search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alternatives"

    • 11-வது சினியர் சிட்டிங் பாரா வாலிபால் போட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கியின் கோப்பைகளை பரிசாக தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    வல்லம்:

    அகில இந்திய அளவிலான 11-வது சிட்டிங் பாரா வாலிபால் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது.இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது சினியர் சிட்டிங் பாரா வாலிபால் போட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

    இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, உத்ராகாண்ட், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    தமிழ்நாடு பாரா வாலி சங்கத்தின் மாநில தலைவர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்றார்.

    இதில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடமும், கர்நாடக மாநில அணி இரண்டாமிடமும், தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணி மூன்றாமிடமும் பிடித்தது.அதே போல் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாமிடத்தையும், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தது.

    தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளிலிருந்தும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கியின் கோப்பைகளை பரிசாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது,

    மாற்று திறனாளிகளின் திறன் தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்த போட்டி நடைபெற்றது என்றும் மேலும் அவர்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர பேசினார்.

    இதில் தஞ்சை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வேலுச்சாமி, பதிவாளர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    இந்திய ஜனநாயக கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பி.என்.ஆர். பாரி கணபதி தலைமையில் நிர்வாகிகள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

     அதன்படி திருப்பூர் அவினாசி ரோடு சாமுண்டிபுரம் பகுதியில் இருந்து அ.தி.மு.க., மற்றும் மாற்று அமைப்புகளை சார்ந்த முருகன், ராஜபாண்டி, ரஞ்சித், பாலசுப்ரமணியம், பரமேஸ்வரி மற்றும் சுமார் 50பேர் மாவட்ட செயலாளர் சோனைமுத்து தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி , மாநில நிர்வாக குழு உறுப்பினர் பிஎன்ஆர்.பாரிகணபதி முன்னிலையில் தங்களை இந்திய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர். 

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணை தலைவர் முருகேசன் ,மாவட்ட துணைச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
    • மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் வழங்கினர்.

    ெபாள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் பொள்ளாச்சி , ஆனைமலை, கிணத்துக்கடவு தாலூக்காக்களில் இருந்து பயனாளிகள்பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம் வழங்கினர். மொத்தம் 175 மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் அரசு மருத்துவர் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர்.

    நீடாமங்கலம்,ஜூன்.16-

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் சுமார் ஆயிரம் உறுப்பினர்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னி லையில் தங்களை இணை த்துக் கொண்டனர். கப்பலு டையான் சதா. சதீஷ் அவருடைய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவில் இணைந்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    பட்டியல் இனத்தவரின் உரிமைக்காக போராடி யவர் அம்பேத்கர். இவர் தன்னுடைய தனித்திற மையால் உயர்ந்தவர். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார் . பட்டியலின மக்களுக்கு பா.ஜ.க என்ன செய்துள்ளது என்பதை பிற கட்சிகள் நேரில் வந்தால் விவாதிக்கலாம் என கூறிேனன். இதுவரை யாரும் வரவில்லை.

    அரசியலமைப்பு சட்டம் இயற்ற இந்திய அரசியல் சாசன தலைவராக அம்பேத்கரை பரிந்துரைத்தது ஜனா சங்கத்தின் தலைவர் சாம் பிரசாத் முகர்ஜி தான்.

    சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு 1989-ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்குவதற்கு ஜனசங்கமே காரணமாக அமைந்தது.

    மத்திய பிரதேச மாநி லத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் பொய் பேசி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக எம்பிக்கள் கொண்டு வந்த 8 மாற்று திட்டங்களையும் பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது. #Brexit #BritishParliament
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு பாராளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.
     
    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்சிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்சிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.

     “பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்று டொனால்டு டஸ்க் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, பிரெக்சிட் விவகாரத்திற்கு அறுதி பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒப்பந்தத்தை முடிவுசெய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில், பிரிட்டனின் பாராளுமன்றத்தின் நடவடிக்கையை எம்பிக்கள் ஓட்டெடுப்பின் மூலம் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிட் தொடர்பாக நேற்று 8 மாற்று ஒப்பந்தங்களை எம்பிக்கள் முன்வைத்தனர். ஆனால் இந்த ஒப்பந்தங்களுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. #Brexit #BritishParliament
     
    ×