search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood test"

    • அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சேலம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசிங் (வயது 35). இவரை அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதற்கான ஆணையை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு சென்றார். அங்குள்ள சிறையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளை வைக்கக் கூடாது என்பதால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கிளை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கிருஷ்ணசிங்கை அழைத்து வந்தனர்.

    அப்போது சேலம் சிறை வார்டன்கள் கிருஷ்ணசிங்கை சோதனை செய்தனர். அவர் மீது மது வாசனை வந்தது. இது பற்றி சிறை அதிகாரிகளிடம் வார்டன்கள் தெரிவித்தனர். பின்னர் சிறை மருத்துவர் அங்கு வந்து கிருஷ்ணசிங்கை பரிசோதனை செய்தபோது அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து ரத்த பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று பார்த்தபோது கைதிக்கு 3 லிட்டர் தண்ணீரை வாங்கிக் கொடுத்ததும், மதுவாடையை போக்குவதற்காக வாயை சுத்தப்படுத்து வதற்கான ஸ்பிரே வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதுபற்றி வார்டன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கைதிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்த மாதிரியை எங்களிடம் தர வேண்டும். நாங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவை பெற்று தருகிறோம் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதேபோல் சிறை அதிகாரிகளும் எங்களுக்கும் ஒரு ரத்த மாதிரி தாருங்கள். நாங்களும் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.

    இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 11.30 மணியளவில் ரத்த மாதிரி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைதியிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும், சிறை வார்டனும் ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கான முடிவு நாளை கிடைத்த பிறகே கைதி மது அருந்தினரா? கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், கைதியின் ரத்த மாதிரி அறிக்கை கிடைத்த பிறகு அதில் அவர் மது குடித்து இருந்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.

    குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

    ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.

    இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும்.
    • சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

    கடலூர்,:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் சூரசம்கார தெரு, குழந்தை காலனி மற்றும் கால்வாய் தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களின் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொதுமக்கள் மழைநீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர்சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும், நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம்.

    சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம். 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்தார். இவ்வாய்வில் துணை இயக்குனர் (பொறுப்பு) (சுகாதாரம்) கீதாராணி, மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ் , மாவட்ட மலேரியா அலுவலர் கெஜபதி , மாநகர் நல அலுவலர் எழில் மதனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

    • 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது வழங்கப்பட்டது
    • காசோலையினை கலெக்டரிடம் வழங்கினார்

    கலவை:

    கலவை சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் மருத்துவ சிகிச்சை பெற அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    இங்கு வரும் மக்களின் நலனுக்காக ஓய்வு பெற்ற அரசு மருத்துவரும் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்தற்காக இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது பெற்ற மனிதநேய மருத்துவருமான செங்கோட்டையன் கலவை அரசு மருத்துவமனைக்கு ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள ரத்த பரிசோதனை கருவி (செமி ஆட்டோ அனலைசர்) வாங்குவதற்கான காசோலையினை கலெக்டர் வளர்மதியிடம் வழங்கினார்.

    அப்போது, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி , சமூக ஆர்வலர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

    • நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையானது தென்மாவட்டங்களில் உள்ள பிரதான மருத்துவமனை ஆகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
    • காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 2 கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையானது தென்மாவட்டங்களில் உள்ள பிரதான மருத்துவமனை ஆகும். இங்கு தினமும் ஆயிரக்க ணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    2,400 படுக்கைகள்

    இந்த ஆஸ்பத்திரியில் சுமார் 2,400 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் நெல்லை, தென்காசி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பலதரப்பட்ட சோதனைகளுக்கும் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தனித்தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அங்கு பரிசோதனைகள் நடை பெற்று வருகிறது.

    தாமதமான முடிவு

    இந்நிலையில் நோயாளிகளின் ரத்தத்தை பரிசோதனைக்காக பெறுவதிலும், அதற்கான முடிவுகளை அறிவிப்பதிலும் மிகவும் தாமதம் ஏற்படுவதாக நோயாளிகள் புகார் கூறுகின்றனர்.

    இந்த பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு நோயாளிகளின் உறவினர்கள் காலை முதல் இரவு வரை பசியோடு வெயிலில் காத்து கிடக்கும் நிலை இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து கணினி மூலமாக விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

    எம்.எல்.ஏ. ஆய்வு

    ஆனாலும் ஒரே ஒரு கவுன்டர் மட்டுமே இருந்ததால் பரிசோதனை முடிவு தாமதமாகவே வழங்கப்பட்டு வந்தது. தொடர் புகாரால் சமீபத்தில் பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆய்வு செய்து பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்க அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் மருத்து வக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    கூடுதல் கவுன்டர்கள் திறப்பு

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தகவல் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் தமிழகத்திலேயே இந்த ஆஸ்பத்திரி முதல் இடம் வகிக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதி சீட்டு வழங்குதல், மருத்துவர்கள் மருந்து பரிந்துரை செய்வது, ரத்த பரிசோதனை பதிவு செய்தல், முடிவுகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் இனி ரத்த பரிசோதனை செய்யப்படும் அதே நேரத்தில் டாக்டர்கள் இணையவழி மூலமாக ரத்த பரிசோதனை முடிவுகளை காணலாம்.

    எனவே தேவையற்ற காலதாமதம் இனி ஏற்படாது. ரத்த பரிசோதனை செய்வதற்காக பதிவு செய்யும் பகுதியில் தற்போது 3 கணினிகள் இயங்கி வருகிறது.

    இங்கு காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 2 கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள் நோயாளிகளாக சேர்க்கப்படும் அனைவருக்கும் முதலில் ரத்த பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.
    • ரத்த மாதிரிகளின் முடிவை பெற 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் சிகிச்சைக்காக தூத்துக்குடி, தென்காசி போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான புற நோயாளிகள் தங்களது உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். இதில் உள் நோயாளிகளாக சேர்க்கப்படும் அனைவருக்கும் முதலில் ரத்த பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.

    இதற்காக அரசு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் ரத்த பரிசோதனை அறை செயல்பட்டு வருகிறது. இங்கு பரிசோதனைக்காக நோயாளிகளின் ரத்தம் எடுக்கப்பட்டு மறுநாள் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும்.

    இந்நிலையில், பரிசோதனைக்காக ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவை பெற ஒரு சில நேரங்களில் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். சுமார் 15 முதல் 20 மணி நேரம் வரை, இரவு பகல் பாராமல் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு ரத்த மாதிரியின் அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் ரத்த பரிசோதனை முடிவு வருவதில் சில சமயங்களில் தாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்கப்படாமல் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது.

    சில நேரங்களில் இரவு வரையிலும் நீண்ட வரிசையில் பரிசோதனை முடிவுக்காக நோயாளிகளின் உறவினர்கள் காத்து நிற்பதை பார்க்க முடிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மிகப்பெரிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஒன்றான இந்த மருத்துவமனையில், ரத்த மாதிரியின் ஆய்வு முடிவை பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியிருப்பது வேதனையளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குறை கூறுகின்றனர்.

    எனவே இந்த விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகள் உடனடியக கவனம் செலுத்தி, கூடுதல் ஆய்வகம் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்து, ரத்தப் பரிசோதனை முடிவுகள் தாமதம் இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன் அறிகுறி தெரியும் முன்பே ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். #LungCancer
    வாஷிங்டன்:

    புற்றுநோய் தாக்கத்தை படிப்படியாக தான் அறிய முடியும். ஆனால் நுரையீரல் புற்றுநோயை அதன் அறிகுறி தெரியும் முன்பே ரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

    அதுகுறித்து சமீபத்தில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அதில் ரத்தத்தில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறுகள் மூலம் நுரையீரல் புற்றுநோயை கண்டறிய முடியும் என நிரூபித்துள்ளனர். ஒரு துளி ரத்தத்தின் மூலம் பரிசோதனை நடத்தி கண்டுபிடிக்க முடியும் என நிபுணர் ஜியோப்ரே ஆர்.அஸ்னார்டு தெரிவித்துள்ளார்.


    டி.என்.ஏ.வில் உள்ள செல்களின் அடிப்படையில் நுரையீரல் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 141 நகரங்களில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேரிடம் ரத்த பரிசோதனை நடத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #LungCancer
    ×