search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery World Cup"

    • இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியன் வென்றால்.
    • 19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம்.

    உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ- ஓ யோயூன் இணையை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த போட்டியில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலகக் கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்திய இணை தங்கம் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
    • சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.

    உலகக் கோப்பை வில்வித்தை 2ம் நிலைக்கான போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, இத்தாலியின் எலிசா ரோனிர்-எலியா பிரிக்னென் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 157-157 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து நடந்த சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.

    ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்தியாவின் திரஜ் பொம்மதேவரா-சிம்ரன்ஜீத் கவுர் ஜோடி 2-6 என்ற கணக்கில் இந்தோனேஷியா இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

    • சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
    • 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    • இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
    • அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டது.

    இதில் இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கால்இறுதியில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேயையும், அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இதே போல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஜோடிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
    • கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

    பாரீஸ்:

    உலக கோப்பை வில்வித்தை போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.

    நான்கு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி முதன்முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். #DeepikaKumari
    அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் வில்வித்தை உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீபிகா குமாரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 30-க்கு 29 புள்ளிகள் பெற்று தீபிகா குமார் 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலையில் இருந்தது.



    ஆனால், 4-வது மற்றும் 5-வது செட்டில் அபாரமாக அம்பு எய்திய தீபிகா குமாரி முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்றார். ஜெர்மனி வீராங்கனையால் இரண்டு செட்டிலும் தலா 26 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 7-3 என தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெற்றார்.

    2011, 2012, 2013 மற்றும் 2015 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய தீபிகா குமாரியால் தங்கம் வெல்ல முடியவில்லை. தற்போது முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
    அமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக். இரண்டு பதக்கங்கள் வென்றார். #ArcheryWorldCup
    உலகக்கோப்பை வில்வித்தை தொடர் அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா அரையிறுதியில் ரஷியாவின் அன்டோன் புலாயெவ்-ஐ 150 புள்ளிகள் பெற்று வீழ்த்தினார்.

    ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.



    கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
    ×