search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bed life"

    • பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
    • சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.

    தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம். இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.

    இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.

    960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது.

    ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான். எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.

    -சிவசங்கர்

    • மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
    • மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    மாதவிடாய் காலத்தில் நிறைய பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைவதால் வெளியிடப்படும் எண்டோர்பின்கள், வயிற்று வலி மற்றும் இந்த காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

    நிறைய பேர் மாதவிடாய் சுழற்சியில் வெளிவரும் இரத்தம் அசுத்தமானது மற்றும் நோய்க்கிருமிகளைக் கொண்டது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது தவறு. மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தில் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருந்த ஆரோக்கியமான இரத்தம் மற்றும் திசுக்கள் தான் உள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், மாதவிடாய் சுழற்சியின் போது அது வெளியே தள்ளப்படுகிறது.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், மற்ற நேரங்களை விட சற்று அதிகமான அளவில் இரத்தம் வெளிவரும். அதிலும் அதுவரை அளவாக இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தாலும், உடலுறவில் ஈடுபட்ட பின் அதிகமாக வெளிவரும். ஏனெனில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது கருப்பையக மாசுக்கள் வேகமாக வெளியேத் தள்ளப்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் நாட்கள் குறையும்.

    ஆய்வு ஒன்றில் 30 சதவீதத்தினர் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்றும், இக்காலத்தில் மற்ற காலங்களை விட அதிகளவு பாலுணர்ச்சி இருப்பதாகவும் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மாதவிடாய் காலத்தில் மற்ற நேரங்களில் ஈடுபடும் போது அடையும் இன்பத்தை விட அதிகளவு இன்பத்தை அடைவதாக நிறைய பெண்கள் கூறுகின்றனர்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் இரத்தத்தை வெளியே தள்ள கருப்பை வாய் சற்று அதிகமாக திறப்பதால், பாலியல் நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

    அந்த 3 நாள்களில் உடலுறவு கொண்டால் கரு தங்காது. ஆகவே இந்த நாள்களில் கருத்தடை சாதனம் இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த நாள்களில் உடலுறவு கொண்டு உச்சம் அடைந்தால் பெண்களுக்கு நல்ல ஹார்மோன் கிடைக்கும். இது சில பெண்களுக்கு தெரியும். பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்த நாள்களில் உடலுறவு மட்டுமின்றி சுய இன்பமும் பெறலாம். இது உடலுக்கு நல்லது. மன அழுத்தம் குறையவும் வாய்ப்புகள் அதிகம்.

    கால்வலி, உடம்பு வலி பறந்து போய்விடும். பெண்களும் மாதவிலக்கு வலிகளை கடந்து செல்ல முடியும். ஆகவே மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொண்டால், மன அழுத்தம், உடல் பிரச்னை உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரமுடியும்.

    எனினும், "மாதவிலக்கு காலங்களில் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் உள்ளவர்கள் இந்த உடலுறவை தவிர்க்க வேண்டும்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இக்காலத்தில் உடலுறவு கொள்வது நல்லது என்று கூறுவதால் கட்டாயம் உறவு கொள்ள வேண்டுமென்ற அவசியம் ஏதும் இல்லை.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தேனிலவு காலம் தம்பதிகளை பொறுத்தவரையில் மிக மகிழ்ச்சியானது.
    • பெண்கள் தேனிலவு காலத்தில் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

    திருமணமாகும் எல்லா பெண்களுக்குமே தேனிலவு கனவு ஒன்று இருக்கும். திருமணமானதும் அவர்களது தேனிலவு காலம் தொடங்கிவிடுகிறது. தம்பதிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ள தேனிலவு நாட்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களை தனிமையில் பயணிக்க அனுமதித்துவிடுவார்கள். அவர்கள் சுதந்திர பறவைகளாக விரும்பிய இடங்களுக்கெல்லாம் சிறகடித்து பறந்து, மகிழ்ச்சியாக தாம்பத்ய உறவை அமைத்துக்கொள்வார்கள்.

    வெளி இடங்களுக்கு தனிமையில் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்காத ஜோடிகளுக்கும் தேனிலவு காலம் உண்டு. அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அந்த நாட்களை கொண்டாடுகிறார்கள். தேனிலவு காலத்தின் சிறப்பு என்னவென்றால் அப்போது புதுமணத்தம்பதிகளின் உடலும், உள்ளமும் சங்கமிக்கும். தாம்பத்ய ஆர்வமும் மேலோங்கி நிற்கும். அப்போது அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மறந்துவிடக்கூடாது. குறிப்பாக பெண்கள் தேனிலவு காலத்தில் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

    தேனிலவு நாட்களில் பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும் பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அந்த பாதிப்பிற்கு 'ஹனிமூன் சிஸ்டைட்டிஸ்' என்று பெயர். சுகாதாரமற்ற முறையில் கணவரோடு தாம்பத்ய தொடர்பில் ஈடுபட்டால் இந்த பாதிப்பு தோன்றும். பெண்களின் உறுப்பு பகுதியில் வலி, எரிச்சல் ஏற்படுவது இதன் அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வினை இது ஏற்படுத்தும். ஆனால் சிறுநீர் பிரிந்து வெளியேறாது. சிலருக்கு சிறுநீரில் லேசாக ரத்தமும் வெளியேறலாம்.

    சிறுநீர் பரிசோதனையில் இந்த நோயின் தாக்குதல் தன்மையை கண்டுபிடிக்கலாம். பாதிப்பு இருப்பதாக தெரியவந்ததும், டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மாத்திரைகள் சாப்பிட வேண்டியதிருக்கும். சரியான சிகிச்சை பெறாவிட்டால், கிருமித் தொற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்.

    தேனிலவு காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்தரங்க சுத்தம் மிக அவசியம். தாம்பத்ய உறவு முடிந்ததும் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். உறவுக்கு முன்பும்-பின்பும் இருவருமே அந்தரங்க சுத்தத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தேனிலவு காலத்தில் காபி, டீ, குளிர்பானங்கள் பருகுவதை தவிர்ப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடித்து, அடக்கி வைக்காமல் சிறுநீர் கழிப்பதும் அவசியம்.

    தேனிலவு காலம் தம்பதிகளை பொறுத்தவரையில் மிக மகிழ்ச்சியானது. அந்த மகிழ்ச்சியை அவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.

    • திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள்.
    • தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும்.

    சர்வதேச அளவில் இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மட்டுமின்றி திருமணமாகி சில ஆண்டுகள் கழித்தவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். இதற்கு மருந்துகளைத்தாண்டி உடல், மனம், உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் முக்கியமாகும். இதுகுறித்து விரிவான விளக்கத்தைப்பார்ப்போம்.

    மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது. அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது.

    பசி, தாகம், ஓய்வு, தூக்கம் இவைகளைப் போன்று தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இல்லற சுகத்திற்கு வயது ஒரு தடை அல்ல. மனமும், உடலும் ஒத்துழைத்தால் எந்த வயதிலும் இந்த சுகத்தை அனுபவிக்கலாம்.

    பல ஆண்களுக்கு ஆரம்பகாலத்தில் தாம்பத்தியம் தொடர்பான அச்சம், சந்தேகங்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு தாம்பத்ய வாழ்வில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், நாளாக நாளாக தாம்பத்தியத்தின் திருப்தியில்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மன ரீதியாக பாதிப்பும், தொடர்ந்து உடலிலும் பிரச்சினைகள் வருகிறது.

    ஆண்களின் பிரச்சினைகளில் மிக முக்கியமானது விறைப்புத்தன்மை குறைபாடு. இது நரம்பு, ஹார்மோன், உடல் நலக்குறைவு மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது.

    சில அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், ஹார்மோன்கள் இல்லற வாழ்வில் திருப்தியைத் தருபவை. அதுதொடர்பான உணவுகள், பழக்கவழக்கங்கள் குறித்து பார்ப்போம்.

    எல்-ஆர்ஜினின் அமினோ அமிலம்: இது ரத்தத்திலுள்ள நைட்ரிக் ஆக்சைடு அளவை சீராக்கி ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த அடைப்புகளை நீக்குகிறது. இந்த சத்து சைவ உணவுகளில் பீட்ரூட், பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசிகளில் உள்ளது. அசைவ உணவுகளில் கோழி, வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், மீன் வகைகளில் சூரை மீன், கணவாய், இறால், நண்டு, மற்றும் முட்டை, பால் இவைகளில் இந்த சத்து அதிகமாக உள்ளது.

    எல்- கார்னிடைன்: இதுவும் ஒருவகை அமினோ அமிலம் ஆகும். இது ஆண்மை எழுச்சிக்கு காரணமானது. இந்த சத்து, சிகப்பு இறைச்சி வகைகள், கோழி இறைச்சி, பால், வெண்ணெய், முட்டை, சூரை மீன், சுறா மீன், மத்திச் சாளை, கணவாய், பீட்ரூட், பூசணி விதைகளில் உள்ளது.

    எல் சிட்ருலின்: இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகக்கூடியது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. தர்ப்பூசணி, ஆரஞ்சு, சாக்லேட், எலுமிச்சை பழங்களில் இது அதிகமாக உள்ளது.

    எல் டைரோசின்: இந்த அமினோ அமிலம் அதிகரிக்கும்போது உடலில் 'டோபமைன்' அளவும் கூடுகிறது. இது மனதுக்கும், உடலுக்கும், உற்சாகம், நம்பிக்கையை தருகிறது. இது தன்னம்பிக்கைக்குரிய ஹார்மோன் ஆகும். பூசணி விதைகள், எள் இவற்றில் இந்தச்சத்து போதுமான அளவு உள்ளது.

    புரோமிலென்: இந்த என்சைம் வாழைப்பழத்தில் அதிகளவு உள்ளது. இது மனதில் தாம்பத்ய ஆசையை அதிகரிக்கிறது. பழங்களில் நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம் சிறந்தது.

    அவகோடா: இது விதைப்பை மரம் (Testicle Tree) என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரதங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

    லைக்கோபீன்: இது தக்காளியில் உள்ள முக்கியமான அமினோ அமிலம், புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம், வளர்ச்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு தக்காளியில் உள்ள லைக்கோபீன் ஒரு அருமருந்து.

    ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள்: இவை உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பிளாக்ஸ் விதைகள், பாதாம், மத்திச் சாளை மீன், சூரை மீன், கணவாய் மீன் போன்றவற்றில் ஒமேகா அமிலங்கள் அதிகளவில் உள்ளது.

    உணவுகளில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, கேரட், பீட்ரூட், முருங்கை காய், முருங்கை கீரை, முருங்கை பூ-விதை, தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பேரிச்சை, அத்திப்பழம், மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு, கடல் உணவுகளில் சூரை மீன், கணவாய், சிப்பி, நண்டு, வாளைமீன், சுறா, இறைச்சி வகைகளில் நாட்டுக்கோழி, வான்கோழி, கோழி முட்டை போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்.

    கருப்புத் திராட்சையின் தோல் மற்றும் விதைகளில் உள்ள 'ரெஸ்வெட்ரால்' என்ற தாவர வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த தமனிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி ரத்த சுற்றோட்டத்தை அதிகரிக்கிறது.

    வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் பிரச்சினை வரலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

    உணவு வகைகளில் மாப்பிள்ளை சம்பா அரிசி, கறுப்புக் கவுனி அரிசி, உளுந்து, வெந்தயம், புடலங்காய், கருப்பட்டி, பாதாம், முந்திரிபருப்பு, கேரட், பீட்ரூட், அறுகீரை, பசலைக்கீரை, பேரிச்சம் பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வேர்க்கடலை, முட்டை, நாட்டுக்கோழி, கடல் உணவுகள் போன்றவை விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கும் சிறந்த உணவுகள் ஆகும்.

    சித்த மருந்துகள்: சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகைகளில், நெருஞ்சில், இந்தியன் ஜின்செங் என்றழைக்கப்படும் அமுக்கராக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, வாலுழுவை, பூமிசர்க்கரைக் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, மதனகாமப் பூ, குங்குமப் பூ, பூனைக்காலி விதை, சாலாமிசிரி, சாரப்பருப்பு இவைகள் நரம்புக்கு நல்ல வலுவைத் தந்து தாம்பத்தியத்தில் திருப்தியைத் தரும்.

    சித்த மருந்துகளில் அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதயம் 100 மி.கி., நாகப்பற்பம் 100 மி.கி., முத்து பற்பம் 100 மி.கி. இவைகளை பால் அல்லது தேனில் மூன்று வேளை சாப்பிட வேண்டும். சாலாமிசிரி லேகியம் 1 கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    உடற்பயிற்சி: இதில் சைக்கிளிங் தான் முதலிடம் வகிக்கிறது. நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு தசைகள் மற்றும், ஆசன பகுதி தசைகளான இஸ்கியோகவர்னோசஸ், பல்போகவர்னோசஸ் தசைகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சைக்கிள் ஓட்டுதல் நல்ல பலனைத் தரும்.

    ஹெகல் பயிற்சி (Hegel Exercise). இது மிகவும் சிறப்பு வாய்ந்த பயிற்சி. இடுப்பின் இரு பக்கமும் கைகளை வைத்து உட்கார்ந்து எழும்புதல், இதை பத்து முறை செய்யலாம். மல்லாந்து படுத்து ஒவ்வொரு கால்களையும் வயிறு வரை மடக்கி பயிற்சி செய்வது, இதையும் பத்து முறை செய்ய வேண்டும். அடுத்து படுத்தபடியே இரு கால்களையும் முடிந்த வரை மேலே தூக்குவது. இவ்வாறு பத்து முறை செய்ய வேண்டும். இதனால் ஆண் உறுப் புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இடுப்பு தசைகள் உறுதியடையும். மற்றும் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் குறைந்து நன்றாக சிறுநீர் கழியும்.

    மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மைகள் நீங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவேண்டும். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. மனதையும், உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்தால் எதுவும் சாத்தியமே.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் ஏராளம்.
    • இதனை இயற்கை வயகரா என்றும் கூறலாம்.

    முள்வகை செடிதானே, கற்றாழை என்று நாம் வெறுமனே கடந்து போய் விடமுடியாது. கற்றாழையில் சோற்று கற்றாழையில் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் ஏராளம். ஆங்கிலத்தில் ஆலோவேரா என்று அழைக்கப்படும் சோற்றுக் கற்றாழை செடியிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் இன்று உலக அளவில் பல நூறு கோடி ரூபாய்களில் வர்த்தகமாகிறது.

    அழகு சாதன பொருட்கள்

    சோற்றுக் கற்றாழையின் வேர் மற்றும் அதன் சதைப் பிடிப்பான இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகின்றன. குறிப்பாக கற்றாழை இலைகளின் உள்ளே இருக்கும் ஜெல் என்படும் கூழில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்கள் உலக அளவில் சந்தை மதிப்பு மிக்கதாக உள்ளன. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் கற்றாழை ஜெல் மேம்படுத்துகிறது. சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றிலும் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது.

    இது உடல் சூட்டைத் தணித்தல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், உடல் எடை அதிகரிப்பை தடுப்பது, பசியின்மை, தீ காயங்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற கற்றாழை பயன்படுகிறது.

    தாம்பத்திய உறவு

    தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக்கற்றாழை பெரிதும் உதவுகிறது. கற்றாழையின் வேர்களை சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து இட்லி குக்கர் அல்லது பானையில், பால் விட்டு அதன் ஆவியில் வேர்களை வேக வைத்து நன்றாக காய வைத்து, பின்னர் அதனை பொடி செய்து தினமும் ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். தாம்பத்தியம் இனிமையாகும். இதனை இயற்கை வயகரா என்றும் கூறலாம்.

    கற்றாழையை பயன்படுத்தும் போது 7 முதல் 10 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். அலோனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கழுவாமல் சாப்பிடும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

    மருத்துவ குணம் நிறைந்த சோற்றுக்கற்றாழையை வீட்டில் வளர்ப்போம்.

    • மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியம் பண்ண முடியவில்லை.
    • உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

    மனித உடலானது உணர்வுகளால் பின்னிப்பிணைந்தது, அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உள்ளது. தற்போதுள்ள வேலை, மனஅழுத்தம், உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியத்தில் ஆர்வம் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது.

    தாம்பத்திய வாழ்வும், உடலோடும், உள்ளத்தோடும் தொடர்புடைய ஒன்றாகும். இது கணவன்-மனைவி உறவை பிணைக்கக்கூடிய முக்கியமான ஒன்று. உங்களைப்போன்று பலர் இந்த பாதிப்பினால் அவதிப்படுகிறார்கள். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ இவைகளில் குறைபாடு இருந்தாலும் தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே இந்த உயிர்ச்சத்துக்கள் குறைவில்லாமல் பார்க்க வேண்டும்.

    அதற்கான சித்த மருந்துகள்:

    1) சாலாமிசிரி லேகியம் ஒரு டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிடலாம்.

    2) அமுக்கரா லேகியம் காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    3) பூமி சர்க்கரை கிழங்கு பொடி அல்லது அமுக்கரா பொடி ஒரு டீஸ்பூன், நாக பற்பம் 100 மி.கி., பூரண சந்திரோதயம் 100 மி.கி. கலந்து காலை, இரவு இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    சிறப்பான தாம்பத்தியத்திற்கு உதவும் உணவுகள்: சைவ உணவுகளில் கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய், தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை, பூசணி விதைகள், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, சாக்லேட், கருப்பு திராட்சை, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கறுப்பு கவுனி அரிசி. அசைவ உணவுகளில் சிக்கன், வான்கோழி, சிகப்பு இறைச்சி வகைகள், முட்டை, பால், வெண்ணெய், சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன். பழங்களில்- நேந்திரம், செவ்வாழை, அவகோடா, பேரிச்சை, அத்தி, மாதுளம்பழம், மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை பழங்கள். இவைகள் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்கி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும். முறையான உடற்பயிற்சிகளும் அவசியம்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • குடிப்பழக்கம் உள்ள கணவரிடம் இருந்து மனைவிக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை.
    • மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.

    'தங்கள் கணவருக்கு இரவில் மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும், அது தரும் போதை தாம்பத்திய உறவுக்கு வலுசேர்ப்பதாகவும் அவர் சொல்கிறார். அது சரியா? தப்பா?' என்ற கேள்வியை திருமணமான பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் எழுப்புவதாக, பாலியல் துறை சார்ந்த டாக்டர்கள் சொல்கிறார்கள்.

    இரவில் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் டாக்டர்கள், மேற்கண்ட கேள்விக்கு அளித்திருக்கும் பதில்:

    "மது அருந்தினால் தாம்பத்ய செயல்பாடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. தாம்பத்திய உறவு என்பது கணவன்- மனைவி இருவரின் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால், 'டெஸ்டோஸ்டிரான்' என்ற ஹார்மோன் அளவைப் பொறுத்தே இந்த செயல்பாடு அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள், உடலில் இந்த ஹார்மோனை வேகமாகச் சுரக்கச் செய்யும்தன்மை கொண்டவை.

    அவை இயற்கைக்கு மாறாக நரம்புகளைத் தூண்டிவிடுவதால், ஊக்க மருந்து உட்கொண்ட விளையாட்டு வீரர்களை போட்டிக்குகூட அனுமதிப்பதில்லை. அது போல் தாம்பத்ய உறவுச் செயல்பாடுகளில் மது சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும்போது, உடல் மரத்துவிடத் தொடங்கும். போதைப்பொருள்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும், உச்சகட்ட நிலை ஏற்படுவதை தடுத்துவிடவும் செய்யும்.

    சிகரெட் பிடிக்கும் ஆண்களால், அதிக வேகத்தில் தாம்பத்ய செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு, உறவின்போது உறுப்பில் வழுவழுப்புத் தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சித்தன்மை ஏற்படுகிறது. இதற்கு, சிகரெட்டில் உள்ள 'நிகோடின்'தான் காரணம். மன உளைச்சலைக் குறைக்க உட்கொள்ளும் சில மருந்துகளுக்குக்கூட இந்தத் தன்மை உள்ளது. அப்படிப்பட்ட மருந்துகளை உட்கொள்ளும்போது பாலியல் செயல்பாட்டு ஆர்வம் குறைந்துபோகும்.

    மது உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நாள்கள் செல்லச்செல்ல, நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்துவிடும். குறிப்பாக, அதிக அளவில் மதுவை உட்கொள்ளும்போது, அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு மாற்றிவிடுகிறது. உறவில் உச்சக்கட்டத்தை உண்டாக்கும் நரம்பு மண்டலத்தை மது நேரடியாகவே தாக்குகிறது. அதனால் அவர்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகம் இருக்கும். ஆனால் இயக்கம் வெகுவாக குறைந்துவிடும்.

    தாம்பத்திய செயல்பாடுகளில் கணவன்- மனைவி இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மது அருந்திய ஆண், அவரது ஆசையை மட்டும் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பாரே தவிர, தன்னுடைய இணையின் ஆசைகளைத் தெரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார். அதனால், குடிப்பழக்கம் கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு முழுமையான பாலியல் இன்பம் கிடைப்பதில்லை. குடிபோதையில் மிகச்சிறப்பான முறையில் பாலியல் இன்பத்தை அனுபவித்ததாக ஆண்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அதனால், பாலியல் உறவில் நிறைவைப்பெறவிடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப் பொருள்களைத் தவிர்ப்பது பாலியல் உறவுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயன் அளிக்கக்கூடியதாகும்.

    தாம்பத்ய இன்பத்துக்காக மதுவை பயன்படுத்துவதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. அதாவது, மது உபயோகித்து உறவுகொள்பவர்களால் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு போதைப்பொருள்கள் இல்லாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடவே முடியாமல் போய்விடும். இது, வாழ்க்கையை சிதைத்துவிடும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மைகளை எல்லாம் பெண்கள், கணவரிடம் எடுத்துக்கூறி, அவர்களை மதுவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவேண்டும்" என்று, செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள்.

    • தாம்பத்தியம் சிறப்பாக அமைய இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.
    • தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய இந்த விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தனக்கான சந்ததியை உருவாக்குவதற்காகவே திருமணத்திற்கு பின் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வழக்கம் இருந்து வருகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.

    தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு.

    தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சில பழ வகைகளை எடுத்துக் கொள்ளவேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட சில பழங்களை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    ஸ்டாபெர்ரி பழம்

    தாம்பத்தியத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஸ்டாபெர்ரி பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஐஸ் க்ரீம்

    ஐஸ்க்ரீம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் தன் துணையுடன் ஒன்றாக சாப்பிடுவது என்றால் கேட்கவா வேண்டும். தாம்பத்திய உறவை துவங்குவதற்கு முன்னதாக ஐஸ்கீரிம் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிட்டு தாம்பத்தியத்தை மேற்கொண்டால் இருவருக்கும் இடையேயான நெருக்கமானது அதிகரிக்கும்.

    திராட்சை பழம்

    தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பது திராட்சை பழம் தான். திராட்சை பழம் சாப்பிட்டால் தாம்பத்திய நேரம் அதிகரிக்குமாம்.

    டார்க் சாக்லேட்

    தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சுரக்கும் ஹார்மோன்களை சீரான முறையில் சுரக்க வைக்க சாக்லேட் அதிகளவு உதவி செய்கிறது. தாம்பத்தியத்திற்கு முன்னதாக தம்பதிகள் சாக்லெட்டை சாப்பிட்டு துவங்கினால் தாம்பத்திய ஆர்வம் அதிகளவு தூண்டப்படும்.

    வாழைப்பழம்

    தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். வாழைப்பழத்தில் தாம்பத்திய ஹார்மோன்களை அதிகரிக்க செய்யும் ஊட்டசத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதன் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றலானது உடனடியாக வழங்கப்பட்டு உடலை சோர்வடையாமல் இருக்க வழிவகுக்கும்.

    மேற்கண்ட பழ வகைகளை தாம்பத்தியத்தின் போது உட்கொண்டால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையானது இனிமையானதாக அமையும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.
    ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.

    மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.

    நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.

    ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.

    இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது. 
    ×