என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Asthma"
- வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது.
- தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும்.
கொசுவத்திச் சுருள் ஏற்றினால் வீட்டில் சிலருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது. கொசுவத்திச் சுருள் எரியும் போது வரும் புகையானது, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருட்கள் அடங்கியதாகும். மூச்சுத் திணறல், மற்றும் சுவாசக் கோளாறு முதலியவைகளை இந்த புகை உண்டாக்கக்கூடியது.
தினமும் கொசுவத்திச் சுருள் கொளுத்தி வைத்துக் கொண்டு தூங்கும் போது, அந்த புகையை சுவாசிக்க நேரிடும். இது பல நாட்கள் தொடரும் போது நுரையீரல் அடைப்பு நோயை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தையே பாதிக்கச் செய்யலாம். அத்துடன் சரும எரிச்சல், கண் எரிச்சல், அலர்ஜி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நரம்பு பாதிப்பு, மூளை பாதிப்பு, சில சமயங்களில் புற்றுநோயைக் கூட உண்டாக்கும் ஆபத்து உள்ளது.
சிகரெட் புகையின் பாதிப்பு எப்படியோ அதே போன்றது தான் கொசுவத்திச்சுருள் புகையின் பாதிப்பும். நீங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்குக்கூட (குறிப்பாக பூனை) கொசுவத்திச் சுருளின் புகை ஒத்துக்கொள்ளாது.
கொசுவத்திச் சுருள் புகை மட்டுமல்ல திரவ வடிவிலான கொசு விரட்டி, களிம்பு, தெளிப்பான், ஆவி பிடிக்கும் கருவி இவைகளும் கூட பாதுகாப்பானதல்ல.
கதவு - ஜன்னல்களெல்லாம் மூடப்பட்ட அறையில் நீங்கள் கொசுவத்திச் சுருளை கொளுத்தி வைத்துக் கொள்ளும்போது, அதில் இருந்து வரும் புகையைத் தான் படுக்கப் போனதில் இருந்து மறுநாள் காலை வரை சுவாசிக்க வேண்டும். காற்றையும், உடலையும் மாசுபடுத்தும் ரசாயனப் பொருட்களை நாம் அதிக நாட்கள், அதிக நேரங்கள் சுவாசிக்க சுவாசிக்க அது நுரையீரல் கோளாறை உண்டு பண்ணிவிடும்.
கொசுத்தொல்லையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரமான கொசுவலைகளை உபயோகிக்கலாம்.
பூண்டு எண்ணெய்யை அறையில் தெளித்தால் கொசு வராது. எலுமிச்சைச் சாறு, துளசி எண்ணெய், வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவைகளையும் தூங்கும் அறைகளில் பயன்படுத்தலாம். வீடுகளில் சமையலுக்கு தினமும் பயன்படுத்தும் பூண்டு உரித்த தோலை சேகரித்து வைத்து அதை அறைகளில் எரித்தால் வரும் புகை கொசுவை விரட்ட பயன்படும். இம்மாதிரி காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, காய்ந்த யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து புகை உண்டு பண்ணி பயன்படுத்தலாம். இவைகள் பாதுகாப்பானதும்கூட.
- நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
- கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
மழைக்காலம் என்றாலே `ஜில்' என்ற உணர்வும், மகிழ்வும் தோன்றும். தென்றல் காற்று மெல்ல வாடைக்காற்றாக வீசி தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும். உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும். மழையில் நனைந்து ஆட்டம் போட விரும்புவர்களுக்கு இது உற்சாக காலம்.
மழைக்காலத்தை பலர் விரும்பினாலும், அப்போது தோன்றும் சில நோய்கள் மக்களை வாட்டுவதும் உண்டு. மழைக்காலத்தை அனுபவிக்கும் அதேநேரத்தில், அந்தக்காலத்தில் வரும் நோய் ஆபத்துகள், பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது. நமது வீட்டின் சமையல் அறையின் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக்கொண்டே நோய்களை நம் முன்னோர்கள் விரட்டியடித்துள்ளனர். அத்தகைய மகத்துவம் நிறைந்த சித்த மருத்துவம் எந்த அளவுக்கு மழைக்காலத்தில் நமக்கு பலன் தரும் என்பதை பார்ப்போம்.
டெங்கு காய்ச்சல்
ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, இந்நோய் கடுமையான காய்ச்சல், வாந்தி, எலும்பு வலி, கண்களுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்நிலை தீவிரமானால் உயிரிழப்பு கூட ஏற்படும். ஆகவே காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க உதவும் ஆடைகளை அணியவும்.
மருந்துகள்:
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் - பெரியவர்கள் 60 மி.லி. வீதம் இருவேளையும், சிறுவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். ரத்த தட்டணுக்கள் குறைந்தால் கூடவே பப்பாளி இலைச்சாறு பெரியவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 10 மி.லி. வீதம் இருவேளை சுவைக்காக தேன் கலந்து குடிக்க வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு, பெரியவர்கள் 15 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 5 மி.லி. வீதம் இருவேளை குடிக்க நல்ல பலனை தரும்.
சிக்குன்குனியா
மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் சிக்குன்குனியா. ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் காய்ச்சல் அடிக்கத்தொடங்கும். அப்போது, கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், உடல் சோம்பல், பலவீனம் காணப்படும்.
மருந்துகள்:
சிக்குன்குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீருடன், அமுக்கரா மாத்திரை, வாத ராட்சசன் மாத்திரை, விஸ்ணு சக்கர மாத்திரைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.
தலைபாரம், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள்
மழைக்காலத்தில் தலைநீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோயில் கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.
மருந்துகள்:
சுத்தமான உப்புநீர்க் கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் மஞ்சள்தூள் போட்டு போர்வையால் நன்கு மூடிக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அல்லது நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.
தாளிசாதி சூரணம் 1 கிராம் அல்லது திரிகடுக சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். தலைக்கு தேய்த்து குளிக்க சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் இவற்றில் ஒரு மருந்தை பயன்படுத்தலாம்.
சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்:
மழைநீரில் நனைந்தாலும் அல்லது தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்துக்கொள்ள வேண்டும். இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயிறு வகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.
ஜன்னலோர பஸ் பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா
மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். தூசி, புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது.
இரைப்பு நோயை குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
சித்த மருந்துகள்:
1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.
2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.
3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
பொதுவான நோய் தடுப்புமுறைகள்
பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவற்றை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலை பயன்படுத்துவது நல்லது.
சேற்றுப்புண்
மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு பாதிப்பு, 'சேற்றுப்புண்' ஆகும். இந்நோயில் விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்தில் புண்கள் மற்றும் நீர்க்கசிவு, அரிப்பு, வலி இவை காணப்படும். சேற்றுப்புண் பாதித்த பகுதிகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி படிகார நீர் விட்டு துடைத்து, கிளிஞ்சல் மெழுகு அல்லது வங்க வெண்ணெய் போட்டு வர, சேற்றுப்புண் ஆறி வரும்.
தொண்டை வலி
மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இந்நோயால் தொண்டைவலி, குரல் கம்மல் இவற்றுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன.
இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்து வரவேண்டும். சூடாக தேநீர், காபி அடிக்கடி இந்நேரங்களில் குடிக்கலாம்.
மருந்துகள்:
பூண்டு சிறிதளவு எடுத்து, அதை இடித்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து லேசாக நெருப்பில் வாட்டிப் பிழிய, அதிலிருந்து சாறு வரும். அதனுடன், சிறிதளவு தேன் கலந்து உள்நாக்கு அழற்சி உள்ள பகுதியில் காலை, இரவு என இருவேளைகளில் தடவி வர, தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். உள்நாக்கு அழற்சியும் குணமடையும்.
ஆடாதோடை, மிளகு, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு என இருவேளை மென்று சாப்பிடலாம். சின்ன வெங்காயத்துடன், நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட உள்நாக்கு அழற்சி வலி மாறும். வெற்றிலை, கிராம்பு, மிளகு இதனுடன் உலர் பழங்கள் அல்லது நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட்டு வரவேண்டும்.
தாளிசாதி வடகம், துளசி வடகம் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தொண்டை சதை அழற்சி நீங்கும். கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி நீங்கும்.
பாலுடன் மஞ்சள், மிளகு கலந்து காலை, இரவு அருந்தலாம். முட்டையை வேகவைத்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்து சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் வைத்து சாப்பிடலாம். நோயற்ற வாழ்வுக்கு எப்போதும் வெந்நீரையே அருந்த வேண்டும்.
- நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா
- அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது.
இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றில் இருந்தும் புற்று நோயில் இருந்தும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
அறிகுறிகள்
நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போதுபூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.
ஆஸ்துமா, அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?
இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப்பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது.
இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும்போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று சொல்வார்கள்.
அலர்ஜி, ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை
அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் இன்ஹெல்லர்-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு இன்ஹெல்லர் எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இன்ஹெல்லர் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயில் இருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேல்லரை பயன்படுத்திய பிறகு வாய்க்கொப்பளிப்பது அவசியம்.
அதேபோல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேல்லர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் அலர்ஜி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்வது போன்றவை இன்றியமையாதது.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?
புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.
ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?
தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரசிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?
நிச்சயமாக இல்லை, புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம். பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்
நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.
நுரையீரல் வீக்கம் என்றால் என்ன?
நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி. வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passivesmoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் இன்ஹெல்லர் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.
பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?
பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் இன்ஹெல்லர் சிறந்த தீர்வு.
என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.
முகக் கவசம் உபயோகப்படுத்துவது தேவையா?
தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.
- சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
- சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாசம் மேம்படும்
துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.
சரும பாதுகாப்பு
துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
செரிமானம்
அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.
அழற்சி
துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.
மன நலம்
துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.
ரத்த சர்க்கரை
துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.
எடை மேலாண்மை
துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.
இதய ஆரோக்கியம்
துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.
- இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
- தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.
திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.
உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.
ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.
முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.
நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.
முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.
இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.
சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.
திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.
ஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும். மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.
இந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.
ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.
அப்படியே ஆஸ்துமாவை ஏற்றுக்கொண்டாலும் இன்ஹேலர் வைக்க வேண்டும் என்று சொன்னாலோ, நெபுலைஸர் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலோ கேட்பதில்லை. பெற்றோரின் அறியாமையால் கடைசியில் குழந்தைதான் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளிடம் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுப் பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
‘‘நிறம், மணம், சுவை கிடைப்பதற்காக, உணவைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் குடல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த வேதிப் பொருட்களால் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாவதற்கும் 5 சதவிகித வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தை திடீரென்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதற்கு உணவுப் பொருட்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஐஸ்க்ரீம் வகைகள், குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுகளில் இந்த வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளே ஆஸ்துமாவை உண்டாக்குகின்றன.
அதனால், குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் சமீபத்தில் குழந்தை என்ன சாப்பிட்டது என்பதை பெற்றோர் கவனித்து, குறிப்பிட்ட உணவை அதன்பிறகு தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இல்லாமலே சளி ஏற்படுவது, இருமலுடன் வாந்தி, 10 நாட்கள் வரை சளித் தொல்லையால் குழந்தை அவதிப்படுவது போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.
“ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள். இது மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்னை என்பதால், நேரடியாக அவற்றுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஆகவேதான் ஆஸ்துமாவைப் பொறுத்தவரை, மாத்திரைகளுக்குப் பதில் இன்ஹேலர் மூலம் மருந்து உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும்போல சில பக்கவிளைவுகள் இருக்கின்றன. மாத்திரை வடிவில் அந்த மருந்துகளை உட்கொள்ளும்போது, அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து, பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹேலர் வழியாக உறிஞ்சும்போது, மருந்து நேரடியாக நுரையீரலைச் சென்றடையும் என்பதால், பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.
பரிசோதனைகள்
பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சுத்திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, தொடர்ச்சியாகப் பேசுவதில் சிக்கல் இருக்கிறதா, குடும்பப் பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா தொந்தரவு இருந்திருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.
அடுத்தகட்டமாக, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (Lung Function Test) செய்யப்படும். குறிப்பாக, `பல்மனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ (Pulmonary Function Test) செய்யப்படும். ‘மெத்தகோலின் சேலஞ்ச் டெஸ்ட்’ (Methacholine Challenge Test), ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) இயந்திரப் பரிசோதனை, பீக் ஃப்ளோ போன்றவற்றையும் செய்ய வேண்டும். மூச்சுக்குழாயின் சுவாசப்பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என்பது இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கேற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹேலர் அளிக்கப்படும்.
ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க…
ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுகள் வேகமாகப் பரவும். எனவே, அந்தக் காலகட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. அவற்றை முறையாக உட்கொண்டால், பிரச்சனைகள் ஏற்படாது.
தினமும் சரியான அளவு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து, காலத்துக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஆஸ்துமா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள், தங்களுக்கு எத்தகையச் சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, எத்தகையச் சூழலிலும் அறிகுறிகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது.
குழந்தைகளிடையே மிக நாட்பட்ட நோயாக கருதப்படுவதும் இந்நோய்தான் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இந்நோய் அடிக்கடி தாக்காமல் இருக்க ஒவ்வாமையை தவிர்க்க வேண்டும்.
காற்றின் மூலம் பரவும் கிருமிகளால் இந்நோய் தூண்டப்படுகிறது. காய்ச்சல், புகைபிடித்தல், புகை, காற்று மாசு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு, குளிர் காலம், நல்ல மணம் போன்றவை ஆஸ்துமாவை தூண்டுவதற்கு காரணமாக இருக்கின்றன. பதற்றத்தை தவிர்த்தால் பாதி நோய் நீங்கிவிடும் என்பது ஆஸ்துமாவுக்கு சரியாக பொருந்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்காக பழைய சினிமா பாடல்களை டாக்டர்கள் பாடினர். இந்த பாடல்களில் சரியான ரிதத்தில் மூச்சை நிறுத்தி வெளியிட்ட விதம், மூச்சுப்பயிற்சிக்கு நல்ல உதாரணமாக இருந்தது.
ஆஸ்துமாவை தவிர்க்க என்ன செய்யவேண்டும்? என்பது பலரது கேள்வி. நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்துமா ஒரு அரிய நோய். இன்றோ இது பெருவாரியாக இருக்கிற நோயாக வளர்ந்துவிட்டது. ஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சம் பேர் ஆஸ்துமா பாதிப்பு காரணமாக உயிரிழக்கின்றனர். மரபுவழி பாதிப்பைவிட சுற்றுச்சூழல் மாசு, மாறி வரும் வாழ்க்கை முறையே ஆஸ்துமா நோயை வரவழைக்கின்றன. நெஞ்சு இறுக்கம், தீவிரமான நீடித்த இருமல், குறுகிய மூச்சு, மூச்சிளைப்பு ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகள்.
‘அலர்ஜி‘ எனப்படும் ஒவ்வாமையே ஆஸ்துமாவுக்கு முக்கிய காரணம். செல்லப்பிராணிகள், எலி, கரப்பான் ஆகியவற்றில் இருந்துகூட இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது.
உலகில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் பாதி பேர், ஒவ்வாமை மூலமாகவே ஆஸ்துமா நோயை பெற்றிருக்கிறார்கள். ஒவ்வாமை இல்லாமலும், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமலும், வயதான பிறகு இந்நோயை பெற்றவர்களாக ஏராளமானவர்கள் உள்ளனர்.
சாதாரண சளிபிடித்தலில் தொடங்கி படிப்படியாக மூச்சிளைப்பு வந்து, ஆஸ்துமா நோய் பெரும் கஷ்டத்தை கொடுக்கக்கூடியது. புகைபிடிப்பது ஆஸ்துமா நோயை அதிகரிக்கச் செய்யும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் புகைபிடித்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஆஸ்துமா நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
விசிலை விழுங்கியது போல, மூச்சு விடும் போதெல்லாம் விசில் சத்தம் சேர்ந்து ஒலிக்கும். தூக்கம் தொலையும். பசி மறக்கும். ‘எப்போ சரியாகும்’ என உடலும் மனதும் அழும். சுருக்கமாக சொல்லப் போனால், அந்த அனுபவம் நரக வேதனை... அதுதான் ஆஸ்துமா!
குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருப்பதைப் பல பெற்றோரும் தாமதமாகவே கண்டு பிடிக்கிறார்கள். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது, குழந்தையின் பேச்சுத் திறமை பாதிக்கலாம். அதாவது வாக்கியங்களாகப் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் பேச்சு, நோயின் பாதிப்பால், வார்த்தைகளாகக் குறையும். கோபமும் பதற்றமும் அதிகரித்து, ஒருவித எரிச்சல் மனநிலையிலேயே இருப்பார்கள்.
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் பலருக்கு ஆஸ்துமா நோய் தாக்கம் ஏற்படுகின்றது.மாசடைந்த சூழழும் தூசி அலர்ஜி போன்றவைகளினாலும் எண்ணற்ற குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் உபயோகிக்கும், படுக்கையறை, பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஆஸ்துமா நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்கின்றனர் குழந்தை மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் பரம்பரை நோயல்ல. அதிகபட்சமாக குழந்தை பருவ ஆஸ்துமா நோய் அலர்ஜியால் ஏற்படக்கூடியது. பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டுத்தூசு, மிருகக்கழிவு, போன்றவற்றால் இது ஏற்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகளை இந்த ஆஸ்துமா தாக்குகிறது. குளிர்காற்று, வீரியம் மிக்க வாசனை, புகை போன்றவற்றாலும் வைரஸ் நுண்கிருமிகள் மூலம் ஏற்படும் தொற்று நோயாலும் ஏற்படக்கூடும்.
ஆஸ்துமா ஏற்படாமல் இருக்க சுத்தமாக வீடுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.புகை பிடிப்பவரின் அருகில் தூசி படியும் இடங்களில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்..நாய்,பூனை போன்றவைகளின் முடிகளால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. சில குழந்தைகளுக்கு சத்து குறைவினாலும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐதராபாத்தில் ஆண்டு தோறும் மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பத்தினா சகோதரர்கள் குடும்பத்தினர் கடந்த 175 ஆண்டுகளாக இந்த சிகிச்சையை அளித்து வருகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான மீன் மருத்துவ மூலிகை சிகிச்சை இன்று ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சி மைதானத்தில் குவிந்தனர்.
தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை பெற குவிந்துள்ளனர். இங்கு வருபவர்களுக்கு டோக்கன் வழங்குவதற்காக 40 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 மொபைல் கவுண்டர்களும், 2 வி.ஐ.பி. கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறிய மீன் வாயில் மூலிகை மருந்து வைத்து ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் வாயில் போட்டு விழுங்க சொல்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு குடிக்க மோர் கொடுக்கிறார்கள். இந்த மருந்தை சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா நோய் குணம் ஆகிறது.
இன்றும், நாளையும் நடக்கும் இந்த முகாமில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக 1 லட்சத்து 32 ஆயிரம் சிறிய மீன்களை தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 2 நாள் முகாமில் சிகிச்சை பெற முடியாதவர்கள் பத்தினா சகோதரர்களின் வீட்டுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.
மீன் மருத்துவ முகாமையொட்டி ஐதராபாத் மகாத்மா காந்தி பஸ் நிலையம், ஜூப்ளி பஸ் நிலையம், நாம் பள்ளி, செகந்திராபாத், காட்சிகுடா ரெயில் நிலையங்கள், சம்சா பாத் விமான நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 133 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 1000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தாகம் தீர்க்க இலவசமாக தண்ணீர் பாக்கெட்டுகள், மோர் வழங்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. #Asthma
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்