search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress demonstration"

    • தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.

    வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், டி.சி.டி.யு. மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொதுச்செயலாளர் நம்பிசங்கர், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், வர்த்தக பிரிவு செயலாளர் நேரு, தெற்கு மண்டல பொதுச்செயலாளர் தனசேகர், மாப்பிள்ளையூரணி பரமசிவன், சேகர், சேக்ஸ்பியர், தெர்மல் முத்து, நாராயணன், அழகு, பாலகிருஷ்ணன், அமைப்பு தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, பாலசுப்ரமணியன், பேரையா, தனபால், காமாட்சி தனபால், எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு ஜேசுதாசன், மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், உமா மகேஸ்வரி, சிவாஜி விஜயா, செல்வம், அல்போன்ஸ், சுரேஷ்குமார், ஜான் வெஸ்லி, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துராஜா, முத்துராஜ், ராஜ்குமார், ஜெயபால், ஜோதி ராமலிங்கம், மாரியப்பன், முத்து மாலா, சுமித்ரா, குணசீலி, சோனியா ஐ.என்.டி.யு.சி.யை சேர்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கவுதம், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னரை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காங்கிரசார், அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு தமிழக கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அவர் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜம்பு ஜவகர்பால் மஞ்சு மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தக்கோலம் காங்கிரஸ் தலைவர் காந்தி எட்வின் ராஜ் பரிதா உலகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி நடைபெற்றது

    கரூர்:

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் மெய்ஞானமூர்த்தி தலைமையில், ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியன், கரூர் மாநகராட்சி உறுப்பினர் ஸ்டீபன்பாபு, கரூர் நகரத்தலைவர் பெரியசாமி, முன்னாள் நகரத்தலைவர் சுப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். குளித்தலை, அரவக்குறிச்சி, தரகம்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

    • காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்றது

    திருச்சி:

    அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ராகுல் காந்தி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு மாவட்டத் தலைவர் ஜவஹர் முன்னிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன்,மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் இளங்கோ, வக்கீல் சரவணன், கவுன்சிலர்கள் சுஜாதா. சோபியா விமலா ராணி, பேட்ரிக் ராஜ்குமார், ராஜா டேனியல் ராய், சரவண சுந்தர், ஜி கே முரளி ராஜலிங்கம், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ரவி ஜெரால்டு, ராஜ்மோகன், ஆனந்தராஜ் ,

    மாவட்ட துணைத்தலைவர்கள் கிரேசி ஜார்ஜ், மகேந்திரன்,முரளி சார்லஸ் மெய்யநாதன்,சிக்கல் சண்முகம் , மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா,உறையூர் எத்திராஜூ அண்ணாசிலை விக்டர் மணிவேல், அரியமங்கலம் சக்திவேல், தாரநல்லூர் மாணிக்கவாசகம், உய்யகொண்டான் திருமலை பாஸ்கர், மலைக்கோட்டை சேகர் ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், பட்டேல், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவி ஜோதி பிரியங்கா

    பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை பட்டதாரி அணி பிரிவு தலைவர் ரியாஸ், மீனவர் காங்கிரஸ் தனபால், மகளிர் அணி ஷீலா செல்ஸ், கோகிலா, வசந்தி, விஜயலட்சுமி, ரோஸி, வக்கீல் வனஜா. ஜெனித்தா மேரி,ரேணுகா, மகா கனக ஜோதி சந்திரா, ராதா தீபா ஸ்டெல்லா, மலர் வெங்கடேஷ், பிரியங்கா பட்டேல், அல்லூர் எழிலரசன்,அன்பில் ராஜேந்திரன். சரோஜாதேவி, ரகமத்துல்லா, நல்லுசாமி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் அரியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட  இ.காங்கிரஸ் சார்பில் பணமதிப்பு இழப்பீட்டை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

    இதில்  மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரதலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர் தியாகராஜன், கர்ணன், திருமானூர் பாண்டியராஜன், சீமான் மூப்பனார், தா.பழுர் சக்ரவர்த்தி, மாரிமுத்து, ஜெயங்கொண்டம் செங்குட்டுவன், நகரதலைவர் ஜாக்சன், ஆண்டிமடம் கொடியரசு, மாசிலாமணி, செந்துறை கொளஞ்சிநாதன், உடையார்பாளையம் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் மனோகரன், தொழிற்சங்கம்  சிவக்குமார், சேவாதளம் சிவா, மகிளா காங்கிரஸ் சின்ன பொண்ணு, மாரியம்மாள், தமிழரசி, தொகுதி தலைவர் திருநாவுக்கரசு  உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். 

    அனுமதியை மீறி மறியலில் ஈடுபட்டதால் 50 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #congressdemonstratin
    திண்டுக்கல்:

    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் இன்னும் துன்பப்பட்டு வருவதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் நாகல்நகரில் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் அரபுமுகமது, சிவாஜி, ராஜாஜி, சீனிவாசன், காஜா மைதீன், அஜித், அப்துல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நாளை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். #congressdemonstratin
    ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் குமரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #congressdemonstration

    குழித்துறை:

    ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரியும் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    களியக்காவிளை சந்திப்பில் ஏராளமான காங் கிரஸ் கட்சியினர் குவிந்தனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், வசந்தகுமார், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது. இதில் இளைஞர் காங்கிரஸ்மாநில தலைவர் ஹசன் ஆரூண், இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜெபி, இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா, இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திவாகர், கிழக்கு மாவட்ட தலைவர் தேவ், லாரன்ஸ், கிறிஸ்டல் ராஜ், ரமணி, பாடகர் முருகானந்தம் உள்பட கலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக ஊரம்பில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ஸ்ரீனிவாசுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில ஊடக பிரிவு செயலாளரும், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவருமான டாக்டர் அனிதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்ரீனி வாசுக்கு ஆளுயர மாலை அணிவித்து மலர் கிரீடம் கொடுத்து டாக்டர் அனிதா வரவேற்றார். மேலும் சிலம்பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #congressdemonstration

    வில்லுக்குறியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இரணியல்:

    இரணியலை அடுத்த வில்லுக்குறி சந்திப்பில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்தார். 

    விஜய், அருள்ராஜ், ஆஸ்கர் பிரடி, வின்ஸ் எல்ஜின், ஜெரால்டு கென்னடி, ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. அனுமதியின்றி போராட்டம் நடை பெற்றதால் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    புதுவையில் வருகிற 15-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4½ ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு நாட்டு மக்களை இன்றுவரை ஏமாற்றி வருகிறது. திட்டமிட்டு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகிறது.

    ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்காக ரபேல் போர் விமானம் வாங்க மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளிப்படை தன்மையுடன் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது.

    ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தங்களின் சுய லாபத்திற்காக ஒப்பந்தங்களை மாற்றி ரபேல் போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க தன்னிச்சையாக முடி வெடுத்தது. இதன் மூலம் 41,000 கோடி இமாலய ஊழல் செய்து லஞ்சம் பெற்று மோடி நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார்.

    பொய்யையும் புரட்டையும் கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.வினர் பகல் கனவு காண்கிறார்கள். இவர்களின் போலி முகத்திரையை கிழித்து எறியவும், மோடி செய்த இமாலய ஊழலை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தவும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் புதுவை வெங்கட சுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற இருக்கிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும் புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4 மணியளவில் காரைக்கால் மாவட்ட செயல்வீரர் கூட்டதிலும் முகுல் வாஸ்னிக் கலந்து கொள்கிறார்.

    நாட்டின் வளர்ச்சியையும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் சீரழித்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சிக்கு களைப் பறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பி.சி.சி. உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், சேவாதளம்.

    மிகவும் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு, தாழ்த்தப் பட்டோர் பிரிவு, சிறு பான்மையினர் பிரிவு, வக்கீல் பிரிவு, விவசாய பிரிவு, ஊடக பிரிவு, மீனவர் காங்கிரஸ், தொழிலாளர் பிரிவு, தலைவர்களும், நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியில் தவறாமல் பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங் கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறி உள்ளார். ##congress

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ் குமார் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஏ.டி.எஸ். அருள், நிர்வாகிகள் செல்வராஜ், மைதீன், காமராஜ், சுப்பிரமணியன், ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், வக்கீல் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், அருணகிரி, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    முடிவில் நகர தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.
    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோவை:

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். கவிதா, சரவணகுமார் மற்றும் வீனஸ்மணி, கே.பி.எஸ். மணி, மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் உமாபதி, துளசிராஜ், குருசாமி, சவுந்திரகுமார், இஸ்மத், கருணாகரன், குறிச்சி வசந்த், கு.பே. துரை, வக்கீல் கருப்பசாமி, கோவை போஸ், லாலிரோடு செல்வம், ராமநாகராஜ், ஆனந்தன், உமாமகேஸ்வரி, திலகவதி, ராமசாமி, காட்டூர் சோமு, எம்.எஸ். பார்த்தீபன், ஜனார்த்தனன், இஸ்மாயில், ரகுமத்துல்லா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×