search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-drug"

    • அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன்(தளி) ,போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

    அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் என்.சி.சி, கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர். பேரணி கல்லூரியில் இருந்து உடுமலை திருமூர்த்திமலை சாலையை சென்றடைந்து மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ்(சட்டம்ஒழுங்கு), சந்திரமௌலி(மதுவிலக்கு)உள்ளிட்ட போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ப.விஜயா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன்,கார்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், தளி, அமராவதிநகர், கணியூர் உள்ளிட்ட காவல் சரக பகுதியில் 20 இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒளிபரப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக் கூறியதுடன் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    • சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மங்கலம்

    சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா, வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பேரணியில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.இந்த பேரணியானது சாமளாபுரம் -லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் பள்ளி வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, மைதிலிபிரபு , லிட்ரசி பள்ளியின் ஆசிரியர்கள் , ஏ.வி.ஏ.டி.பள்ளியின் ஆசிரியர்கள் , மங்கலம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் போக்குவரத்து, காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெருமாநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, திருப்பூர் சாலை, ஈரோடு சாலை, அவிநாசி சாலை வழியாக கொண்டத்து காளியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கேஎம்சி., பப்ளிக் பள்ளி, சக்தி விக்னேஸ்வரா, விக்னேஸ்வரா, தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.

    • வாடிப்பட்டி, சோழவந்தானில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தானில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் தலைமை தாங்கினார்.பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாரியம்மன் கோவில், சன்னதி தெரு, பெரிய கடை வீதி, ரத வீதிகள் வழியாக பேரணி நடந்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சத்யபிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் முத்து தலைமை காவலர்கள் மாரியப்பன், பெரியமாயன் உக்கிர பாண்டியன், விவே கானந்தா கல்லூரி முதல்வர் வெங்கடேசன், அரசு பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சரவணன், தீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டியிலும் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்யபிரியா தலைமை தாங்கினார். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் ராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாயாண்டி, சேர்வை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன், மதுவிலக்கு பிரிவு ஏட்டு நாகூர்கனி, ஏட்டு நாகராஜன், விவசாய ஆசிரியர் சுரேஷ், உடற்கல்விஆசிரியர்கள் சுரேஷ், பாண்டி, ஸ்டாலின் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சொசைட்டிதெரு, தாதம்பட்டி மந்தை, பெருமாள் கோவில், ஜெமினி பூங்கா, போஸ்ட் ஆபிஸ், பஸ் நிலையம், லாலாபஜார் வழியாக பேரணி நடந்தது.

    • போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சார்பில், சர்வதேச போதை ப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான இந்த விழிப்புணர்வு பேரணியில், நெய்வேலி பள்ளிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மற்றும் என்.எல்.சி. ஐ.எல். கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியை, நிறுவன மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மனித வளத்துறை இயக்குனருன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுகுமார், கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பொது மேலாளர் நாகராஜன் மற்றும் என்.எல்.சி. இந்தியா மருத்துவமனை மனநலத்துறை மருத்துவர் விஜயகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், மத்திய நூலகத்தி லிருந்து தொடங்கிய இப்பேரணி, மகாத்மா காந்தி சிலை அருகில் நிறை வடைந்தது. பேரணியின் போது, மாண வர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.

    • குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, மேல் குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த சூழலில் நேற்று உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பாக தளிஞ்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அமராவதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ,வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர்.
    • போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர்.

    உடுமலை :

    உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொறுப்பு ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் தமிழ் ஆசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரம்யா ஆகியோர் வழி நடத்தினர். போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர்.

    போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர். பள்ளியில் மாணவிகள் மது ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • மதுரை அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் நடந்தது.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். முத்தமிழ் மன்ற தலைவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியை சங்கீதா வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.எஸ். நாகேந்திரன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் மது, புகையிலை, சிகரெட், வெற்றிலை, பாக்கு என எந்த போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையானால் மனநல பாதிப்பு, இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வாழ்க்கை அழிவுப்பாதைக்கு சென்றுவிடும். ஆகையால் மாணவர்கள் விழிப்புணர்வுடன் உண்மை, உழைப்பு, உயர்வு ஆகியவற்றை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள் என்றார்.

    நிகழ்ச்சியில் நடந்த வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாகேந்திரன் பரிசுகள் வழங்கினார். உதவிப் பேராசிரியை கோதைக்கனி நன்றி கூறினார்.

    • நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா்.
    • போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2, திருப்பூா் வடக்கு காவல் நிலையம் ஆகியன சாா்பில் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி வெள்ளிவிழாப் பூங்காவில் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருப்பூா் வடக்கு சரக உதவி ஆணையா் அனிக்குமாா் பேசினாா்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வை கலை நிகழ்ச்சி மூலமாக ஏற்படுத்தியதுடன் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா். 

    • போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
    • போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    பல்லடம் ; 

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசியதாவது:- மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.

    இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. நீங்கள் போதை என்ற தவறான பழக்கத்தில் மாட்டிக்கொள்ளவேண்டாம். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சித்ரா, வக்கீல் மார்ட்டின் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் ராஜபாளையம் கிளை சார்பில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா பேரணியை ெதாடங்கி வைத்தார். கிளை தலைவர் ஜான் பாட்ஷா தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாநில பேச்சாளர் முகம்மது ஷபீக் சிறப்புரையாற்றினார். நகர செயலாளர் காஜாமைதீன் நன்றி கூறினார்.

    • சமூகரெங்கபுரம் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை நாடகம் மூலம் விளக்கினர்.
    • முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் இயங்கி வரும் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் தமிழக அரசின் வழிகாட்டு தல் படி போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ராதாபுரம் காவல்உதவி ஆய்வாளர் ஜான்சன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் காந்திமதி, கல்லூரி தலைவர் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் கலந்துக்கொண்ட மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகள் ஏந்தியும், துண்டு அறிக்கைகள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பின்னர் சமூகரெங்கபுரம் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை நாடகம் மூலம் விளக்கினர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். மின்னனுவியல் துறை தலைவர் முகம்மது இபாம் வரவேற்றார்.

    முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர், ரோட்டரி சங்க ஒருங்கினைப்பாளர் செய்திருந்தனர்.

    ×