search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayudha pooja"

    • வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
    • லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார்.

    தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வார இறுதியை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை என நீண்ட விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாடினர்.

     

    இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு 2023 ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 1213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் வசதிக்காக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
    • விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் 9-வது நாளில் ஆயுத பூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழில் வளம் பெருகிட, மக்கள் அன்னையின் அருள் வேண்டி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற் கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி, சந்தனம், குங்குமம் இட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நன்னாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து தொழில்களும், செயல்களும் தெய்வ சக்தியின் அருளால் வெற்றியடையும் என்பது நமது நம்பிக்கை.

    அனைவரது வாழ்விலும் அனைத்து செல்வங்களும் தழைத்தோங்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர்.

    தாம்பரம்:

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாளை, நாளை மறுநாள் தொடர்ந்து விடுமுறைகள் வருகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று முன்தினம் முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். அவர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையம், ரெயில்நிலையத்தில் குவிந்தனர். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 950 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்ததால் நள்ளிரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தங்கி இருந்தவர்கள் ஏராளமானோர் சொந்த கார்களிலும் நேற்று இரவு புறப்பட்டு சென்றனர். தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமான அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேடு பஸ்நிலைய பகுதி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதேபோல் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்க சென்னை-திருச்சி நெடுஞ்சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு நேற்று பணிகள் நடந்தன. போக்குவரத்து எதிர்திசையில் மாற்றப்பட்டு இருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரனூர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று சென்றன.

    மேலும் குரோம்பேட்டை தனியார் வணிக வளாகங்களில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்து இருந்ததால் குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் சானிடோரியம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் குறைந்த அளவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆயத பூஜை தொடர்விடுமுறையையொட்டி பஸ்கள், கார்கள், ரெயில்கள் மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் செய்து உள்ளனர். இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வெளியூர் செல்லும் பொதுமக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று சென்னையில் இருந்து இயக்கப்படும் 2100 பஸ்களுடன் சேர்ந்து 950 பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 1545 பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.27.67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு ரூ.15.41 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ரூ.24.53 லட்சம் வரி விதிக்கட்ட நிலையில் ரூ.7.54 லட்சம் வசூலிக்கப்பட்டது. 102 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    • திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே கோயம்பேடு மார்கெட்டில் குவிந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்ல குவிந்தனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    ஆண்டு தோறும் கோயம்பேடு பூ மார்கெட் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் நடத்தி சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்படுவது வழக்கம். மெட்ரோ ரெயில் பணி, ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு சிறப்பு சந்தை நடத்த ஏலம் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பூஜை பொருட்களை வாங்கி சென்றிட வசதியாக மளிகை மார்கெட் வளாகத்தில் கடந்த 18-ந்தேதி அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டது.

    இந்த சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் அவல், பொரி, கடலை, பூசணிக்காய், தேங்காய், வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் பூசணிக்காய் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் வாழைகன்று விற்பனைக்கு வந்திருந்தன. இவை அனைத்தும் கோயம்பேடு மார்கெட்டை ஒட்டியுள்ள "இ மற்றும் ஏ" சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அவல், பொறி, கடலை, வாழைத்தோரணம், பழங்கள் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவல் ஒரு படி ரூ.100-க்கும், பொரி-ரூ.20, கடலைரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளம் பழங்கள் விலையும் அதிகமாக இருந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விலை விபரம் வருமாறு:- ஆப்பிள்-ரூ.200, சாத்துக்குடி-ரூ.100, மாலூர் கொய்யா-ரூ.150, மாதுளம் பழம்-ரூ.250, அவல் ஒரு படி (பெரியது) -ரூ.100, பொரி ஒரு படி-ரூ.20, கடலை ஒரு படி-ரூ.150, நாட்டு சர்க்கரை ஒரு கிலோ-ரூ.100, தேங்காய் ஒன்று-ரூ.20-ரூ.25வரை, வாழை இலை ஒன்று-ரூ.10, வாழைகன்று (10எண்ணிக்கை - 1 கட்டு) -ரூ.100, பூசணிக்காய் (1கிலோ)-ரூ.10, எழுமிச்சை கிலோ ரூ.120, தோரணம் (20எண்ணிக்கை) -ரூ.50, மாங்கொத்து ஒரு கட்டு ரூ.15, வெற்றிலை கவுளி(80 எண்ணிக்கை)-ரூ.40 மஞ்சள் வாழைத்தார் ஒன்று- ரூ.500.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000வசூல் செய்து வருகின்றனர். ஆனால் மார்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் நேரடியாக வியாபாரிகள் பலர் தற்காலிக கடைகள் அமைத்தும் வாகனங்களில் வைத்தும் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவல்,பொரி, கடலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ஆகாமல் அதிகளவில் தேக்கமடைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கண்காணிப்பு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயதபூஜையையொட்டி ஆந்திரா, திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து உள்ளது. பூக்கள் விலை அதிகமாக காணப்பட்டது. சாமந்தி ஒரு கிலோ ரூ.200-க்கும், மல்லி மற்றும் கனகாம்பரம் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வலை விபரம்(கிலோவில்)வருமாறு:-

    சாமந்தி பூ -ரூ.200-க்கும், பன்னீர் ரோஜா-ரூ.150-க்கும், சாக்லேட் ரோஜா-ரூ.250, மல்லி மற்றும் கனகாம்பரம்-ரூ.90, அரளி-ரூ500, ஜாதி-ரூ.450,முல்லை-ரூ.600, சம்பங்கி-ரூ250 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது.
    • தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது.

    பூ மார்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் குப்பம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து இன்று ஏறத்தாழ 80 வாகனங்களில் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. வழக்கமாக தினசரி 40 வாகனங்கள் மூலம் மட்டுமே பூ விற்பனைக்கு வரும். இந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்கள் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ-ரூ.150 முதல் 200வரையிலும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ -ரூ.240-க்கும், மல்லி ஒரு கிலோ ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பூக்கள் விலை மேலும் பல மடங்கு எகிறி உள்ளது.

    மற்ற பூக்கள் விலை விபரம் வருமாறு (கிலோவில்) ஜாதி-ரூ.600, முல்லை-ரூ.700, கனகாம்பரம்-ரூ.1100, அரளி-ரூ.500, சம்பங்கி-ரூ.300. இதேபோல் பழ மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து இன்று 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தினசரி 15 முதல் 20 லாரிகளில் மட்டுமே சாத்துக்குடி விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 நாட்களாக அதன் வரத்து 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. எனினும் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சாத்துக்குடி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ.35 முதல் ரூ40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வகையான ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 10 லாரிகளில் ஏறத்தாழ 150 டன் ஆப்பிள் பழங்கள் விற்பனைக்கு வரும். இதில் தினசரி விற்பனை ஆவது போக மீதமுள்ள ஆப்பிள் பழங்களை வியாபாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட குடோனில் வைத்து பதப்படுத்தி வைத்து பின்னர் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்வது வழக்கம்.

    தற்போது ஆயுத பூஜை பண்டிகை என்பதால் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் அதிகளவில் ஆப்பிள் பழங்களை கொள்முதல் செய்து தங்களது குடோனில் கையிருப்பில் வைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாச்சல் ஆப்பிள் 25 கிலோ பெட்டி -ரூ.5 ஆயிரத்துக்கும், காஷ்மீர் ஆப்பிள் 14 கிலோ பெட்டி- ரூ.2ஆயிரத்துக்கும், இத்தாலி ராயல்கலா ஆப்பிள் 18 கிலோ பெட்டி- ரூ.3800-க்கும், கின்னூர் ஆப்பிள் 10 கிலோ பெட்டி-ரூ.2200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் மாலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பத்தூர் அடுத்த ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொய்யா பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மாலூர் கொய்யா 25 கிலோ பெட்டி ரூ.2 ஆயிரம், மற்ற கொய்யா 25 கிலோ பெட்டி ரூ1200-க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல் மாதுளை மற்றும் மஞ்சள் வாழைத்தார் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மாதுளம் பழம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.180-க்கும், மஞ்சள் வாழைத்தார் ஒன்று ரகத்தை பொறுத்து ரூ.300 முதல் 500 வரை விற்பனை ஆகி வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி மழை பெய்து வருவதால் வெளிமார்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் மூலம் பூஜை பொருட்களை விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மழை தொடருமா என்கிற அச்சத்தின் காரணமாக பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் காரைக்குடிக்கு நாளை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
    • நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது.

    சென்னை:

    ஆயுத பூஜை கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் அறிவித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06039 காரைக்குடிக்கு நாளை (22-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல் எண். 06040 காரைக்குடியில் இருந்து 23-ந்தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேருகிறது.

    நாகர்கோவிலில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் எண்.06046 24-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. எழும்பூரில் இருந்து எண்.06045 சிறப்பு ரெயில் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

    இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் ஏசி 2-ம் வகுப்பு படுக்கை வசதி ஒரு பெட்டி, 3-ம் வகுப்பு ஏசி படுக்கை பெட்டிகள் 5, சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்-11, 2 பொதுப்பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.

    சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    • பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் ஆயுத பூஜையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வதற்கு பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 2,100 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்ததால் கூடுதலாக 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுபோல மற்ற ஊர்களில் இருந்து 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காக நேற்று மக்கள் பஸ் நிலையங்களுக்கு படை எடுத்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாலை 6 மணிக்கு பிறகு பயணிகள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.

    பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறல் ஏற்பட்டது.

    முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பஸ் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களும் கூடுதலாக விடப்பட்டு இருந்தது.

    பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. வடமாநிலங்களுக்கு அதிகளவு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

    நேற்று மட்டும் ரெயில்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். ஆம்னி பஸ்களிலும் சுமார் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சொந்த வாகனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் இன்று காலை முதல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் இன்றும் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

    • பூக்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே உள்ளது.
    • பொரி, கடலை முதல் பழங்கள் வரை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    போரூர்:

    நவராத்திரி விழாவின் கடைசி நாளான ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி வீடுகளில் பூஜை செய்வார்கள். மேலும் கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்திலும் பூஜை போடுவார்கள். இதற்கு பழங்கள், பூக்கள் பெருமளவு விற்பனையாகும்.

    இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பழங்கள், பூக்கள் பெருமளவு வந்து குவிந்துள்ளன.

    பூக்களை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாகவே விலை ஏறுமுகமாகவே உள்ளது. சாமந்தி பூ இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.70 முதல் 90 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பன்னீர் ரோஸ் ரூ.40, சாக்லேட் ரோஸ் ரூ.80, கனகாம்பரம் ரூ.200, மல்லி ரூ.500, சம்பங்கி ரூ.50, அரளி ரூ.100 வரை உயர்ந்து உள்ளது. இன்றைய விலை விவரம் வருமாறு:-

    சாமந்தி கிலோ ரூ.200 முதல் 240, பன்னீர் ரோஸ் ரூ.120 முதல் 140, சாக்லேட் ரோஸ் ரூ.180 முதல் 200, கனகாம்பரம் ரூ.1000, மல்லி ரூ.1200, சம்பங்கி 200, அரளி 400.

    பழங்களை பொறுத்தவரை வாழைப்பழங்கள் உள்ளூரில் பெருமளவு கிடைக்கிறது. ஆப்பிள், காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறது.

    மாதுளை கர்நாடகாவில் இருந்து வருகிறது. சாத்துக்குடி ஆந்திராவில் இருந்து வருகிறது. ஆப்பிள் கிலோ ரூ.120 முதல் 150 வரை விற்கிறது. மாதுளை ரூ.250-க்கு விற்கிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் காய்கறிகள், மளிகை கடைகள் முன்பு தற்காலிக கடைகள் போட்டுள்ளார்கள். பொரி, கடலை முதல் பழங்கள் வரை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள். 

    தற்போது பூ, பழங்கள், காய்கறிகள் எல்லாமே நகரில் பல இடங்களில் ரோட்டோரங்களில் கடைகள் தொடங்கி விற்பனை நடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களும் ஆங்காங்கே பிரிந்து செல்வதால் கோயம்பேட்டில் வழக்கத்தை விட விற்பனை குறைவாக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த 2 நாட்களுக்கு மேலும் விலை உயரத்தான் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.

    • ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.
    • சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை:

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ரெயில் நெல்லை வந்து சேரும்.

    ரெயிலில் உள்ள சாதாரண படுக்கை பெட்டி மற்றும் எக்கனாமிக் ஏசி கிளாஸ் ஆகியவையின் முன்பதிவு டிக்கெட்டுகள் நிறைவு பெற்று காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    நெல்லையில் இருந்து 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரெயில் புறப்பட்டு 25-ந் தேதி அதிகாலை 4.20 மணிக்கு சென்னை சென்றடையும். ரெயிலின் முன்பதிவு நிறைவு பெற்ற டிக்கெட்டுகள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றது.

    தொடர் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமானோர் சொந்த ஊருக்கு வருகை தரும் நிலையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டது.

    சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

    நெல்லை-சென்னை இடையேயான பெரும்பாலான ரெயில்களில் ஏற்கனவே டிக்கெட் விற்றுத்தீர்ந்த நிலையில் சிறப்பு ரெயிலிலும் டிக்கெட் முடிவு பெற்றது.

    • கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
    • வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    சென்னை:

    ஆயுத பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வெளியூர் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கி வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

    ஆன்மிக தலங்கள், சுற்றுலா மையங்களுக்கு குடும்பமாக செல்வதால் பஸ், ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்களும், பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து இன்று வழக்கமாக செல்லும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், மதுரவாயல் பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. 

    கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களில் சொந்த ஊர் செல்வதற்கு மாலையில் இருந்தே கூட்டம் கூடத்தொடங்கும் என்பதால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

    சென்னையில் இருந்து மொத்தம் 3100 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் நெரிசல் இல்லாமல் செல்ல விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் நாளையில் இருந்து விடுமுறை என்பதால் கார்களிலும் பயணத்தை மேற்கொண்டனர். சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன.

    வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் நிரம்பின.

    இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே களை கட்டியது. கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரெயில்களும் நிரம்பி காணப்பட்டன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. அதில் இடங்களை பிடிக்க பயணிகள் போட்டி போட்டனர்.

    குருவாயூர், சோழன், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், வைகை, பல்லவன், தேஜாஸ், வந்தே பாரத் உள்ளிட்ட பகல் நேர ரெயில்களில் பயணிக்க கூட்டம் அலைமோதியது.

    மாலையில் புறப்பட்டு செல்லக்கூடிய கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பியதால் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க 3 மணி நேரத்திற்கு முன்னதாக காத்து நின்றனர். இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று எல்லா பிளாட்பாரத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    இன்று மாலையில் இருந்து படிப்படியாக கூட்டம் அதிகரித்து நள்ளிரவு வரை பஸ்களில் பயணம் செய்யக்கூடும் என்பதால் அதற்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளையும் அதிகளவில் மக்கள் வெளியூர் புறப்பட்டு செல்வதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×