search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asia Cup hockey"

    • ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை.
    • இந்திய அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

    இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

    ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது'குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.

    அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் நாளை நடைபெறும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
    ஜகார்த்தா:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தென் கொரியாவுடன் இன்று மோதியது.

    இதில், இந்திய அணி 4 - 4 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை டிரா செய்தது. இதன்மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே, தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 5 புள்ளிகள் பெற்றுள்ளன. கோல்களின் அடிப்படையில் தென் கொரியா, மலேசியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

    நடப்பு சாம்பியனான இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்திய அணி, நேற்று நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வென்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவானது. இந்திய வீரர்கள் விஷ்ணுகாந்த் சிங், எஸ்.வி.சுனில் மற்றும் சஞ்சீப் எக்செஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி, இன்று வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 
     
    இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொண்டது. 

    இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
    அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேந்திர லாக்ரா தலைமையிலான  இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'  செய்தது.

    அடுத்த ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று இந்தோனேசியாவை எதிர்கொண்டது. 

    இந்த ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் திப்சன் டிர்கி மற்றும் அபாரன் சுதேவ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். 

    திப்சன் டிர்கி 4 கோல்களும்,  சுதேவ் ஹாட்ரிக் கோல் அடித்தனர். மேலும் இந்திய வீரர்கள் செல்வம், பவன், எஸ்.வி.சுனில் பிரேஸ் கோல் அடித்து அசத்தினார். 

    இதனால் இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    ×