search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admissions"

    • அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

    கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.

    முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
    • கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை வருகிற 14-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.

    • தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழிற்சாலைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்க ளில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கா னிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சா லைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், செல்போன் எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்க ளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    • சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும்.
    • மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சத்தான உணவு

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண வுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளி கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி நாமக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதக மண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவி களுக்கான விளை யாட்டு விடுதி நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    தேர்வு

    மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்க ளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கு வதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடை பெறும். இதற்கான மாவட்ட அளவி லான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபாடி மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்கு வாஷ், மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து , கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    முன்னூரிமை

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16-ந்தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வழக்கமாக, அரசுப்பள்ளிகளில் 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
    • பிற மாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மற்றும் சுற்று ப்பகுதி அரசுப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி உள்ளரன். தற்போது, ஒன்பதாம்வகுப்பு வரை தேர்வுகள் நடப்பதால், அருகிலுள்ள குடியிருப்புகளில் பள்ளி செல்லும் வயதிலுள்ள மாணவர்களின் பெயர்களை மட்டும், நேரடியாக சென்று ஆசிரியர்கள் பதிவிட்டு வருகின்றனர். நடப்பாண்டில் புதிய மாற்றாக சேர்க்கைக்கான வயது வரம்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

    வழக்கமாக, அரசுப்பள்ளிக ளில் 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். ஜூலைக்கு முன்பும், பின்பும் என்ற முறையில் மாணவர்களின் வயது கணக்கிடப்படுகிறது.ஆனால் நடப்பாண்டில் ஜூலையிலி ருந்து தற்போது டிசம்பர் வரை பிறந்த மாணவர்கள் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே, சேர்க்கை எண்ணிக்கையில் முழுமையான பதிவிட முடியும் என்றனர்.

    உடுமலை நகர அரசு பள்ளிகளிலும் பிற மாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தென்னைநார் தொழி ற்சாலை, கோழிப்பண்ணை களில் பீகார், ஒடிசா மாநிலங்களைச்சேர்ந்த பலரும் பணி செய்கின்றனர்.நடப்பாண்டில் உடுமலை நகரப்பகுதியிலும் இந்த குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    • 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
    • முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இளநிலை பாடப்பிரிவுகளில் 864 இடங்கள் உள்ள நிலையில் முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    இதற்கான கலந்தாய்வு வாயிலாக 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 12 விளையாட்டுத்துறையைச்சேர்ந்த மாணவர்கள், ஒரு தேசிய மாணவர் படையைச்சேர்ந்த மாணவர் என, மொத்தம் 18 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதளத்தை பார்வையிடலாம்.அதேபோல, தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வுக்கு உரிய குறுஞ்செய்தி அவரவர் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த தகவலை, கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
    • பெரம்பலூர், வேப்பந்தட்டை பகுதி கல்லூரிகளில் நடக்கிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட பொது கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 எடுத்து கொண்டு தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

    இதேபோல் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பி.எஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து, வருகிற 8-ந் தேதி காலை 10 மணியளவில் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், பி.காம், பி.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்ளக்கூடிய மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு போட்டோ-5 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

    • வேலைவாய்ப்பை பெற்றுதரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.
    • இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயற்கை எழிலுடன் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் சிறந்த கல்வியை பெற்று தங்களது வாழ்வை மேம்படுத்தி க்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    நாக் "ஏ" கிரேடு பெற்றுள்ள இந்த கல்லூ ரியில் என்ஜி னீயரிங் படிப்பு களான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பயோமெடிக்கல் போன்றவையும் உயர் படிப்புகளான எம்.இ., சி.எஸ்.இ., எலக்ட்ரா னிக்ஸ், ஸ்டெக்சரல் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினீயரிங் டிசைன் மற்றும் பி.எச்.டி. பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகி ன்றன.பி.டெக்கில் பயோடெக், ஆர்ட்டி பிசியல், இண்ட லிஜண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ. போன் பாட பிரிவுகள் உள்ளன.

    பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து வெளியேவரும் மாணவ-மாணவிகளுக்கு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டு பன்னாட்டு மற்றும் பிரபல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஜோஹோ போன்ற நிறுவனங்களில் 1263 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்வானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள். இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த ஆண்டு (2022-2023) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ், நிதந்தர சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, இமெயில்., பதிவு கட்டணம் செலுத்த ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள் கொண்டுவர வேண்டும். மேலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    உடனடி சேர்க்கை்காக சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம், கயத்தாறு, நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடயநல்லூர் ஆகிய ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான விவரங்க ளுக்கு 80125 31336, 78670 47070, 98946 04930 மற்றும் 80125 31321, 04562-239600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இதேபோல் பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    • கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
    • கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பதற்கு மானூர் மற்றும் நல்லம்மாள்புரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உக்கிரன்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி என 3 மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமே உள்ளது.

    குறிப்பாக மானூரில் உள்ள அரசு பள்ளிக்கு போதிய பஸ் வசதி இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் இங்கு சென்று பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவ சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கு 190 மாணவிகள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 120 மாணவிகள் சேர்ந்தவுடன் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால் இன்று பிளஸ்-1 வகுப்பில் சேருவதற்காக சென்ற மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியை குமாரி பிரபாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    காரணம் என்ன?

    அப்போது தலைமை ஆசிரியை கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பிற்கு கணக்கு பதிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட 4 பாட பிரிவுகளில் மாணவிகள் சேர்க்கை நடந்தது.

    இதில் கணக்கு பதிவியல் பிரிவிற்கு பாடம் நடத்தும் ஆசிரியருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த ஆசிரியர் சமீபத்தில் இறந்துவிட்டார்.

    அதன் பிறகு கணக்கு பதிவியலுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அந்த பிரிவில் மாணவிகள் சேர்க்கப்படவில்லை. மற்ற பாடப்பிரிவுகளுக்கு போதிய மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×