search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    • ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
    • எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

    எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

    இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட் டில் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாச றைக்கூட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுதா.கே.பரமசிவன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதா வது:-

    புரட்சித்தலைவி அம்மா தேசியம் கடந்து உலக மக்கள் அனைவரும் நேசிக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கியவர். ஏழை, எளிய மக்களை நேசித்து அவர்களின் வாழ்வு வளம் பெற செய்தவர். சாதி, மதம் மொழி கடந்து மக்கள் அனை வராலும் நேசிக்கப்படக்கூடிய திறம்பட ஆட்சியை நடத்தியவர்.

    அவரது வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கழகத்தின் கடைநிலை ஊழியராய் வந்து கழகத்தின் பொதுச்செயலா ளராக உருவாகிக்கிறார் என் றால் அவர் கொண்ட விசுவா சமும், உறுதிமிக்க கொள்கையும் தான் காரணம். கழக பொதுச் செயலாளர் எடப்படாடியார் அனைத்தையும் அறிந்தவர். அவரை யாரும் ஏமாற்றவோ, அச்சுறுத்தவோ முடியாது.

    ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க கூடியவர் எடப்பாடியார் மட்டும் தான். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். காவிரி, முல்லை பெரி யாறு அணைகள் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையே நிலைநாட்டியது அம்மா தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

    ஏழை, எளிய மக்களுக்கும், அன்றாடம் பசியில் வாடுவோ ருக்கும் அம்மா ஏற்படுத்திய நல்ல பல திட்டங்கள் அனைத் தும் வரும் தேர்தலில் நமக்கு வாக்குகளாக மாறும். மேலும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள் ஆகியோர்களின் தேவைகளுக்கேற்ப நமது பொதுச் செயலாளர் பார்த்து பார்த்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

    வரும் தலைமுறையினரின் நோக்கங்களையும், எதிர்பார்ப் புகளையும் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நிச்சயம் செய்து தருவார். நாம் பூத் கமிட்டி தெளிவாக அமைப்பதன் மூலம் அதிக உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கழக ஆட்சி மலர நாம் வழி வகுக்கலாம்.

    இனி மேலும் தி.மு.க. தலை வர் ஸ்டாலினை நம்புவதை விட்டுவிட்டு நாம் சந்திக்கும் நாளைய நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    சமூக விரோதிகள்

    கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு சமூகம் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒரு சில சமூக விரோதிகள் இரு தரப்பினர் மோதல் கொள்ளும் வகையில் இந்த வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு செய்கிறார்கள் என்றனர். மேலும் வதந்திகளுக்கு இடம் அளிக்காமல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தரவும் பொதுமக்கள் உறுதி அளித்தனர்.

    ஒத்துழைப்பு

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுத்தவர்களின் பெயர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பொதுமக்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், சிறுநல்லி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இரு சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு பாக முகவர்களுக்கான குறிப்பேடு, படிவங்களை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி காந்தி ரோட்டில் உள்ள சண்முக விலாஸ் திருமண மண்டபத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி, வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகன் சாமிநாதன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சிவகிரி விக்னேஷ் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சதீஷ், அயலக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தேர்தல் பணி பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரமகுரு சிறப்பு உரையாற்றி பாக முகவர்களுக்கான குறிப்பேடு மற்றும் படிவங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் புல்லட் கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியராஜ், பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், அருணா தேவி பாலசுப்பிரமணியன், தேவிபட்டணம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மாடசாமி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் உச்சிப்புளியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழக முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் வழிகாட்டுதலின் பேரில் மண்டபம் கிழக்கு ஒன்றியம் சார்பில் வருகின்ற 2024 நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிமாரி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நொச்சி ஊரணி முனியசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்லாம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவா வரவேற் றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சீனிமாரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வரு கின்ற 2024 நாடாளு மன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று ஆதரிக்கும் அணியின் வேட்பாளர் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று பேசினார்.

    தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    • தினமும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
    • கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தீபாவளி பண்டிகையொட்டி 13-வது வார்டுக்கு உட்பட்ட தேர் வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக சாலை யோரக டைகள் அமைக்க ப்படுவது வழக்கம்.அதன்படி நிகழாண்டு சாலையோர கடைகள் அமைக்கப்ப ட்டுவருகிறது. இதனிடையே சாலையோர கடை வியா பாரிகளுடனான ஆலோ சனைக்கூட்டம் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், சீர்காழி அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் பாபு.கே.விஜயன் முன்னிலை வகித்தனர்.இதில் தகர கொட்டகை அமைத்து தற்காலிக கடை அமைத்துக்கொள்வது, நாள்தோறும் சேரும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் பெரிய நெகிழி பையில் வைத்து கடை உரிமையாளர்களே தூய்மைபணியாளர்களிடம் வழங்கிடுவது, கடைக்கு நகராட்சிக்கு மட்டும் உரிய தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. இந்த கூட்டத்தில் சாலையோர கடை உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையாளர் சுந்தரவல்லி தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4,5,18,19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியான எவரும் விடுபட்டு விடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.
    • வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்க ளுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. வருகிற 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் வாக்குசாவடி முகவர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவ லர்கள் பலர் பங்கேற்றனர்.

    • டிசம்பர் 9-ந்தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.
    • சரத்குமாருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லையில் வருகிற டிசம்பர் 9-ந்தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத் குமார் கலந்து கொள்கிறார். நெல்லை வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் செங் குளம் கணேசன், இளை ஞரணி துணை செயலாளர் குரூஸ் திவாகர், மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்திகுமார், மாநில மாணவர் அணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி, கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் அமலன், விவசாய அணி துணை செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முடிவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெபஸ்டின் நன்றி கூறி னார்.

    இதில் மாவட்ட செயலா ளர்கள் தங்கராஜ், அரசன் பொன்ராஜ், வில்சன், தயாளன், பாஸ்கரன், ஜெய ராஜ், ஸ்டார்வின் தாஸ், பாபு, பிரபு, சிவஞான குரு நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட செயலாளர்கள், பாராளு மன்ற, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், நகராட்சி, பகுதி செயலாளர்கள், அணி செய லாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளா னோர் கலந்து கொண்டனர்.

    • பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், நெல்லை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கங்கை வசந்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், திருத்து சின்னத்துரை, வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ், கவுன்சிலர் சந்திரசேகர், வட்ட செயலாளர் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் சம்சு சுல்தான், மணி, நத்தம் வெள்ளப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×