search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Axar patel"

    • டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
    • இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
    • டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

    ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன.
    • அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.

    அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.

    அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.

    அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

    டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.

    அவர் சிக்சர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம். ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.
    • அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய முன்னனி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார்.

    அவரது தலைமையின் கீழ் விளையாடிவரும் அந்த அணி முதல் 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர் என்றும், சிறந்த பார்மில் உள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது.
    • இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம்.

    16-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஆட்டங்களை சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் அக்சர் படேல் ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.

    இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார். இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.

    என்று வார்னர் கூறினார்.

    இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.

    • துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    2023 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வந்தார். அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் இந்த சீசனில் ரிஷப் பந்திற்கு பதிலாக வார்னர் கேப்டனாக செயல்பட உள்ளார் என டெல்லி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும் துணை கேப்டனாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    அதில் டேவிட் வார்னர், அக்சர் படேல் இந்த இருவரின் தலைமையில் இந்த #IPL2023 சத்தமாக கர்ஜிக்க தயாராக உள்ளது என்று தலைப்பிட்டிருந்தது.

    வார்னர் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2009-ல் டெல்லி உரிமையுடன் (அப்போது டெல்லி டேர்டெவில்ஸ்) தொடங்கினார். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அவர் 2016 -ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார்.

    போட்டியின் கடந்த பதிப்பில், வார்னர் 12 போட்டிகளில் கேபிடல்ஸ் அணிக்காக 150.62 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 432 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் ஐந்து அரை சதங்களை அடித்தார்.

    • ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
    • ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.

    நாக்பூர்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் நாளிலேயே 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். 171 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 120 ரன்களில் விக்கெட்டை இழந்தார். முன்னதாக அஸ்வின் 23 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டாட் மர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவை விட இந்தியா 144 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

    • கடந்த ஆண்டு அக்‌ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
    • இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் போது அக்ஷர் படேல் மேடையில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 தொடரில் அறிமுகமானார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    இதுதவிர, ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    ×