என் மலர்
நீங்கள் தேடியது "arrested in POCSO"
- சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.
இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
- 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
- சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.
சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
- பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
காரைக்கால், நவ.16-
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்;
- சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காடையாம்பட்டி:
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பழக்கம்
இந்த நிலையில் சேலம் அருேக சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 47). இவருடைய உறவினர் ஒருவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனீஷ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த உறவினர் வீட்டுக்கு லட்சுமியின் மகன் ரமேஷ்குமார் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரமேஷ்குமாரின் தாய் லட்சுமி, தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தார். ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மகனுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க லட்சுமி முடிவு செய்தார்.
சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்த அவர், நைசாக பேசி சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.
புகார்
கடந்த 22-ந்தேதி லட்சுமி, டேனீஷ்பேட்டைக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் நைசாக சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ரமேஷ்குமாருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தபோதும், மகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் மகள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியாததால் கவலை அடைந்த பெற்றோர் இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பத்திரமாக மீட்பு
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை லட்சுமி கடத்தி சென்றிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதமாக எடுத்தனர். பொம்மிடிக்கு சென்று சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார், லட்சுமி மீது குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
கோவை,
பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவரது உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரிபுதூரில் உள்ளது. இதனால் அந்த சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவீன்குமார் (19) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நட்பாக பழகி வந்தனர். அது நாளடையில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அப்போது நவீன்குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரம் வீட்டை விட்டு வெளியேறி செஞ்சேரிபுதூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் நவீன்குமார் சிறுமியை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தனது பெற்றோரிடம் சிறுமி மேஜர் என கூறியுள்ளார். பின்னர் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று அங்கு குடும்பம் நடத்தினார்.
அப்போது பல முறை சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் இருவரும் பிரிந்தனர். சிறுமி தனது தாய் வீட்டுக்கு வந்தார்.
இதனால் சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளிக்க சிறுமியிடம் கூறினார். இதையடுத்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நவின்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் விஜி (வயது 20). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவியை அவர் தனது நண்பருடைய உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது பெற்றோர் மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்
- இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பே ட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே பூண்டி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (21) என்பவர் அந்த மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோ ரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் எலவனாசூர்கோட்ைட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூ ர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- பரோட்டா வாங்கி கொடுத்து கொடூரம்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து முதியவர் வைத்திலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்"
கடலூர்:
பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் சுரேஷ் (22), கார் மெக்கானிக். இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் அவரை கடத்தி சென்றார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை யில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சென்னை சென்று மாணவியை மீட்டனர். இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.மகளிர் ேபாலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
- மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் 4 பேரை போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
- அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக் குடி அருகே ஆவினங் குடி பகுதியை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தேதி அவருடன் படிக்கும் மாணவன் ஒருவருக்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அழைத்ததாக தெரிகிறது.
இதில் சம்பந்தப்பட்ட மாணவி கேக் வெட்ட சென்றிருந்த நிலையில் அவருடன் கேக் வெட்டிய மாணவன் இருப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டு சக மாணவர்கள் 3 பேர் அந்த மாணவியை சமூக வலைதளத்தில் புகைப்படத்தை விட்டு விடுவதாகவும் அந்த மாணவியின் வீட்டில் கூறி விடுவதாக மிரட்டி–யுள்ளனர். அதற்கு பயந்த அந்த சிறுமியை கடந்த 1 -ந் தேதி 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் பயந்துபோன சிறுமி சம்ப–வத்தை யாரிடமும் தெரிவிக் கா–மல் இருந்துள் ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் சகமாண வர் களுக்கும் தெரியவந்து–ள்ளது. இதில் பயந்துபோன சிறுமி நடந்த சம்பவத்தை அவருடைய தாயிடம் தெரி வித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் ஆவினங்குடி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ், திட்டக் குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளிக்குச்சென்று இச்சம் பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் தீவிர விசாரணை செய்து அவர்கள் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது மாணவி குறித்து புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக 3 மாணவர் களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் மாணவியுடன் புகைப்படத்தில் இருந்த சிறுவனையும் போலீசார் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் நேரில் விசாரணை செய்து 4 பேரையும்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அவரது தாயுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆவினங்குடி பஸ் நிலையம், பட்டூர் நிறுத்தம் ஆகிய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.