search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempted suicide"

    • கணவன்-மனைவி இடையே தகராறு எதிரொலி
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி தமிழ ரசி(வயது26). இவர்களுக்கு டெசிகா(4), பூமிகா(2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சந்ேதாஷ் தினசரி மது குடித்து விட்டு தான் வீட்டி ற்கு வருவார். அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து கொண்டு இருந்தார்.

    இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மனைவியிடம் அப்படிதான் குடிப்பேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழரசி 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி சாணிப்பவுரை கரைத்து முதலில் தனது 2 குழ ந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

    இரவு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக விரக்தி
    • 70 அடிஆழ கிணற்றில் குதித்ததால் வலது கை துண்டானது

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி அடுத்த அரசன் காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது27).

    இவரது மனைவி பவதாரிணி(25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்த படி வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் 2 பேரும் 6 மாதமாக காதலித்து கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் அரசன் காட்டில் உள்ள கார்த்திகேயனின் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, கார்த்திகேயன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் ரூ.5 ஆயிரம் இருப்பதாக கூறி அதனை கொடுத்துள்ளார். ஆனால் கார்த்திகேயன் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ள்ளது.

    இதனால் கோபம் அடைந்த பவதாரிணி, வீட்டை விட்டு வெளியில் வந்து, அங்கிருந்த 70 அடி கிணற்றில் குதித்து விட்டார். இதில் அவரது வலது கை துண்டானது.

    இதனை பார்த்த கார்த்திகேயன் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் குதித்த பவதாரிணியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும்
    • அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் ஜெகநாதன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெகநாதன் திடீரென சாணிப்பவுடரை கரைத்து குடித்தார்.

    சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் என்ன நடந்தது என கேட்டனர். அதற்குள் அவர் மயங்கி னார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஜெயநாதனை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ஜெகநாதனை டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சென்றனர்.

    ஆனால் மாணவர் மயக்கமாக இருப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக ஜெகநாதன் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்னர் தான் எதற்காக சாணிப்பவுடரை குடித்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார்.
    • லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த வாரம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு மயானத்தில் நடந்தது. அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.

    அந்த சமயம் மகளின் சிதை அருகே கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனே வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.

    இதில் லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் இறந்ததில் இருந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் துக்கம் தாங்காமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    • நண்பர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    • குனியமுத்தூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    கோவை,

    கோவை கணபதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் குனியமுத்தூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவர் தனது கல்லூரி நண்பர் சேவுக பழனி (30) என்பவருக்கு ரூ.3.75 லட்சம் கடன் கொடுத்தார். பின்னர் அந்த பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் நவீன்குமார் பல முறை கேட்டார்.

    ஆனால் சேவுக பழனி பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில், தொழிலை மேலும் விரிவு செய்ய நவீன்குமார், சபரிநாதன்(35) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து தினசரி அவர் ரூ. 2 ஆயிரத்தை செலுத்தி வந்தார்.ஆனால் சபரிநாதன் கூடுதல் வட்டி கேட்டு தொந்தவு செய்ததாகவும், இல்லையென்றால் ஓட்டலை தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியதாக தெரிகிறது. நண்பர் பணம் வாங்கி மோசடி செய்ததாலும், கடன் தொல்லையாலும் அவதிப்பட்டு வந்த நவீன்குமார் மனவேதனை அடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 28-ந் தேதி நவீன்குமார் காரமடையில் வைத்து விஷம் குடித்து மயங்கினார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குரும்பபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் நவீன்குமார் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கூடுதல் வட்டி கேட்டு கொடுமைபடுத்திய மதுக்கரை சீராபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் (35) மற்றும் நவீன்குமாரிடம் கடன் வாங்கி மோசடி செய்த அவரது நண்பர் பன்னிமடையை சேர்ந்த சேவுக பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
    • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

    ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • விடுதியின் 2-வது தளத்துக்கு சென்ற மாணவி திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சரவணம்பட்டி,

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த 17 வயது மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று மாலை 5.45 மணி அளவில் விடுதியின் 2-வது தளத்துக்கு அந்த மாணவி சென்றார். அங்கிருந்து திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் மாணவி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவி, அவரது சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது.
    • மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆய்வகத்தில் அறிவியல் ஆசிரியர் பாலி யல் தொல்லையில் ஈடுபட்ட தால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று ள்ளார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே விநாயகபுரம் கொழை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 55). இவர் அங்குள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் 10-ம் வகுப்பு அறிவியல் ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளியில் உள்ள ஆய்வக த்தில் இருந்தபோது, 10-ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது டைய மாணவி தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவியிடம் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஏன் என்னுடன் சரியாக பேசு வதில்லை என்று கூறி, மாண விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மாணவி விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்த மாணவியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடம் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மாணவி க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி மாணவியின் தாய் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தமிழ்ச்செல்வனை ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர்கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் நீதிபதி வீட்டில் தற்கொலைக்கு முயன்ற காவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். #policemandeath
    சென்னை:

    சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற காவலர் கடந்த புதன்கிழமை திடீரென துப்பாக்கியால் சுட்டு கொண்டார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், சரவணனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதி வைத்திருந்தார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக சரவணன் பணிபுரிந்து வந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சரவணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார். #policemandeath
    தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பொழிச்சலூர் பாரதி தெருவை சேர்ந்தவர் காஜா மொய்தீன். மீன் வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினார்கள். இதனால் காஜா மொய்தீன் அவதிப்பட்டார்.

    மனம் உடைந்த காஜா மொய்தீன் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று இரவு காஜா மொய்தீன், அவரது மனைவி சர்மிளா (30), மகள் பர்தானா (12), மகன் முகமது ஆசிப் (8) ஆகிய 4 பேரும் உணவில் பூச்சி மருந்து கலந்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் வாந்தி எடுத்து உயிருக்கு போராடினார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து குடும்பத்துடன் வி‌ஷம் கலந்து உணவை சாப்பிட்டு விட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.

    அக்கம் பக்கத்தினர் இது பற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் ஆப்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் கணவன்-மனைவி இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கும், 2 குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×