search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amaravathi river"

    • ஆழமான பகுதிக்குச் சென்ற வாலிபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
    • குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் எஸ்.தினேஷ்குமாா் ( வயது 24). கட்டடத் தொழிலாளியான இவா் தனது தம்பி கவின்குமாா், நண்பா் அமீருடன் தாராபுரம் அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

    ஆனால் மீட்க முடியவில்லை. இந்த நிலையில், அமராவதி பழைய பாலத்தின் அருகில் ஒருவரது சடலம் மிதந்து வருவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.இதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    • ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கடந்த மே மாதம் பழைய ஆயக்கட்டு 8 ராஜவாய்க்கால் பாசன நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களில் உள்ள நிலைப்பயிர்களை காப்பாற்றுவதற்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கடந்த 26ந் தேதி முதல் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு இன்று வரை வழங்கப்படுகிறது.இந்நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனம், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரை பகுதியிலுள்ள 10 வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள நிலையிலுள்ள பயிர்களுக்கு உயிர்த்தண்ணீர் மற்றும் வழியோர பகுதிகளின் குடிநீர்த்தேவையை கருத்தில் கொண்டு, கடந்த, 8ந் தேதி முதல் வரும், 17ந் தேதி வரை 10 நாட்களுக்கு 1,072 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு, தண்ணீர் ஓடி வருகிறது.அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

    • ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
    • கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர் அமராவதி ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை பிணமாக மிதந்தார். அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கரூர்:

    கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு அருகே அமராவதி ஆற்றின் அருகே பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது ஆற்றின் நடுபகுதியில் முட்புதரில் சிக்கிய நிலையில் பிணம் ஒன்று மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனே இது குறித்து கரூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாணை மேற்கொண்டனர். இதில் பிணமாக கிடந்தவர் 45 வயது மதிக்க திருநங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை மர்ம நபர்களை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என உடனே தெரியவில்லை. கரூர் பகுதியில் உள்ள திருநங்கைகள் சங்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த ஊர் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் உடலில் எந்த காயமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மர்ம மரணமாக குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கரூர் அமராவதி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். #AmaravathiRiver
    கரூர்:

    அமராவதி ஆறானது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உற்பத்தியாகி கரூரில் பாய்ந்தோடி திருமுக்கூடலூர் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூர் அமராவதி அணையில் தண்ணீர் அதிகளவு நிரம்பும் போது தான் காட்டாற்று வெள்ளமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீரை வைத்து கரூர் கடைமடை பகுதியில் விவசாயம் நடந்தது.

    தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் கரூர் அமராவதி ஆறு மணற்பாங்காக தான் காட்சி தருகிறது. மேலும் குடிநீருக்காக ஆற்றில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீரின் நீர்மட்டம் குறைந்திருப்பதால் தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர ஆற்றில் மணல் திருட்டு பிரச்சினையும் ஆங்காங்கே நடப்பதால் இயற்கை வளம் சுரண்டப்படுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    இந்த நிலையில் கரூரில் தற்போது தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி வீடுகள் ஆகியவை பெருகி விட்டதால் கழிவுநீரை வெளியேற்றுவதில் முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக ஆற்றில் கலந்து தான் ஓடுகிறது. இதன் காரணமாக கரூர் அமராவதிபாலம், பசுபதிபாளையம் ஆற்று பாலத்தில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல் மூக்கினை பிடித்து கொண்டே செல்வதை காண முடிகிறது. மேலும் கழிவுநீர் ஒருபுறம் ஓடினாலும், மற்றொரு புறம் சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் லைட்அவுஸ் பாலத்தின் கீழ்புறத்தில் செம்பழுப்பு நிறத்திலும், கருமை நிறுத்திலும் அருகருகே கழிவுநீர் செல்வதாக கூறுகின்றனர். தூய்மையான நீரோடிய சென்னை கூவம் நதி சாக்கடையாய் மாறிபோனதற்கு காரணம் கழிவுநீர் அதில் விடப்பட்டதனால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே கரூரின் நீராதார பொக்கிஷமான அமராவதி ஆற்றினை வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தும் விதமாக அதில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாயப்பட்டறை கழிவுநீர் அதில் கலக்கிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கரூர் அமராவதி ஆற்றின் நிலை குறித்து சமானிய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளரும், சமூக ஆர்வலருமான சண்முகம் கூறுகையில், கரூர் செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், பெரியஆண்டாங்கோவில், சின்ன ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறி பாசனவாய்க்கால் மற்றும் ஆறுகளில் கலக்கிறது. இதன் காரணமாக அந்த இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் மாசடைகிறது. விவாசய நிலங்களில் இந்த நீரை பாய்ச்சுவதால் பயிர்கள் உற்பத்தி குறைகிறது. இந்த நீரில் மக்கள் குளிப்பதால் தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இனி அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், தற்போது தேங்கி கிடக்கும் கழிவுகளால் அந்த நீரும் மாசடைய வாய்ப்பிருக்கிறது. எனவே அமராதி ஆற்றில் கழிவுநீர், சாயக்கழிவுநீரை திறந்து விடுபவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். 
    ×