search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agreement"

    • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும்.
    • தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
    • சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்நிலையில் சீனா-மாலத்தீவு இடையே புதிய இரண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கசான் மவுமூன், சீன அரசின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாகுன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவிகளை வழங்க சீனா உறுதியளித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
    • சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    சீன ஆதரவாளரான அவர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீன பயணத்தில் அந்நாட்டுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்தார்.அவருக்கு மாலத்தீவின் முக்கிய இரண்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவுடனான மோதல் போக்கு நல்லதல்ல என அறிவுறுத்தின. இந்த நிலையில் இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக முகமது முய்சு பேசி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மாலத்தீவின் இறையாண்மையை சீனா மதிக்கிறது. இரு நாடுகளும் ஒருவரையொருவர் மதிக்கின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் முன்முயற்சியானது. இது இருதரப்பு உறவுகளை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மாலத்தீவின் உள்விவகாரங்களில் தலையிடும் நாடு சீனா அல்ல, இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. சீன-மாலத்தீவு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை உள்ளது. சீன அதிபர் ஜின்பிங் குடிமக்களின் நலனை முதன்மைப்படுத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் சீனாவின் பொருளாதாரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மாலத்தீவின் இலக்குகளை அடைய சீன அரசு உதவும் என்று ஜின்பிங் என்னிடம் உறுதியளித்துள்ளார். மாலத்தீவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொண்டு வருவதும் எனது இலக்கு. வளர்ந்த நாடுகளுடன் இணக்கமாக செயல்படும் நாடாக மாலத்தீவை மாற்ற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.
    • கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்

    வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர்
    • வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கும், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும், வீரசோழபுரம் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் மற்றும் வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற் சங்கத்திற்கும் இடையே போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை கூட்டம் காங்கயத்தில் உள்ள பயணியர் மாளிகையில் நடைபெற்றது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினர். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் 4-ம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கே.ஆர்.முத்துகுமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தகூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களிடமிருந்து தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர், நூல் சுற்றுப்பவர், பாவு பிணைப்பவர், மேஸ்திரி, தார் போடுபவர் என இத்தொழில்களில் பிரிவு வாரியாக ஒரு வருடத்திற்கு என்ற வீதமும், மாதம் ஒன்று என்ற வீதமும் கணக்கிட்டு போனஸ் தொகை வழங்க அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    தறி ஓட்டுபவர், பாவு ஓட்டுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.1450, நூல் சுற்றுபவருக்கு ரூ.900, ஒன்றுக்கு மேற்பட்ட பட்டறையில் பாவு ஓட்டுபவர்களுக்கு ரூ.500, பாவுபினைப்போருக்கு ரூ.220, மேஸ்திரிக்கு ரூ.220, தார் போடுவதற்கு ரூ.320, நூல் காயப்போடுபவர், தார் எடுப்பவர், பீஸ் மடிப்பவர்களுக்கு ரூ.320 என்ற கணக்கில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சுமார் ரூ.1.50 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது.

    கூட்டத்தில் வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், வெள்ளகோவில் வட்டார விசைத்தறிவு உரிமையாளர் சங்க தலைவர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் அடைப்புத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.எம்.சி.செல்வராஜ், வீரசோழபுரம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுச்சாமி, வெள்ளகோவில் தி.மு.க. விசைத்தறி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை, செயலாளர் சதாசிவம், இந்திய தேசிய தொழிற்சங்க தலைவர் பாலு, செயலாளர் அசோக் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விசைத்தறி உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
    • ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் சீனிவாசன் கலைக்கல்லூரியும், ஜப்பான் காக்னவி பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு,தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சீனிவாசன் முன்னிலையில் ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பின்னர் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், இக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் யாரும் வேலை தேடி அலையக் கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு உங்களின் முன்னே ற்றத்திற்கு முதல் படியை ஏற்படுத்தித் தருகிறோம். அதை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேறவேண்டும். இந்த நிறுவனத்துடன் கல்லூரி வைத்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாணவர்களுடைய அறிவுத்திறன்களை பரிசோதித்து அதை மேம்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.தொடர்ந்து ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோ பேசுகையில், மாணவர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, மாணவர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு மொழி திறன் பயிற்சி அளித்தல், வேலை வாய்ப்பு வழங்குதல் பற்றி எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினர் பெங்கர் காக்னவி மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் வரு ண்மோட்கில் மேலாண்மை மூத்த மேலாளர் மஞ்சுநாத் ரோடகி , பிராங்களின் ஜெகதீசன் பொறியியல் கல்லூரி இளங்கோவன், திறன் மேம்பாட்டு அலுவலர் சசிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக சீனிவாசன் கலைக்கல்லூரி மனித வள மேம்பாட்டு அலுவலர் சந்திரசவுத்ரி வரவேற்றார். வணிக மேலாண்மையியல் துறை இயக்குநர் மகேஷ் நன்றி கூறினார்.

    • கரூர் வள்ளுவர் அறிவியல், மேலாண்மை கல்லூரியல் புரிந்துணர்வு ஒப்பந்த விழா நடைபெற்றது
    • மும்பை நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    கரூர்,

    கரூர் வள்ளுவர் கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக பேங்கிங் மற்றும் பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு சிறந்த பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த டிப்ளோமா படிப்பு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அண்ட் ஸ்பைனாட் மும்பை மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற்று நடத்தபடுகிறது. இதுவரை இக்கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களை இந்த படிப்பில் தேர்ச்சிபெற செய்து வங்கி பணியையும் பெற்றுத் தந்துள்ளது.இந்த மண்டலத்தில் வேறு எந்த கல்லூரியிலும் இந்த படிப்பு வழங்கபடுவதில்லை. எனவே இந்த படிப்புக்காகவே ஏராளமான மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். மேற்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கும் நிகழ்வு கல்லூரியின் வள்ளலார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இருளப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார். உதவி செயலர் ராகவி தலைமை உரையாற்றினார்.கரூர் வைஸ்யா வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறை பொதுமேலாளர் சேகர் வாழ்த்துரை வழங்கினார். இதில் மும்பை இந்தியன் இன்ஸ்டிலைட் ஆப் பேங்கிங் அண்டு பைனான்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சிறப்புரையாற்றினார். பேங்கிங் அண்டு பைனான்ஸ் டிப்ளோமா படிப்புக்கு கல்லூரி சிறந்த பயிற்சி அளித்து நல்ல முறையில் பணியாற்றி வருவதாக பாராட்டி பேசினார்.விழாவில் கல்லூரி தலைவர் செங்குட்டுவன், செயலர் ஹேமலதா செங்குட்டுவன் மற்றும் திரளான ஆசிரியர்கள் வங்கி அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த டிப்ளோமா படிப்பில் புதிதாக சேர பல மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,

    கடலூர்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்   த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும்.  2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.

    • காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

    அரசு மேல் முறையீடு சென்றதை திரும்ப பெற வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடந்த போராட்டத்துக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி மத்திய சங்கத் தலைவர்சேகர் தலைமை வகித்தார் .

    ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்தார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணைத்த லைவர்கள்சுப்பிரமணியன், பொறியாளர் ஓய்வு முருகையன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, சுந்தபாண்டியன், தங்கராசு, இருதயராஜ், கலியமூர்த்தி, தமிழ் மன்னன், சண்முகம், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார். 

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீனாட்சி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விங் கமாண்டர் ஜெயகுமார் துணை தலைவர், விமான படை வீரர்கள் சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மேஜர். சரவணன், துணை இயக்குநர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஜி.பி. கேப்டன் கென்னடி அலுவலக பொறுப்பாளர் இ.சி.எச்.எஸ்.

    தஞ்சாவூர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 நிறுவனங்களான, அசாம் திப்ரூகார் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், உத்திரபிரதேசம் கோரக்பூர் -பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், மத்திய பிரதேசம் ஜபல்பூர் -தேசிய பழங்குடியினர் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம், பீகார் பட்னா -ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர்கள் அஷ்வனி குமார், கன்வர் நரேன், ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா, அபரூப் தாஸ், டாக்டர் கிருஷ்ணா பாண்டே, சர்வதேச சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் முகேஷ் குமார், டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஒரு புதிய முதுகலை படிப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும் முனைவர் பட்டத்திற்கான இரட்டை வழிகாட்டி முறை, மாநாடுகள், பட்டறைகள் நடத்துதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளது.

    ×