search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booster Vaccine"

    • உருமாறிய கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை
    • தடுப்பூசி செலுத்த சுகாதார அதிகாரிகள் அறிவுரை

    கோவை,

    கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.

    கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங் களை அடைந்த தால் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவு றுத்தப்பட்டது.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

    18 முதல் 59 வயதுக்கு ட்பட்டவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இதனையடுத்து தமிழகத்தில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 15 முதல் அடுத்த 75 நாள்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையிலில் செப்டம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 29 லட்சத்து 12 ஆயிரத்து 580 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 26 லட்சத்து 70 ஆயிரத்து 84 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    ஆனால், பூஸ்டர் தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 107 பேர் மட்டுமே செலுத்திக் கொண்டனர்.

    2-வது தவணை தடுப்பூசி கள் செலுத்திக்கொ ண்டவர்க ளுடன் ஒப்பிடும்போது பூஸ்டர் தடுப்பூசியை மிகவும் சொற்பமான நபர்களே செலுத்திக் கொண்டுள்ளனர்.

    செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ளா தவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • இதில் 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முதலில் 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தற்போது 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திய வர்களுக்கு 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 895 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர்.

    இதில் கடந்த 26-ந் தேதி வரை 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது 7 சதவீதமாகும்.

    பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்றது.

    அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாலை 6 மணி நிலவரப்படி 75 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்.

    இதில் சுமார் 65 ஆயிரம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.

    • மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • இதுவரை 46 ஆயிரத்து 238 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயது மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முதலில் 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

    தற்போது 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் வருகின்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 60 வயதுக்கு ட்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 46 ஆயிரத்து 238 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 63 சதவீதம் பேருக்கும், 15 முதல் 18 வயது உட்பட்டவர்களுக்கு முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 74 சதவீதம் பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை 98 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 76 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை பூஸ்டர் கடந்த 15ந் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை செலுத்தி 6மாதங்கள் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.இந்த தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக அடுத்த செப்டம்பர் 30-ந் தேதி வரை செலுத்தப்படும்.

    இது குறித்து, கலெக்டர் வினீத் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் ஆன, 10 லட்சத்து 14 ஆயிரத்து 495 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை செலுத்திய ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 949 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 65 ஆயிரத்து 444 பேர் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    திருப்பூர்:

    தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டியுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26வாரம் நிறைவு பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் ஆதார் அட்டை, குறுஞ்செய்தி காண்பித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்வோர் இருதவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆனால் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம். கைவசம் 2.5 லட்சம் தடுப்பூசி உள்ளது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கிவிட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல நோயாளிகள் உயிரிழந்தனர்.

    கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதன் தொற்று பல வகையிலும் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் 2 தவணைகளாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனாவின் 3-வது அலை டிசம்பர் மாதம் தாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர். இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கிவிட்டது.

    இந்த நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்த கொள்கை குறித்து இந்த மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று என்.டி.ஜி.ஐ. அமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்த அமைப்பு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவாகும். இதுகுறித்து என்.டி.ஜி.ஐ. உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தொற்று நோயின் அடிப்படையில் ஒரு விரிவான கொள்கை வெளிவர வாய்ப்பு உள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசி குறித்த கொள்கை அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும். அடுத்த 2 வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

    கொரோனா தடுப்பூசி

    பூஸ்டர் தடுப்பூசி குறித்த கொள்கை தயார்நிலையில் இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை விரைவு படுத்தி முடிப்பதில்தான் முக்கியத்துவம் அளிக்க முடியும்.

    டிசம்பர் 31-ந் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் முதல் டோஸ் செலுத்தப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும். தற்போது 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் டோசும், 41 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதல் 2 டோசையும் செலுத்தி உள்ளனர்.

    சமீபத்தில் நடந்த கூட் டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் சுகாதார ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை கேட்டுள்ளனர். மராட்டிய சுகாதார அமைச்சர் இதை வலியுறுத்தியிருந்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...இன்ஸ்டாகிராமில் சர்ச்சை கருத்து - நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்

    நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு 3-வது தடுப்பூசி செலுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 106 கோடியே 31 லட்சமாக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை டிசம்பர் மாதம் தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அங்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் இரண்டு டோஸ்களில் வீரியம் குறையும் நேரத்தில் 3-வது டோஸ் தேவைப்படுகிறது. நிலைமையை பொறுத்து அடுத்த ஆண்டு 3-வது டோஸ் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.

    மத்திய அரசு

    ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் நிறுவனம் தங்களது ‘கோர்பேவெக்ஸ்’ பூஸ்டர் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தது.

    இந்த நிலையில் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி வைரசின் நினைவை தக்க வைத்துக் கொள்கிறது. ஒருநபர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நோய் எதிர்ப்பு செல்கள் வைரசை அடையாளம் கண்டு நோய் கிருமியை கொல்லும். இது நோய் எதிர்ப்பு நினைவகம் என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று அல்லது தடுப்பூசிக்கு பிறகு நீடித்த பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே அடிப்படை ஆகும். எனவே பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயம் இல்லை. ஆரோக்கியமான நபர்களுக்கு இது அவசியம் இல்லை.

    மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு 3-வது தடுப்பூசி செலுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி மற்றும் பரிந்துரைகளை நிபுணர்கள் பார்க்கிறார்கள். வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    தற்போது எங்களின் முக்கிய கவனம் தடுப்பூசி திட்டத்தை அனைவருக்கும் விரிவுப்படுத்துவதை உறுதி செய்வது ஆகும். பூஸ்டர் டோஸ்கள் பரிந்துரை செய்யப்பட்டால் மருத்துவ ரீதியாக தேவைப்படும் நபர்களுக்கு முதலில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    ×