search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "army personnel"

    • 983 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைதியின் சின்னமான புறாவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பறக்க விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்துமைக்காக காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை மருத்துவ துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை துறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 983 பயனாளிகளுக்கு 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மனைவி 69 வயதான வனஜா என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிக்க கூறி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.கலியபெருமாள் ஆடுதுறையில் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.அவரது இறப்பிற்கு பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் தனது ஒரு மாத ஓய்வூதிய பணமான ரூ. 15,000 ராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ளார் வனஜா.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வளநாடு பகுதியில் பிறந்தவர் வனஜா என்பதால் தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் இதனை அளித்ததாக வனஜா தெரிவித்தார்.அவர் அந்த பணத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கும் போது அனைவரும் கைத்தட்டி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுகிறது.

    தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter
    ×