search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breast Milk"

    • 2 குழந்தைகளின் தாயான எலிசபெத், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.
    • எலிசபெத் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவுகிறார்.

    அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.

    2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.

    2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் அவர்.

    • உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது
    • ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் வனிதா ராவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதன் அவசியம், நன்மைகள் ஆகியன குறித்து பேசினர்.

    ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராணி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் வடிவேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசரியர் பவானி வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவர் தலைவர் கனிெமாழி நன்றி கூறினார். 

    • முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதையும் புகட்டக்கூடாது.
    • பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால விட ஒரு சத்தான, உன்னதமான உணவு எதுவும் கிடையாது.

    திருச்சி :

    பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால விட ஒரு சத்தான, உன்னதமான உணவு எதுவும் கிடையாது. முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதையும் புகட்டக்கூடாது. அத்துடன் தாய்ப்பாலானது குழந்தையின் ஜீரணத்திற்கு மிகவும் உகந்தது. மேலும் குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.

    இன்னும் பல்வேறு முக்கிய காரணங்களை கொண்டுள்ள தாய்ப்பால் தரும் விழிப்புணர்வை அதிகரிக்க, அதன் முக்கியத்துவத்தை உணர வைக்கவும் தமிழகத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வரும் நிலையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருச்சி உறையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மாணவிகள் வில்லுப்பாட்டு மூலமாக தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு மாநகர சுகாதார நல அலுவலர் (பொறுப்பு) ஷர்மிலி பிரிசில்லா கலாமணி தலைமை தாங்கினார். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து மிகுந்த பேரிச்சம்பழம், முந்திரிப் பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தைகள் இருக்க தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம்.
    பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரெஸ்ட் பம்ப் பற்றித் தெரிந்திருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? அதில் எத்தனை வகைகள் உள்ளன? பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி தாய்ப்பாலை எப்படி சேகரிக்கலாம்? எவ்வளவு நாள் பாதுகாக்கலாம்? எதை செய்யலாம்? எதை தவிர்க்கலாம் என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கும் தாய்ப்பாலை சேமித்து வைப்போருக்கும் இப்பதிவு உதவும்…

    தாய்ப்பாலை குழந்தைக்கு தாய் கொடுப்பது என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு விஷயம். அன்பு, அரவணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, பாதுகாப்புணர்வு போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் தரும். இதையே அனைத்துத் தாய்மார்களும் எல்லாக் காலத்திலும் செய்ய முடியாமல் போகலாம். ஏனெனில் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பாலை குழந்தைக்கு நேரடியாக வழங்க முடியாமல் போகலாம். அவர்களுக்கு என்ன மாற்று வழி? பார்க்கலாம் வாங்க…

    பிரெஸ்ட் பம்ப்

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

    மார்பகத்தை அழுத்தி அழுத்தி தாய்ப்பாலை எடுத்து மேனுவல் பிரெஸ்ட் பம்ப். அதாவது நாம் அழுத்தி தாய்ப்பால் எடுக்க வேண்டும். இது ஒரு வகை.

    எலக்ட்ரானிக் பிரெஸ்ட் பம்ப், இன்னொரு வகை. இதை மார்பகத்தில் வைத்துப் பொருத்தி கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஸ்விட்ச் போர்ட்டில், பிளக்கை சொருகி ஆன் செய்து கொள்ளலாம். இந்தக் கருவியே மார்பகத்தை அழுத்தி பாலை சேகரித்து கொள்ளும். இது தானியங்கி கருவி.

    இந்த இரண்டு கருவிகளில், தாய்மார்கள் தங்களது வசதி பொறுத்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

    ஏன் பிரெஸ்ட் பம்ப் தேவை?

    வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும்.

    தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

    சில குழந்தைகள் இரவில் அழுது கொண்டே இருக்கும். தூக்கமும் வரும் அதேசமயம் பசியும் இருக்கும். சரியாக தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். குறைந்த இடைவெளியில் அழுதுகொண்டே இருப்பார்கள். நீங்கள் தாய்ப்பாலை சேகரித்து வைத்துக் கொண்டால், இரவில் சேமித்து வைத்த பாலை கொடுத்து விடலாம். தாய் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் தந்தையோ மற்றவர்களோ எழுந்து சேமித்து வைத்த பாலை கொடுக்கலாம்.
    ×