search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amarinder Singh"

    • நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

    பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரினீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பியான ப்ரினீத் கவுர், மீண்டும் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் பாஜகவுக்கு உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

    அமரீந்தர் சிங் 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் 2-ம் முறையாக 2017 -ம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2022 செப்டம்பரில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமரீந்தர் சிங் தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் தோல்வியடைந்தார்.
    • பாஜகவில் இணைந்த அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் (வயது 80), உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கி அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் சிங் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் முறைப்படி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்துடன் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

    அமரீந்தர் சிங்குடன் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர், முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உட்கட்சி பிரச்சினையால், காங்கிரசில் இருந்து விலகினார்.
    • தனிக்கட்சி தொடங்கிய நிலையில் பஞ்சாப் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

    பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர்சிங், உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் பாஜகவில் இணைவது குறித்து அவர் ஆலோசித்து வந்தார். அதன்படி டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து முறைப்படி அவர் பாஜகவில் இணைவது உறுதியாகி உள்ளது. தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் அவர் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.
    • இவர் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரிந்தர் சிங்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அமரிந்தர் சிங், உட்கட்சி மோதலால் காங்கிரசில் இருந்து விலகி லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார்.

    இந்நிலையில், அமரிந்தர் சிங் அடுத்த வாரம் பா.ஜ.க.வில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • அமரீந்தர சிங் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002 - 2007 மற்றும் பின்னர் 2017 - 2021 உட்பட ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

    இந்நிலையில், முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமரீந்தர் சிங் நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நாளை வீடு திரும்பிவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நநேர்திர மோடி அமரீந்தர் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

    பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரீந்தர் சிங்.

    இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத்சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. 

    இதையடுத்து அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அமரீந்தர் சிங் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தார்.

    அவரது கட்சி பெயரை பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் அமரீந்தர் சிங் விண்ணப்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்த போது, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ ‌ஷரத்தின் படி பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்யுமாறு தேர்தல் கமி‌ஷனருக்கு விண்ணப்பம் வந்துள்ளது’ என்ற தகவல் கிடைத்தது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அமரீந்தர் சிங்கிற்கு தற்போது 79 வயதாகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியை இவர் தீவிரமாக வளர்த்தார்.

    ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து முதல்-மந்திரி பதவி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவின் ஒற்றமையை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரத்தின்போது பேசினார்.
    சங்ரூர்:

    பஞ்சாப் மாநிலம் சுனாம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் தில்லனை ஆதரித்து மாநில முதல்வர் அமரீந்தர் சிங் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் மோடி என்னுடைய ராணுவம் என அழைக்க தொடங்கி விட்டார். ஆனால் ராணுவம் மோடிக்கு சொந்தமானது கிடையாது. இந்திய நாட்டுக்கு சொந்தமானது. நானும் இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தேன். நான் இந்திய தேசத்திற்காக பணியாற்றினேன், மோடிக்காக பணியாற்றவில்லை.

    இந்தியாவின் மிகப்பெரிய வலிமையே, ஒற்றுமைதான். அதனை பிரதமர் மோடியும், அவருடைய பாரதீய ஜனதா கட்சியும் அழிக்க மக்கள் அனுமதிக்க கூடாது. 

    வகுப்புவாத அரசியலில் ஈடுபடுவோருக்கும், மதச்சார்பற்ற இந்தியாவை கட்டியெழுப்ப விரும்புவோருக்கும் இடையிலான போட்டியில், நாட்டின் எதிர்காலத்தை இந்த பாராளுமன்றத் தேர்தல் தீர்மானிக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார். 
    பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடமாட்டார் என பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். #ManmohanSingh #AmarinderSingh
    அமிர்தசரஸ்:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாமில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

    எனவே வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்டியிடுவார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்து இருந்தார்.

    அதை பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் மறுத்துள்ளார். மன்மோகன் சிங் அமிர்தசரஸ் தொகுதியில் நிச்சயம் போட்டியிட மாட்டார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவே இதற்கு காரணம்.

    பஞ்சாபில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாபை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு எந்த கூட்டணியும் தேவையில்லை.



    எனவே ஆம் ஆத்மி கட்சியுடனோ, வேறு எந்த கட்சியுடனோ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றார்.

    டெல்லியில் நேற்று மன்மோகன்சிங்கை அம்ரீந்தர்சிங் சந்தித்து பேசினார். அப்போது நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் அமிர்தசரஸ் தொகுதியில் மன்மோகன்சிங் போட்யிட மாட்டார் என்று அவர் அறிவித்தார். #ManmohanSingh #AmarinderSingh
    பஞ்சாப் மாநிலத்தில் மத விழாவின்போது 3 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். #NirankariBhawan #Amritsarblast #BikramjitSingh #CaptainAmarinderSingh
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம், அமிர்தரஸ்க்கு உட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் வீசுக் குண்டுகளை ஒத்திருப்பதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.


    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான பிக்ரம்ஜித் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் இன்று அறிவித்துள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்றொரு குற்றவாளியான அவ்தார் சிங் என்பவனும் விரைவில் கைதாவான் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். #NirankariBhawan #Amritsarblast #Bikramjit Singh #CaptainAmarinderSingh
    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரின் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #AmritsarTrainAccident #CaptainAmarinderSingh
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அமன்தீப் மற்றும் குருநானக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்த அமரிந்தர் சிங், விபத்து நிகழ்ந்த ரெயில்வே கேட் பகுதியையும் பார்வையிட்டார்.



    இந்த விபத்து பற்றி விசாரிக்க உயர்மட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிள்ளது. இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இன்னும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

    முன்னதாக, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என நேற்றிரவு அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்.

    அதன் அடிப்படையில் இந்த தொகையை உடனடியாக அளிப்பதற்கு வசதியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் அமரிந்தர் சிங் இன்று தெரிவித்தார். #AmritsarTrainAccident  #CaptainAmarinderSingh 
    ×