search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing"

    • நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை.
    • ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. 2022-ம் ஆண்டு காமன்வெல்த் தகுதி போட்டிக்கு முன்பாக கால் முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்த அவர் களம் திரும்பவில்லை.

    இந்த நிலையில் 41 வயதான மேரிகோம் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்று செய்தி வெளியானது. 40 வயதுக்கு மேல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இதனை மேரிகோம் மறுத்துள்ளார்.

    இது குறித்து மேரிகோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நான் ஓய்வு பெறுவதாக இன்னும் அறிவிக்கவில்லை. ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி தவறானது. திப்ருகாரில் (அசாம்) கடந்த புதன்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறுவர்களை ஊக்கப்படுத்தினேன். நான் இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் தான் இருக்கிறேன். ஆனால் வயது கட்டுப்பாடு காரணமாக என்னால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. ஆனால் என்னால் விளையாட்டை தொடர முடியும். நான் இன்னும் எனது உடல் தகுதியில் கவனம் செலுத்தி வருகிறேன். ஓய்வு பெற முடிவு செய்யும் போது முறைப்படி அறிவிப்பேன்' என்றார்.

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிப்படி 40 வயதிற்கு மேல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
    • வயது கடந்ததால் கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார் மோரி கோம்.

    இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.

    சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது.

    ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் "இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்" என்றார்.

    • மூவருக்கும் குறைந்தது வெண்கலப் பதக்கம் உறுதியானது.
    • கடந்த 2019-ம் ஆண்டில் 2 பதக்கம் பெற்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது.

    உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப்பிரிவில் தீபக் போரியா கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். 57 கிலோ எடைப்பிரிவில் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். 71 கிலோ எடைப்பிரிவில் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மூவருக்கும் குறைந்தது வெண்கலப் பதக்கம் உறுதியானது.

    அத்துடன், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய குத்துச் சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

    இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் மணீஷ் கவுசிக் வெண்கலம் மற்றும் அமித் பங்கால் வெள்ளி பதக்கம் பெற்றதே சாதனையாக இருந்தது.

    • சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.
    • நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை லவ்லினா செய்திருப்பதாக முதல்வர் பாராட்டினார்

    கவுகாத்தி:

    டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார். 75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின் பார்க்கரை 5-2 என லவ்லினா வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில், உலக சாம்பியன் பட்டம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் மாநில சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிஸ்வஜித் வாசித்தார்.

    பின்னர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், 'மாநிலத்தின் விளையாட்டுக் கொள்கையின் அடிப்படையில், குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற லவ்னினாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

    முதல்வர் மேலும் பேசுகையில், "நாம் புதிய லவ்லினா மற்றும் ஹிமா தாசை (தடகள வீராங்கனை) உருவாக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதற்கான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். லவ்லினா பங்கேற்கும் அடுத்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும்? என்பதை இப்போது நாம் ஆராய வேண்டாம். நம் வாழ்நாளில் நாம் செய்ய முடியாத சாதனையை அவர் செய்திருக்கிறார்" என பாராட்டினார்.

    • 50 கிலோ எடைப்பிரிவில் நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை வீழ்த்தினார்.
    • 48 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனையை வென்றார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபற்று வரும் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் நிகத் ஜரீன், நீது கங்காஸ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

    50 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான நிகத் ஜரீன், கொலம்பியாவின் இங்ரித் வாலன்சியாவை 5-0 என வீழ்த்தினார். இதேபோல் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான அரையிறுதியில் நீது கங்காஸ், கஜகஸ்தான் வீராங்கனை அலுவா பால்கிபெகோவாவை 5-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். 

    • 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா, பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை வென்றார்
    • ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி பைனலுக்கு முன்னேறினார்

    சோபியா:

    பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனைகள் அனாமிகாவும் அனுபமாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

    50 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வாசில்லாவை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அனாமிகா வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுபமா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸிக்காவை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் குமார் சஹானி, ஜார்ஜியாவின் லூகா கப்லாஷ்விலியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இவர் இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷோடியோர்ஜோனை எதிர்கொள்கிறார்.

    • குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளை சேர்ந்த 180 மாண வர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி யில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவி லான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாண வர்கள் மற்றும் பயிற்சி யாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரி யர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

    • சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.
    • திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கம் சாா்பில் 3 நாள்கள் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் இருந்து 250 ஆண்கள், 100 பெண்கள் என மொத்தம் 350 போ் கலந்து கொண்டனா்.

    இதில் 4 கட்டங்களாக நடைபெற்ற போட்டியில் சீனியா் பிரிவில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அணி முதலிடமும், சீனியா் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அணியும், ஜூனியா் பிரிவில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிபிட் கிளப் அணி முதலிடமும், யூத் பிரிவில் எஸ்.ஐ.ஹெச் அணி முதலிடமும், சப் ஜூனியா் பிரிவில் திருப்பூா் அப்பு பாக்ஸிங் கிளப் அணியும் முதலிடம் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூா் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலரும், திருப்பூா் மாநகராட்சி 4ஆம் மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் ஆகியோா் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினா்.

    இதில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் கவுரவ தலைவா் கருணாநிதி, சங்கத்தின் தலைவா் ராமகிருஷ்ணன், காங்கயம் தி.மு.க. நகரச் செயலா் வசந்தம் நா.சேமலையப்பன், நகர துணைச் செயலா் எம்.எஸ்.சுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் குத்துச்சண்டை சங்கத்தின் செயலா் பி.சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலா் பிரிதிவிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • அரையிறுதி சுற்றில் கோவிந்த், கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் தோல்வியடைந்தார்.
    • நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் சுமித் தோல்வியடைந்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடைபெறுகிறது. இதில், இந்திய வீரர்கள் சுமித், கோவிந்த் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில், கோவிந்த் (48 கிலோ எடைப்பிரிவு), கஜகஜ்தான் வீரர் சன்ஜாரிடம் 0:4 என தோல்வியடைந்தார். இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவில் சுமித், நடப்பு ஆசிய சாம்பியன் ஜாபரோவிடம் (உஸ்பெகிஸ்தான்) 0:5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். தாய்லாந்து ஓபனில் சுமித், கோவிந்த் குமார் ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற இந்திய வீரர்களான சிவ தாபா, முகமது ஹசாமுதீன், நரேந்தர் ஆகியோர் அரையிறுதியில் மோத உள்ளனர். நாளை நடைபெறும் இறுதிப் போட்டிகளில் லவ்லினா, பர்வீன் உள்ளிட்ட 5 இந்திய வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 

    • காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 


    காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • குத்துச்சண்டையில் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது.

    இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ரோகித் டோகாஸ் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
    இந்தியாவின் குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சக வீரர்களான மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    ப்ளைவெயில் (52 கிலோ) பிரிவில் நிகத் தங்கம் வென்றார். மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    வீராங்கணைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர், பிரதமர் மோடி வீராங்கணைகள்  அணிந்திருந்த டி சர்ட்டுகளின் கை பகுதியில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார்.  

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை பெருமைப்படுத்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன், மனிஷா மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி. விளையாட்டு மற்றும் அதைத் தாண்டிய வாழ்க்கையின் மீதான ஆர்வம் உள்பட அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் குறித்து நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீரர்களான நிகத் ஜரீன், மனிஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் "எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மரியாதைக்குரியது. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டிள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. 133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு
    ×