search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhupesh Baghel"

    • ஆடம்பரமாக ரூ.250 கோடி செலவில் சவுரப் திருமணம் நடைபெற்றது
    • மாநிலத்தை ஏடிஎம்மாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் என்கிறார் ஷெஹ்சத்

    இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி (Mahadev Satta App)  எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று பிரபலமாக உள்ளது.

    பெரும்பாலானோர்கள் தங்கள் பணத்தை செலுத்தி சூதாடி வந்ததால், தினந்தோறும் இச்செயலியை நிறுவியவர்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக கூறப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு சொந்தமானது மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி.

    ரூ.250 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுரப் ஆடம்பரமாக செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு அவர் இந்திய அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் வந்தார். அத்துறை நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில், கடந்த 2023 நவம்பர் மாதம் ராய்பூரில், சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கில் பணத்துடன் சென்ற அசிம் தாஸ் (Asim Das) என்பவரை அமலாக்க துறை விசாரித்த போது சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்காக அதனை கொண்டு செல்வதாக ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவாலா கருத்து தெரிவித்தார்.

    அதில் ஷெஹ்சத் கூறியதாவது:

    சி எம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) அல்ல; கரப்ஷன் மினிஸ்டர் (கரப்ஷன் மினிஸ்டர்). பிரதமர் மோடி "ரூபே" கார்டு கொடுத்தார்; காங்கிரஸ் "பூபே" கார்டு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளாலும் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கொண்டது. கையும் களவுமாக ரூ.500 கோடி லஞ்சம் கொடுக்க சென்ற ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என இப்போது காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக 5-மாநில தேர்தல்கள் கருதப்படுகிறது
    • ரூ.500 கோடிக்கு மேல் பூபேஷ் பாகேல் பெற்றதாக அமலாக்க துறை கண்டுபிடித்தது

    இம்மாத இறுதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களுக்கான முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்களை அரசியல் கட்சிகள் முன்னோட்டமாக கருதுவதால் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஒரு புறமும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மறுபுறமும் இந்த 5 மாநிலங்களிலும் வெல்வதற்கு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

    இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில், "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" எனும் மென்பொருள் செயலியை உருவாக்கி, அதன் மூலம் மக்களை பெருமளவு பணம் இழக்க செய்து லாபம் சம்பாதித்த அந்நிறுவனர்கள், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்திருப்பதாகவும், இதை அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

    சத்தீஸ்கரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேலின் ஆட்சி நடைபெறுகிறது.

    இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்து, அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க. இவ்வாறு பிரச்சாரம் செய்வதாக கூறியது.

    இது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாக ஊழல் குற்றச்சாட்டை வைப்பது பா.ஜ.க.விற்கு வழக்கமாகி வருகிறது. எதிர்கட்சிகளை அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் துன்புறுத்துவதும் வழக்கம். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வை பதவியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்" என தெரிவித்தார்.

    • சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.

    சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.

    சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

    அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என ராகுல் கூறினார்
    • ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என உறுதியளித்தார்

    இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம், இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தலை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. எனவே இதில் வெல்ல தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். நிலமில்லாத கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, தற்போது வழங்கப்படும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இது குறித்து நான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2018ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி விட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் முன்பு போல் தங்கள் நிலங்களை விற்காமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் சிங் தியோ, உள்துறை அமைச்சர் டம்ரத்வாஜ் சாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தும் யுக்தியை தற்போது காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

    • சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.

    ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.

    • சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார்
    • மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்

    இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார்.

    இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பூபேஷ் உரையாற்றினார்.

    அம்மாநிலத்தில் சுமார் 1.6 கோடி மக்கள் பேசும் சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பெண்களின் பாதுகாப்பு அதி முக்கியம் வாய்ந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் இனி மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்" என அறிவித்துள்ளார்.

    அம்மாநிலத்தில் நகரங்களில் இருந்து தொலைதூர பகுதியில் வாழும் மாணவர்களும் மாணவிகளும் இந்தியாவின் முக்கிய நுழைவுத்தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதுபோன்று பல திட்டங்களை பூபேஷ் பகேல் அறிவித்திருந்த போதும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சத்தீஸ்கர் மாநில பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார்.
    • அப்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் நடப்பு 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார். அதன்படி 18முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 35 வயது வரையிலான வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவை தவிர அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500-ல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    • மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ராய்ப்பூர் :

    காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார்.

    பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-

    * ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரு.2,500 உதவி தொகை வழங்கப்படும்.

    * ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    * அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    • இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
    • காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.

    ராய்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.
    • இதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    ராய்ப்பூர்:

    மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பூபேஷ் பாகல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினென்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவர் கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இந்த ‘சாட்டையடி சடங்கை’ செய்வதால், ஒருவரின் வாழ்வில் பிரச்சினைகள் விலகி, மகிழ்ச்சி மலரும் என்பது சத்தீஷ்கார் பக்தர்களின் நம்பிக்கை.
    ராய்ப்பூர் :

    தீபாவளி தினத்துக்கு அடுத்த நாளன்று நாடு முழுவதும் கோவர்த்தன பூஜை கொண்டாடப்படுகிறது. இந்திரனிடம் இருந்து மக்களை காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கியதைக் குறிக்கும் விதமாக இப்பூஜையை மக்கள் கொண்டாடுகின்றனர். சத்தீஷ்கார் மாநிலத்திலும் கோவர்த்தன பூஜை வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.

    இந்நிலையில் துர்க் நகரில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் பங்கேற்று வழிபட்டார். அங்கு கோவர்த்தன பூஜை வழிபாட்டு வழக்கப்படி அவர் ‘சாட்டை’ அடியும் பெற்றார்.

    பாரம்பரிய உடையும், தலைப்பாகையும் அணிந்திருந்த பூபேஷ் பாகல், தனது வலது கையை விறைப்பாக நீட்டியபடி நின்றார். அவர் கையை தடவிப்பார்த்த ஒருவர், சாட்டையால் 8 முறை ஓங்கி ஓங்கி அடித்தார்.

    அப்போது சிறிதும் முகம் சுழிக்காமல், கையை மடக்காமல் அசையாது முதல்-மந்திரி நின்றார். சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்து நின்றிருந்த அவ்வேளையில், மேளதாளங்கள் ஓங்கி ஒலித்தன. சுற்றி நின்ற பலர், அக்காட்சிகளை தங்கள் செல்போன்களில் படம் எடுத்தனர்.

    8 முறை அவரது கையில் சாட்டையால் அடித்தபின், சாட்டைக்காரர் முதல்-மந்திரியை கட்டித்தழுவிக்கொண்டார்.

    இதுதொடர்பான 23 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பரவியுள்ளது.

    இந்த ‘சாட்டையடி சடங்கை’ செய்வதால், ஒருவரின் வாழ்வில் பிரச்சினைகள் விலகி, மகிழ்ச்சி மலரும் என்பது சத்தீஷ்கார் பக்தர்களின் நம்பிக்கை.
    சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
    ராய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

    சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

    ×