search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advice"

    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.
    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பா.ஜனதா மிகுந்த உற்சாகம் அடைந்து உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    இந்த நிலையில் 3 மாநிலத்துக்கும் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-மந்திரி தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4½ மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது. கட்சி தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்காக புதுமுகம் அவசியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதனால் புதுமுக முதல்-மந்திரிகள் தேர்வு செய்யப் படலாம் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு 5-வது முறையாக முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் மேலிடம் அவருக்கு மீண்டும் பதவி கொடுக்க தயக்கம் காட்டி வருகிறது.

    முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளி ன்படி கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தம்-2024 பணியின்கீழ் 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்கீழ் 4.11.2023 மற்றும் 5.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும்திருத்தம் தொடர்பாக 23,011 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில்சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி முன்னேற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல்அதிகாரியும் , அரசு முதன்மைச் செயலா ளருமான சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமாருடன் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பொதும க்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இம் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.மேலும், ஒரே நபரின் புகைப்படம் மற்றும் ஒரே நபரின் பெயர் மற்றும் முகவரி ஒரே வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், ஒரே சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், இதர சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்க ளுக்கான வா க்காளர் பட்டியலி ல்கண்டறியப்பட்ட பதிவுகளை சம்மந்தப்பட்ட வாக்காளருக்கு உரிய அறிவிப்பினை வழங்கி, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தினார்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணி முன்னே ற்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபாக்கும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பதட்டமான வாக்கு ச்சாவடிகள் குறித்தும் கலெக்டரிடம் கேட்டறிந்தார்.மேலும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலைஅமைதியான முறையில் நடத்திட போதிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கள்ளக்குறிச்சிவருவாய் கோ ட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் பாலமுருகன், தனி தாசி ல்தார் (தேர்தல்) பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
    • ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    திருப்பூர்: 

    திருப்பூர் வடக்கு தொகுதியில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 25 மற்றும் 26ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சிறப்பு முகாமுக்கு, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயாராகும் வகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தாசில்தார் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

    தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரம்யா மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்காளரிடம் படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து பெறுவது, தேவையான ஆதார ஆவணங்களை பெற்று இணைப்பது. ஆன்லைனில் அவ்விவரங்களை பதிவேற்றம் செய்யும் முன் சரிபார்க்க வேண்டும். சிறப்பு முகாம் நாட்களில், ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

    • வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும் ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.
    • நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி த்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சி தஞ்சாவூர், தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவத்தைப் பற்றி ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

    மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் மொத்தம் 80 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை சிறப்பான முறையில் நடத்துவதற்கான வழிகளை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இப்பயிற்சி வட்டார அளவில் அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிகளுக்கு ஐந்து நபர்கள் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் வெங்கட்ராமன், குலோத்துங்கன், திருமுருகன், மதியழகன், பத்மவாதி, சுசித்ரா ஆகியோர் மாவட்ட கருத்தாளராக செயல்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பங்கேற்பினை அதிகரித்தல், துணை குழுக்கள் அமைத்தல், உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்தல் மற்றும் செயலி வழி பள்ளி மேம்பாட்டு திட்டமிடலை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சியானது நடை பெற்றது.

    இதில் பள்ளி மேலாண்மை குழு கட்டமைப்பு பற்றிய மேற்பார்வை மற்றும் துணை குழுக்கள் பற்றிய அறிமுகம் மேலும், பெற்றோர் செயலையும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டமும் நடந்தது. நடக்கப் போவது, செய்ய வேண்டியது போன்றவை பயிற்சியின் சாராம்சமாக விளக்கப்பட்டது.

    இப்பயிற்சியினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌமிய நாராயணன், தமிழ்நாடு கல்வி பெல்லோவ்ஷிப் ஒருங்கிணைத்தனர்.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2016-22 வரை வழங்கப் பட்ட 2862 வீடுகளை கட்டி முடிக்காதவர்களுக்கு ஆலங் குப்பம் சமுதாயக் கூடத்திலும், ஏனாதிமங்க லம் ஊராட்சி சேவைமைய கட்டிடத்திலும், அரும் பட்டு சமத்துபுரம் சமுதாயக் கூடத்திலும், மணக்குப்பம் விஜய் திருமணமண்ட பத்தி லும் அண்டராய நல்லூர் அஞ்சுகம் திருமண மண்ட பத்திலும் முகாம் நடை பெற்றது.

    அரும்பட்டு கிராமத்தில் நடைபெற்ற முகாமில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் சிமெண்ட் கம்பி பணம் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் வீடு கட்டுவதற்கு சிரமங்கள் இருந்தால் தீர்ப்பதாகவும் வருகிற 31.12. 2023-க்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் வீடுகளை கட்டி முடிப்பவர்கள் வீடுகளுக்கு தான் வருவதாகவும் கூறினார்.அவருடன் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் (வட்டார ஊராட்சி) கேசவலு (வட்டார ஊராட்சி) விஜயபாலன்(கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் ராஜன், ஒன்றிய பொறி யாளர் ரங்கபாஷியம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூரில் உலக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தி.மு.க. மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் பால. கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. இதில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் தற்போது புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களில் நான் மேற்கொண்ட பரிசோதனையில் கணிச மாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இடையே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 4 வகையான புற்றுநோய் உள்ளன.இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆகையால் பெண்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோய் உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது கட்டிகள் உருவாகி நீண்ட நாட்கள் இருந்தால் அதனை அலட்சியமாக விடுபடாமல் உடனடியாக கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி புற்று நோய்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் அதிகளவில் பதிவுகள் செய்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.
    • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    மதுக்கூர் பகுதியில் சில கனரக வாகனங்கள் எவ்வித உரிமமும் இன்றி இயங்கி வருகிறது.

    இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே, போக்குவரத்து காவல்துறை சார்பில் அனைத்து வாகன உரிமையாளர்களையும் அழைத்து சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோ சனைகள் வழங்க வேண்டும்.

    மேலும், எவ்வித உரிமம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகனங்களை பறிமுதல் செய்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வினோதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார்.
    • மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் கிராம த்தை சேர்ந்தவர் வினோதன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று மதியம் 3 மணியளவில் பண்ருட்டி ராஜானி சாலையில் நோ பார்க்கிங்கில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர கூறியுள்ளனர். ஸ்கூல் சவாரி உள்ளதால், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு போலீஸ் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியு ள்ளார். அப்போது அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அவரது மனைவி அம்சவள்ளி அதனை கண்டித்துள்ளார். போலீசார் கண்டித்ததாலும், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர சொன்னதாலும் குடித்ததாக வினோதன் அம்சவள்ளி யிடம் கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, உன்னுடன் நான் வாழமாட்டேன் எனக் கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 8 மணிக்கு தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பிற்கு வந்த வினோதன், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், வினோதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது மனைவியை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராமநாதபுரத்தில் சேமிக்கும் குடிநீரை மூடி வைத்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
    • சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீடுகளில் குடி நீரை கேன்கள், திறந்த நிலை டிரம்களில் பொது மக்கள் பிடித்து சேமித்து வருகின்ற னர். இதில் உருவாகும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந் தப் பகுதியில் சுகாதா ரத்து றையினர் பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகின்றனர்.

    திறந்த வெளியில் தண் ணீரை சேமிக்க கூடாது, சேமிக்கப்படும் தண்ணீர் டிரம்களை மூடி பாதுகாப் பாக வைக்க வேண்டும், டெங்கு கொசுக்கள் உற்பத்தி யாகாமல் தடுக்க வேண்டும் என்று வீடு, வீடாக விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் வீடுகளில் சேமிக்கப்படும் குடிநீரால் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி ஆகிய பகுதிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகிறோம்.

    பரிசோதனைகளை உரிய முறையில் நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனை களில் கார்டுகளில் டெங்கு பரிசோதனை செய்யக் கூடாது. காய்ச்சல் குறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • மானாவாரி பயிர்களில் மகசூலை அதிகரிக்க விதை கடினப்படுத்துதல் முக்கியமானது.
    • இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மானாவாரியில் பயிரிடும் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பருவ மழையை மட்டுமே நம்பி உள்ளது. மானாவாரி பயிர்க ளில் மகசூலை அதிகரித்திட விதை கடினப்படுத்துதல் என்பது முக்கியமான தொழில் நுட்பமாகும்.

    விதை கடினப்படுத்துதல் என்பது விதையினை சில மணி நேரங்கள் நீரில் ஊற வைத்து பின்னர் விதைகளை அதன் இயல்பான ஈரப்ப தத்திற்கு உலர வைத்தல் ஆகும். நீருடன் சில மருந்து களை கலந்து ஊறவைத்து விதைப்பதால் விதைகளின் வீரியம் அதிகரித்து வறட் சியை தாங்கி வளர்வதுடன் மிகக் குறைந்த செலவில் 10 முதல் 15 சதவீதம் மகசூல் அதிகரிக்கிறது.

    நெல், கம்பு, பருத்தி விதைகளை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் குளோரை டினை 1 லிட்டர் தண்ணீ ரில் கரைக்க வேண் டும். இக்கரைசலில் 550 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி இயல்பான ஈரப் பதம் வரும் வரை நிழலில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும்.

    சோளம்

    சோளம் விதையை கடினப்படுத்த 20 கிராம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில் 650 மில்லி லிட்டர் எடுத்து அதில் ஒரு கிலோ விதை யினை 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி அதன் இயல்பான ஈரப்பதம் வரும் வரை நிழலில் வைத்த பின் விதைக்க வேண்டும்.

    உளுந்து, பாசிப்பயறு

    உளுந்து, பாசிப்பயறு விதைகளை கடினப்படுத்த 1 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் 1 கிராம் மாங்கனீசு சல்பேட்டினை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரை சலில் 350 மில்லி லிட்டர் எடுத்து அதில் 1 கிலோ விதையினை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். விதைக்க பயன்படுத்தும் விதையின் அளவை பொறுத்து கரைசலின் அளவினை கூட்டிக் கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாத புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
    • அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 58-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவ னங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் 37 பள்ளி மாணவ-மாணவி களை சந்தித்து கலெக்டர் ஜெயசீலன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கை யில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனு வங்களில் இருந்து கிடைக் கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.

    வாழ்க்கையில் சாதிக்க கூடுதல் முயற்சி செய்ய 12-ம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.

    படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றம் அடைய செய்யும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு மிகவும் எளிய வழி என்றால் அது படிப்பு மட்டுமே.

    உயர்கல்வி எங்கு பயின் றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற் றிக்கு தேவையான விஷ யங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

    மேலும், ஒவ்வொரு வருக்கும் என்று தனித் திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பண்டாரவாடை ஊராட்சி மன்றம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.

    முகாமை, பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆலோ சனைகள், அறிவுரைகள் வழங்கினார்.

    முகாமில் பொதும ருத்துவம், கர்ப்பிணிகளுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, பிசியோதெரபி, மன நல மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு மருத்துவத்திற்கு ஆலோசனைகளும், மருத்துவமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, கழக நிர்வாகி அறிவழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் சுவாமிமலை பேரூர் தலைவர் புர்கான் அலி , வட்டார மருத்துவ அலுவலர் தீபக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    ×