்சி அடைய அதற்கு தீவனமாக ஹார்மோன்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் நிறைந்த பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடும் போது உடல் எடை அதிகரித்து உடல்நல பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறது.

    பிராய்லர் கோழியில் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கள் உள்ளன. இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடலில் கொழுப்புகள் அதிகரித்து இதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    பிராய்லர் கோழியில் உள்ள ரசாயனம் ஆண்களின் விந்தணுவை குறைத்து மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் பிராய்லர் கோழியை தவிர்ப்பது நல்லது. பெண்களும் பிராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் தான் பெண்குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைகின்றனர். பிராய்லர் கோழியை வறுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் அதிக எண்ணெய் இல்லாமல் சமைத்து சாப்பிடலாம்.

    குறைந்த பட்சம் 165 வெப்பநிலையில் இறைச்சியை சமைக்க வேண்டும். மேலும் பிராய்லர் கோழியில் சமைத்த உணவை மறுநாள் வைத்து சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

    • பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
    • தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

    விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

    பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.

     2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.

    இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.

     நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

     இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

    • 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது.

    உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' யானை உயிரிழந்தது. அந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மாலி யானைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது. பிரேத பரிசோதனையில் யானைக்கு கணைய புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மாலி யானை தனது வாழ்நாளில் பெரும்பகுதியை தனியாகவே கழித்தது.

    மாலி யானை பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இமெல்டா மார்கோஸுக்கு 1981-ம் ஆண்டு 11 மாத குழந்தையாக இருந்தபோது இலங்கை அரசால்பரிசாக வழங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் 1990-ம் ஆண்டு ஷிவா என்ற யானை உயிரிழந்ததிலிருந்து மாலி யானை மட்டுமே இருந்தது. மணிலா மேயர் ஹனி லகுனா கூறும்போது மாலி எங்கள் மதிப்புமிக்க உடைமை மற்றும் மணிலா மிருகக்காட்சி சாலையில் நட்சத்திர ஈர்ப்பாக இருந்தது. அவள் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்ததால் அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

    ×