search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anemia"

    • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
    • ஜீரண உறுப்புகள் சரியாக செயல்பட இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது.

    இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் முக்கியம்.

    இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது ஏற்படுகிறது. ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாகும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என அறிவோம்...

    இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது:

    கீரைகள்:

    உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.

    நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்:

    முந்திரி பருப்பு, ஆப்ரிகாட், பாதாம் பருப்பு, வாதுமை, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.

    பருப்பு வகைகள்:

    பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச் சத்தை அதிகரிக்கலாம். பாசிப்பயிறு, முழு கருப்பு உளுந்து போன்ற பயிறு வகைகளைச் சாப்பிடுவது இன்னும் அதிக அளவிலான இரும்புச்சத்து கிடைக்க வழி வகைசெய்யும்.

    விதைகள்:

    பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இதுவும் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

    செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், ஓட்ஸ் நல்ல ஆதாரங்களாகும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போதுமான அளவு இரும்புச்சத்தை வழங்கும். கூடுதலாக, பாதாம், திராட்சை மற்றும் முந்திரி போன்ற சில பழங்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம்.

    மீன்:

    மீன் வகைகளில் ஷெல்பிஷ், நண்டு, டூனா மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களில் இரும்புச் சத்து காணப்படுகிறது. சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, கொட்டைகள், விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    டார்க் சாக்லேட்:

    டார்க் சாக்லேட் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தையும், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் தருகிறது. டார்க் சாக்லேட்டில் 55 சதவிகிதம் கோக்கோ மற்றும் நிறைய இரும்புச்சத்து காணப்படுகிறது.

    வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தாவர மூலங்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடைமிளகு மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சில பொருட்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த பொருட்களில் காபி, தேநீர் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் அடங்கும்.

    • குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை.
    • குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்...

    * வைட்டமின் `ஏ' குறைந்தால் கண்பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் `பி' குறைந்தால், குழந்தைகளுக்கு வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும், பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளைக்கிழங்கு, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `டி' இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் 'டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.

    * வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், ரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

    • உடல் உறுப்புகளில் தோன்றும் நோய்களின் வெளிப்பாடே அரிப்பு.
    • நோய் வருவதற்கு முன்பே அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பாலானவர்கள் `அரிப்பு' என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்றப் போகிறது என தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.

    பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறப்புறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையில் உள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.

    கருவுற்ற காலங்களில் கர்பப்பை வாசல், பிறப்புறுப்பு போன்றவற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறப்புறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்து குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.

     குண்டாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு. அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • ஹீமீகுளோபின் என்பது ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன்.
    • சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ரத்தசோகை.

    ஹீமோகுளோபின் என்பது சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்சிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு ரத்த சோகை (anemia) என்று பெயர். இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி இரும்பு சத்து நிறைந்த சில உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அவை என்னென்ன பார்க்கலாம்.

    ரத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:

    ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும்.

    உடலில் இரும்புச்சத்து குறைவதால் உடலில் ரத்தத்தின் அளவு குறைகிறது. அதனால் காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    போலிக் அமிலம் என்பது பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். அதனால் பச்சை காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், பிரக்கோலி, ஈரல் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மாதுளையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க மிகச்சிறந்த ஒன்றாகும். அதனால் தினமும் ஒரு மாதுளை சாப்பிட வேண்டும்.

    பேரிச்சம்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்து இரும்புச்சத்தை அளிக்கிறது. ஒரு நாளைக்கு தினமும் 3 பேரிச்சை பழமாவது சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

    பீட்ருட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்றவை உள்ளது. எனவே தினமும் பீட்ருட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

    பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும் உணவு வகைகள் ஆகும். அவற்றில் உள்ள இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்க உதவி செய்கிறது.

    • மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
    • கர்பப்பை அழுக்கை வெளியேற்றும்.

    குழந்தைப்பேறு அளிக்கும் சாலியா விதை

    சாலியா விதை மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை லட்டை சாப்பிடுபவர்கள் கர்பப்பை அழுக்கை வெளியேற்றும். கர்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சரியாகும். கண்டிப்பாக கழிவுகள் வெளியாவது உறுதி. கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

    ஒரு கப் சாலியா விதையை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சாலியா விதையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதே கப் அளவுக்கு கருப்பட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையும் பொடித்து சாலியா விதை பொடியுடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

    இந்த உருண்டைகளை மாதவிடாய் நாளில் முதல் நாளில் இருந்தே இந்த உருண்டைகளை சாப்பிட வேண்டும். முதல் நாளில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உருண்டை. அதுமட்டுமில்லாமல் ஒரு நாட்டுக்கோழி முட்டையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களின் போது மூன்று அல்லது ஐந்து நாட்களும் உருண்டைகளும் மற்றும் நாட்டுக்கோழி முட்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    சாலியா விதையில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. இது ஆங்கிலத்தில் garden cress seeds என அழைக்கப்படுகிறது. இவ்விதையில் வைட்டமின் ஏ, இ, சி, நார்சத்துகள், புரதசத்துகள், இரும்பு சத்துகள் உள்ளது.

    ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

    சாலியா விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சாலியா உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

    தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்

    சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது.

    மாதவிடாயை சீராக்கும்

    மாதவிடாயை சீராக்க உதவுகின்றன. கர்ப்பத்தை திட்டமிட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

    உடல்எடையை குறைக்கும்

    சாலியா விதைகளில், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால், பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள நல்ல புரதச்சத்து, உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்சிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ள சாலியா விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும், இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

    மலச்சிக்கலைப் போக்கும்

    சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, சீரான குடல் இயக்கத்தை உருவாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளை போக்க உதவுகின்றன. சாலியா விதைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சாலியா விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்சினைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

    • மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும்.
    • அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர்.

    பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். ஆனால், பூப்படைந்ததிலிருந்தே அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் அல்லது சில காலமாகவே அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் 'இது இயல்பானதுதான்' என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம் எனவும், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களுக்கு இவ்வாறு ஏற்பட்டால் அது கர்ப்பப்பை புற்றுநோயின் முந்தைய நிலையாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    அதிகமான ரத்தப்போக்கு பிரச்னைக்கு மெனரேஜியா என்று பெயர். இவ்வளவு ரத்தம் வெளியேறுவது இயல்பானது அல்லது அதனை தாண்டினால் அதீத ரத்தப்போக்கு என்பதற்கு வரையறை கிடையாது. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது இவற்றைத்தான் அதீத ரத்தப்போக்கு என்கிறோம். சிலர் நாப்கின்கள் சிறிது நனைந்தாலும் மாற்றிவிடுவார்கள், அதுவல்ல அதீத ரத்தப்போக்கு. ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது நிச்சயமாக அதீத ரத்தப்போக்கின் அறிகுறிதான்.

    சிலருக்கு கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதிக்குள் இருந்தால் அதன் சவ்வு பெரிதாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். தொடர்ச்சியாக ஒருவருக்கு அதீத ரத்தப்போக்கு ஏற்படுகிறதென்றால், அதனால் அவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படும். ஏனெனில், அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். உடல் சோர்வு, பணிகளை சரிவர செய்ய முடியாதது உள்ளிட்டவை ஏற்படும்.

    பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளுக்கு உணவின் மூலம் உடல் எடையை சரியான அளவில் வைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். அப்போது, இந்த அதீத ரத்தப்போக்கு பிரச்னையும் சரியாகும். இரும்புச்சத்து அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ராஜ்மா உள்ளிட்ட பீன்ஸ் வகைகள், நட்ஸ் வகைகள், மீன் உள்ளிட்ட புரதம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு கட்டிகளை உணவின் மூலம் சரிசெய்ய முடியாது.

    • வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.
    • நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

    பரபரப்பான வாழ்க்கை சூழலால் பலருக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. கவலை வேண்டாம். காய்கறி, பழங்கள் மூலமாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த பட்டியலில் முதலில் இருப்பது பப்பாளி. வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ரிபோபிளாவின் உள்ளிட்டவை நிறைந்திருக்கும் ஒரு 'ஆல் ரவுண்டர்' பழம் பப்பாளி. உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும். பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே உங்கள் டயட்டில் பப்பாளியை மிஸ் பண்ண வேண்டாம்.

    பப்பாளியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும். இதில் வைட்டமின் சி, ஏ, இ சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக இருக்கும். கண்களுக்கு நல்லது.

    வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

    ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும். பப்பாளி உண்பதால் புற்றுநோய் இல்லா ஆரோக்கிய உடலைப் பெறலாம். புற்று நோய்க் கிருமிகள் வரக்கூடிய அறிகுறிகள் தெரிந்தாலே பப்பாளி அதை முற்றிலும் அகற்றும்.

    வைட்டமின் கே மற்றும் வைட்டமின்சி சத்துக் குறைபாடுக் காரணமாகத்தான் எலும்பு முறிவு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. இந்த இரண்டு சத்துகளும் பப்பாளியில் அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும்.

    அஜீரணக் கோளாறு சரிசெய்யப்படும். என்சமைன் பப்பாளியில் அதிகம் இருப்பதால் அது உணவை எளிதில் ஜீரணித்துவிடும். நார்ச் சத்தும் பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. பப்பாளி நீர் நிறைந்த பழம் என்பதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

    ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை பப்பாளியில் இருக்கிறது. நார்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இதயக் கோளாறுகள் ஏற்படாது. பொட்டாசியம் சத்து அதிகம் உட்கொள்ளப்பட்டால் உடலுக்கு தீங்கான சோடியத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உணவு ஜீரண சக்தி சீராகி மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

    • சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும்.

    உடலுக்கு குளிர்ச்சியானது என்ற வகையில் சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) ஆக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது. தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூக்கும் சமயத்தில் கொடியின் வேர்பகுதியில் ஊற்றினால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிது.

    சுரைக்காய் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம். கிராமங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூரை மீது சுரைக்காய் கொடியை படர விடுவதும் உண்டு. ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்து மற்ற முறைகளில் பயிர் செய்யும் போது மழை, ஈரப்பதம் போன்றவற்றால் சுரைக்காயின் மகசூல் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும்.

    அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும். வீரிய ஒட்டு ரகங்கள் நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

    சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக செயல்படும். பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

    • முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட கோண்டூர் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகா மினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரயை வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 7,01,617 குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுள்ள 2,23,660 பெண்களுக்கு மட்டும் (கர்ப்பிணித்தாய்மார்கள். பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர். 1 மற்றும் 2 வயது வரை அரை மாத்திரையும், 2 முதல் 30 வயது வரை 1 மாத்திரையும் எடுத்து க்கொள்ள வேண்டும். முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி நடைபெறவுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரை ஒரே நாளில் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படு வதுடன், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உதவுகிறது. பொது மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்க ன்வாடி பணியாளர்களும் வீடுவீடாக சென்று தகவலளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து இக்குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப டுகிறது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரம்) டாக்டர் மீரா, மற்றும் மருத்துவர்கள், மருத்துவபணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம்.
    • இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும்.

    நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக ரத்த உற்பத்திக்கு உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான சத்து. இந்த இரும்புச்சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும்.

    மேலும் தசைகளுக்கு ஆக்சிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடல் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம்.

    மற்றவர்ளுடன் ஒப்பிடும் போது பெண்கள், அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், குழந்தைகள், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஹீமோகுளோபின் எனும் புரவிதமானது உடலின் உள் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம். ரத்த சோகை அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம்.

    இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல அறிகுறிகளை உணரலாம்.

    இரும்புச்சத்து குறைபாட்டின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

    உலர்ந்த அத்திப்பழம்

    இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய காலையில் இரண்டு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து எலும்புகள் மற்றும் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன.

    பேரிச்சம்பழம்

    ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிச்சம்பழங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சிறந்த பலன்களை பெற காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பேரிச்சம் பழங்களை சாப்பிடவும்.

    உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு

    உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. பாதாமில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பாதாம் மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

    சாலியா விதைகள்

    இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.

    • கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
    • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.

    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

    உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

    கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    • அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது
    • ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சார் நிலா தொடங்கி வைத்தார்.

    ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் ஸ்ரீ ஜெயந்தி நாடக சபா கலைக்குழுவினர் மூலம் கரகாட்டம், நாடகம் மற்றும், பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள் ரத்த சோகை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உணவு முறைகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் மற்றும் பயணிகள் கண்டு களித்தனர்.

    மேலும் ரத்த சோகையை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    ×