search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bumrah"

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
    • யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.

    புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு பிளாண்டர் கூறினார்.

    • டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
    • நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.

    1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா 357 ரன்கள் குவித்தது
    • இலங்கை 55 ரன்களில் சுருண்டது

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 55 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது.

    358 ரன் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பும்ரா போட்டியின் முதல் பந்தை வீசினார். இந்த பந்தில் இலங்கை பேட்ஸ்மேன் நிசாங்காவை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். நிசாங்கா ரிவ்யூ எடுத்தும் பயனில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே பும்ரா விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதன்மூலம் 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில், முதன்முறையாக ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதற்கு முன் எந்த பந்து வீச்சாளரும் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (88), சுப்மன் கில் (92) ஆகியோர் சதத்தை தவறவிட்டனர்.

    • வாசிம் அக்ரம், மெக்ராத் உடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது
    • பும்ரா சிறந்த பவுலர் இல்லை என ஒருபோதும் நான் சொல்லவில்லை

    இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் 10 விக்கெட்டிற்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளார்.

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய வேகப்பந்து வீச்சு குழுவை வழி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் அப்துல் ரசாக். சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், மெக்ராத் உள்ளிட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தவர்.

    இவரிடம், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து கடந்த 2019-ம் ஆண்டு கேள்வி கேட்கப்பட்டது, டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளார். தற்போது 4 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையில் பும்ரா சிறப்பாக விளையாடி வரும் நிலையில், அப்துல் ரசாக்கிடம், பும்ரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை "பேபி பவுலர்" என அழைத்ததை நியாயப்படுத்தினார்.

    இதுகுறித்து அப்துல் ரசாக் கூறியதாவது:-

    கடந்த 2019 பேட்டியின்போது நான் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். ஆகவே, பும்ரா எனக்கு முன் ஒரு "பேபி பவுலர்". அவரை நான் எளிதாக எதிர்கொண்டு, பந்தை அடித்து துவம்சம் செய்திருப்பேன் என்று கூறினேன்.

    நான் என்னக் கூறினேனோ, அதை தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது. என்னிடம் மெக்ராத், வாசிம் அக்ரம், பும்ரா, அக்தர் போன்றோரை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அவர்களுக்கு முன் பும்ரா "பேபி பவுலர்" எனத் தெரிவித்தேன்.

    பும்ராவை சிறந்த பந்து வீச்சாளர் இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் வாசிம் அக்ரம், மெக்ராத்துடன் தொடர்புப்படுத்தி பாருங்கள். அப்போது நான் சொன்னதில் தவறு உள்ளதா? என்று தெரிவியுங்கள். நான் பாகிஸ்தான் அணிக்கு வரும்போது, வாசிம் அக்ரம் முன் நான்கு எப்போதுமே பேபிதான்.

    இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
    • சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    பல்லேகலே:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    ஆசிய கோப்பை போட்டியில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளாம் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும்.

    தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது லீக் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    நேற்று நடந்த 4-வது போட்டியில் வங்காளதேசம் 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 5-வது லீக் ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரீத் பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவருடைய மனைவிக்கு குழந்தை பிறப்பதையொட்டி அவர் நேற்று நாடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவர் நாடு திரும்பினார்.

    இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சூப்பர் 4 சுற்று தொடங்குவதற்கு முன்பு பும்ரா இந்திய அணியோடு இணைந்து கொள்வார்.

    காயம் காரணமாக பும்ரா கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் விளையாடினார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றினார்.

    இதற்கிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடைபெற இருக்கும் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூப்பர் 4 சுற்றில் 5 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி அங்கு நடக்கிறது.

    கொழும்பில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நடைபெற இருக்கும். போட்டிகள் தமுல்லா அல்லது ஹம்பன் டோடாவுக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நாளை இறுதி முடிவு செய்யப்படுகிறது.

    • அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அத்துடன், டி20 தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது.

    டப்ளின்:

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. ருத்ராஜ் கெய்க்வாட் அரை சதமடித்து 58 ரன்கள் எடுத்தார். சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

    அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ரிங்கு சிங்குக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் பும்ரா பேசியதாவது:

    வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் அனைத்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது.

    விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மனதில் ஏற்றிக் கொண்டால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை ஓரம்வைத்து சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்.

    திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

    • பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
    • திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 17-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாட்டு அணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன.

    ஆசிய கோப்பை போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு வீரர்களை தேர்வு செய்கிறது.

    பொதுவாக 15 வீரர்கள் தான் தேர்வு செய்யப்படுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான உத்தேச அணி அறிவிக்க வேண்டி இருப்பதால் அணி வீரர்களின் தேர்வு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உலக கோப்பைக்கு முன்பு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்த தேர்வு மிகவும் முக்கியமானது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் காணொலி மூலம் தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் முதல் முறையாக தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கும்ப்ளே, ரவி சாஸ்திரி ஆகியோர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    காயத்துக்காக ஆபரேசன் செய்துகொண்ட லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப் படுகிறது. உடல் தகுதியை பொறுத்துதான் அவர்களது தேர்வு இருக்கும். திலக் வர்மா தேர்வு பெற அதிகமான வாய்ப்பு உள்ளது.

    துணை கேப்டன் பதவி ஜஸ்பிரீத் பும்ராவுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப் பந்து வீரரான அவர் தற்போது அயர்லாந்து 20 ஓவர் தொடரில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

    துணை கேப்டன் பதவி தொடர்பாக பும்ராவுக்கும், ஹர்த்திக் பாண்ட்யாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், வீராட் கோலி, லோகோஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்-உடல் தகுதியை பொறுத்து), ஸ்ரேயாஸ் அய்யர் (உடல் தகுதியை பொறுத்து), ஹர்த்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன் (2-வது விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, யசுவேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின்.

    • முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.
    • நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை.

    டப்ளின்:

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் ஆபரேஷன் செய்து கொண்ட பும்ரா 11 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் செயல்பாடு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது பந்துவீச்சை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் பும்ரா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அணிக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் மிகவும் கடினமாக உழைத்தேன். தற்போது உடல் அளவில் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். அதை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சியின் போது உலக கோப்பை போட்டியை மனதில் வைத்தே தயாராகி வந்தேன். 15 ஓவர்கள் வரை கூட இப்போது பந்து வீசுகிறேன். என் மீது எதிர்பார்ப்புகள் உள்ளது.

    இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் அந்த கருத்துகள் நல்லது அல்லது கெட்டது என்பதை பொருட்படுத்தமாட்டேன். யாருடைய கருத்தையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

    நான் என்னை அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை. என்மீது தேவையற்ற எதிர்பார்ப்புகளை நான் வைப்பதில்லை. நான் நிறைய பங்களிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மாற்றுவேன் என்று நினைக்கவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் வருகிறேன். மற்றவர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்றால் அது அவர்களின் பிரச்சினை, என்னுடையதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×