search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auto collision"

    • ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் விவசாயி.
    • புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை ஏரிப்பா ளையத்தை சேர்ந்தவர் ராம தாஸ் (வயது 56). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது அங்குசெட்டிபாளையம் அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே சென்ற போது, எதிரில் வந்த ஆட்டோ விவசாயி மீது மோதியது.

    இதில் பலத்த காயம டைந்த விவசாயி ராமதாசை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விவசாயி ராமதாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார்? என விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில்வே நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாரா தவிதமாக மூதாட்டி மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிசிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை போக்குவ ரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போ லீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான மூதாட்டி யார் ? எந்த ஊர் ? என்ற விசாரித்து வருகின்றனர்.

    • ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர்.
    • 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅடுத்த செம்மேடு ஏரிப்பாளையம்கிராமத்தில் இருந்துஆட்டோ இன்று காலை பண்ருட்டி நோக்கி வந்தது.இந்த ஆட்டோவில் உறவினர் ஒருவரின் கரும காரிய நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கஒரு குடும்பத்தினர் வந்தனர். இந்த ஆட்டோசேலம் மெயின் ரோடுவளைவில் திரும்பும் போது எதிரே மணப்பாக்கத்தில் இருந்து வந்த மற்றொருஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்ேடா டிரை வர்கள் மற்றும் ஆட்டோ வில் வந்த 8 பெண்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றுஅனைவரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துஇது குறித்து விசாரணை நடத்தினர்.

    • வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் அனுமந்தபேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). கூலி தொழிலாளி.

    இவர் தினமும் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் வேலைக்கு சென்று திரும்பி வருவது வழக்கம். நேற்று முன்தினம் முத்துசாமி வேலை முடிந்ததும் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் வந்த போது பின்னால் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவரது சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தது கிடந்தார்.

    தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி அம்புஜம் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) கூலி தொழிலாளி நேற்று மாலை சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சோலூர் பகுதியை சேர்ந்த தேவன் என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி ஆகினர்.
    • புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மகன் சதீஷ் (வயது24) பெயிண் டர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தபெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    பெண் வீட்டில் விருந்து முடித்துவிட்டு தன் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் நேற்று வந்து கொண்டுஇருந்தார்.புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோமோதியது. இந்த விபத்தில்புதுமாப்பிள்ளை சதீஷ் ஆட்டோவில் வந்த புஷ்பா (45) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

    ஆட்டோவில் வந்த, பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (38), சின்னப்பொன்னு (55), சிவகாமி (34), பரிமலா(27), நிஷாந்தி (28), மலர் கொடி(49), செண்பகம் (36), ஆட்டோ டிரைவர்அரிதாஸ் (24) ஆகிய 8 பே ர்காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×