என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "banana tree"
- பாபநாசம் அணையில் திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது.
- 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு தலைவர் செல்லத்துரை தலைமையில் செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் ஏராள மானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்கள் கால்வாய்களில் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படியும், கருகிய வாழைக்கன்றுகளை கையில் ஏந்தியபடியும் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கும், சுத்தமல்லி, கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்களுக்கும், தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கோடகன் கால்வாய் மூலமாக வந்து சேர்கிறது. அதன் மூலம் பாசன வசதி பெற்று நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு வருகிறோம்.
தற்போது பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது. அதன் கீழ் உள்ள சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர முடியாமல் போய்விடுகிறது.
இதனால் நாங்கள் 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
திருப்பூர்:
பல்லடம் வட்டார பகுதியில் தக்காளி, வெங்காயம், புடலை, அவரை உள்ளிட்ட காய்கறி பயிர்கள், தானியங்கள் மற்றும் தென்னை, வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன. நோய் மற்றும் பூச்சி தாக்குதலால், காய்கறி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
அதேபோல் பலத்த காற்று, மழை ஆகியவை வாழைகளுக்கு எதிரியாக உள்ளன. சுழன்றடிக்கும் சூறை காற்றுக்கு வாழைகள் வேருடன் சாய்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் நிலையில் வாழைகளை பாதுகாக்கும் வழிமுறை குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம் கூறியதாவது:-
பல்லடம் வட்டார பகுதியில் நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஓராண்டுக்குள் இவற்றை பாதுகாப்பது என்பது சவாலான காரியமாகும். காற்று, மழை ஆகியவை வாழைகளை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வேலி அமைப்பதன் மூலம் வாழைகள் சேதம் அடைவதை தடுக்கலாம்.
காற்றைத் தடுத்து வாழைகளை பாதுகாப்பதில் சவுக்கு மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலி ஓரங்களில் குறிப்பிட்ட இடைவெளியுடன் இரண்டு அடுக்காக சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும். சவுக்கு மரங்கள் விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதுடன் இவற்றால் விவசாயிகளுக்கு அதிக லாபமும் உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த வாழ்க்கையை நாமும் பின்பற்ற வேண்டும். பிறருக்காகப் பாடுபட வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத் தான் மங்கல நிகழ்வுகளில் தோரணமாக வாழை மரத்தைக் கட்டுகிறார்கள்.
அந்த அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம். உடனே அதற்கு பொங்கல் வைத்து வழிபடுவது செட்டிநாட்டு வழக்கமாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்