search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aadi thabasu"

    • நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.
    • அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா.

    "அரியும் அரனும் ஒன்றே" என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன்,

    அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள்.

    அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி,

    ஈரப் புடவையுடன் கோவில் பிரகாரத்தில் படுத்து விடுவார்கள்.

    இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை.

    • ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
    • ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 20 குறிப்புகள் வருமாறு:

    1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

    2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

    3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டு தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

    4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

    5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

    7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது.

    எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

    9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாதமாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

    10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

    11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது.

    எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

    13. ஆடி மாதம் சுக்ல தசமியில் "திக் தேவதா விரதம்" இருக்க வேண்டும்.

    அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

    14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.

    இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

    அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    • ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடைபெறுகிறது.
    • ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், தவ மிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

    இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோமதி அம்பாள் காலை 5.40 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜ லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் பிரகாஷ், சீதாலட்சுமி ராம கிருஷ்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், அனுசியா மாரிமுத்து, அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், இசக்கியப்பன், நகர ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி

    அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரகாஷ், சபரிநாத், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.

    • தினமும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடக்கிறது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 7-ம் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பூம்பல்லக்கில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11-ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஆடித்தபசு விழா 31-ந்தேதி நடக்கிறது.
    • 31-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் புனிதநீர் எடுத்து வந்து கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு விழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு கும்பாபிஷேகம், யாககேள்வி, தீபாராதனை, காலை 6 மணிக்கு அம்பாள் தபசு புறப்படுதல், 8.30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வீதிஉலா வருதல், மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கரநாராயணராக கோமதி அம்மாளுக்கு காட்சி கொடுத்தல், இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி, நள்ளிரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன் சப்பரங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவதை தவறு என உணர்த்தும் திருத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆடித்தபசுவை முன்னிட்டு இன்று கொடியோற்று விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி களான சங்கரநாராயணர் காட்சி தரிசனம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சுவாமி அம்பாளுக்கு இடப வாகன காட்சி தரிசனம் வருகிற 31 -ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. மேலும் மறுநாள் இரவு தெப்ப திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

    • 29-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 31-ந்தேதி கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து காலை 6.16 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற பூஜைகளை சிவராமன் தலைமையிலான பட்டர்கள் செய்திருந்தனர்.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் திருநாளான 31-ந் தேதி தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9 ஸ்ரீகோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 12.05 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., சங்கரன் கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, சங்கரன் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, கொடி யேற்ற மண்டகப்படி நிர்வாகிகள் கம்மவார் நாயுடு மகாஜன நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தேரோட்டம் 29-ந்தேதி நடைபெறுகிறது.
    • ஆடித்தபசு காட்சி 31-ந் தேதி நடைபெற உள்ளது.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.

    இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்கிறார்கள்.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான 31-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று (வியாழக்கிழமை) சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா நடக்கிறது.
    • நாளை (வெள்ளிக்கிழமை) 10 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    அம்பை தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோமதியம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியாக தபசுத்திருநாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி தபசு மண்டபத்துக்கு சென்றார்

    மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அம்பை புதுக்கிராமம் தெருவில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், 10 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் முருகசுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் சங்கு சபாபதி ஆகியோர் தலைமையில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.

    • இன்று (வியாழக்கிழமை) சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
    • இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.

    சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை-மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டு கடந்த ஜூலை 31-ந் தேதி காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேரோட்டம் கடந்த 8-ந்தேதி காலை நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி பதினோன்றாம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 12.30 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாலை 5.15 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு தெற்கு ரத வீதியில் உள்ள தபசு பந்தலுக்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து தபசு மண்டபத்தில் இருந்த அம்பாள் 6.15 மணிக்கு தபசு பந்தலுக்கு வந்தார். இதையடுத்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.40 மணிக்கு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.

    கோலாகலமாக நடந்த இதை கண்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் வீசினர். பக்தர்கள், `சங்கரா, நாராயணா' என பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

    திருவிழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில், கூடுதல் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர், டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாஸ், தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆடித்தபசு திருவிழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலைய துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

    12-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    • சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.

    தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலும் ஒன்று.

    இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    விழாவையொட்டி தினமும் கோமதி அம்பாள் காலை மற்றும் இரவில் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தொடர்ந்து பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் மண்டக படிதாரர்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

    9-ம் திருவிழாவான கடந்த 8-ந்தேதி தேரோட்டம் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று 11-ம் திருநாள் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சியளிக்கும் தபசு காட்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பரிவட்டம், திருக்கண் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பிற்பகல் 11.40 மணிக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 5.30 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்க சுவாமி தனது உடலின் ஒரு பாதியை சிவனாகவும் மற்றொறு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து கோமதி அம்பாள் தபசு மண்டபத்திற்கு மீண்டும் எழுந்தருளியதும் இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான முறையில் தபசு காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    இதையொட்டி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 4 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையம் சாலை நீதிமன்றம் அருகிலும், நெல்லை சாலை அரசு மருத்துவமனை அருகிலும், திருவேங்கடம் சாலை நகராட்சி அலுவலகம் அருகிலும், தென்காசி சாலை சேர்ந்தமரம் விலக்கிலும் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் கூடுதல் எஸ்.பி. சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதிர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது.
    • ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக ஆடித்தபசு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    சைவமும் வைஷ்ணவமும் கைகோர்த்துக் காட்சி தரும் திருத்தலம் சங்கரன் கோவில். இங்கே சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து, ஒரே உடலெனக் கொண்டு காட்சி தருகின்றனர். சிவனாரும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரராக எப்படிக் காட்சி தருகிறார்களோ... அதேபோல், சிவனாரும் பெருமாளும், ஹரியும் ஹரனுமாகக் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம்.

    இந்தக் காட்சியை தரிசிக்க வேண்டி, கடும் தவம் புரிந்தாள் உமையவள். ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவம் இருந்தாள். அவளின் தபஸ் செய்யும் காட்சியே சங்கரன் கோவிலின் இன்னொரு அற்புதமானது. இந்தத் தலத்தில், தவக்கோலத்தில் கோமதியம்மன் காட்சி தருகிறாள். அவளின் தவத்துக்கு இணங்கி, சங்கரநாராயணர் கோலத்தைக் காட்டினர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் மகா யோகினி சக்தி பீடம் எனப் போற்றுகிறது புராணம்.

    கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டினார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.

    தவம் புரிந்த கோமதியன்னைக்கு, ஆடி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர். அதனால்தான் ஒவ்வொரு ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவிலில் பத்து நாள் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    இன்றைய தினம் கோமதியன்னை, தபசுக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது. தவக்கோலத்தில் இருந்து சங்கரநாராயணரை தரிசித்த கோமதி அன்னையின் தவக்கோலத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வர்..

    விரதம் இருந்து கோமதியன்னையின் ஆடித்தபசு விழாவில் கலந்துகொண்டு, கோமதி அன்னையையும் சங்கரநாராயணரையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், வாழ்வில் எல்லா யோகமும் கைகூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்பது ஐதீகம்.

    ×