search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agneepath"

    • அக்னிபத் திட்டத்தில் இளைஞர்கள் சேரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போது அக்னிபத் திட்டத்தின் மூலம் தேசத்தின் நலனுக்காக இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

    பிரதமர் இளைஞர்களுக்காக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க ப்படும் என்று தெரிவித்தார் அதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபத் என்ற திட்டத்தை வெளியிட்டார் அக்னிபத் என்பது போர்க்களப்பணி என்பதாகும்.

    இந்த திட்டத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளது வரும் 90 நாட்களில் 46,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். இந்தத் திட்டத்திற்கு 17 முதல் 21 வரை வயதுவரம்பு உள்ளது தற்பொழுது இந்த ஓராண்டுக்கு மட்டும் சிறப்பு நிகழ்வாக 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளோ அதற்கு மேலாக பணியாற்ற முடியாது. இந்த பணியில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாற்ற முடியும். அவர்களின் மாத சம்பளத்தில் 30 சதவீத தொகையை பங்களிப்பாக பிடித்து செய்யப்படும். நான்கு ஆண்டுகள் கழித்து பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அரசின் பங்களிப்பு தொகையாக இணையாக மத்திய அரசு வட்டியோடு சேர்த்து ரூ. 11.71 லட்சம் வழங்குகிறது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முடியும் வாழ்வில் நம்பிக்கை ஆதாரமாக விளங்கும்.

    அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது துணை ராணுவ படைகள், மத்திய, மாநில போலீஸ் பணிகளில் வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாது பொதுத்துறை தேர்வுகளில் 10 சதவீதம் பேருக்கு ஒதுக்கப்பட உள்ளது. சமுதாயத்தில் சிறந்த இளைஞர் படையாக உரு வாக வாய்ப்பு உள்ளது.

    தற்போது வேலை கிடைக்காத இளைஞர்கள் இந்த திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவை செய்யும் இளைஞர்களாக இருப்பார்கள்.

    சமுதாயத்திற்கு இந்த திட்டம் நல்ல பலனைத் தரும் இந்த பயிற்சியால் நாட்டுப்பற்று தேசப்பற்று, ஒழுக்கம், கடமை, கட்டுப்பாடு போன்ற அடிப்படை வாய்ப்புகள் அமையும். இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசா தமாக இருககும்.

    இளைஞர்களுக்கு புரிதல் இல்லாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இளை ஞர்கள் இதை முழுமையாக புரிந்து கொண்டு அக்னிபத் திட்டத்தில் சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×