என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "balloons"
- 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் எந்திரம் வழங்கினார்.
- பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வை–யிட்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார்.
இதையடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பேரு உதவி புரிந்த 25 பேருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கினார். பயனாளிகள் ஐந்து பேருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார். நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வென்ற நான்கு பேருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கி கௌரவித்தார். சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர விரைவு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, முதியோர் உதவி தொகை பெறும் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்கினார். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதே போல் பல்வேறு திட்டத்தின் கீழ் பயனாளி–களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.1,00,36,964 (ரூ. 1 கோடியே 36 ஆயிரத்து 964) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இது தவிர பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி. கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், போலீசார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாடுமுழுவதும் செல்போன் இன்டர்நெட் சேவைகளை பெறுவதற்காக நகர்ப் பகுதிகள் ஆங்காங்கே செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இணைப்பு வழங்கப்படுகிறது.
தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் செல்போன் டவர்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். மேலும் செல்போன் இன்டர்நெட் இணைப்புகள் சரிவர கிடைப்பது இல்லை.
இது போன்ற பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி. காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன்-இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்களுக்கு இதன் மூலம் செல்போன் இன்டர்நெட் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது ஏர்பலூன் இன்டர்நெட் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இதற்கு ரூ.50 லட்சம் செலவாகும். இது ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையில் இருந்து ரிமோட் மூலம் இயங்கக்கூடியது. அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். 7.5 கி.மீ. சுற்றளவுக்கு இணைப்புகள் கிடைக்கும்.
இந்த சுற்றளவுக்குள் இருப்பவர்கள் பாஸ்வேர்டு இல்லாமலேயே வைபை மூலம் இணைப்பு பெறலாம். தொடக்கத்தில் இன்டர்நெட் இணைப்புகளை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
உத்தரகாண்ட்டில் இமயமலைப் பகுதியில் உள்ள 16,870 கிராமங்களில் 680 கிராமங்களுக்கு இந்த பறக்கும் பலூன் மூலம் இன்டர்நெட்-செல்போன் இணைப்புகள் வழங்கப்படும்.
இது தொலைதூர பகுதிகளுக்கு இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கு உதவவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்-மந்திரி ரவத் தெரிவித்தார். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்