search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Month"

    • தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.
    • காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

    தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை "முவ்வாறு பதினெட்டு" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.

    ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

    திருச்சி அருகே உள்ள திருநெடுங்கா நாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத விழாவாகும்.

    வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள்.

    பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவி விடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.

    சென்னை திரு நின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து

    மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

    கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள்

    பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள்.

    நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள்.

    ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும்.

    அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

    ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

    செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும்.

    அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.

    தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை

    ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம்.

    மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.

    தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

    ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

    புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில்

    முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும்

    விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.

    தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.

    புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

    ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.

    சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு

    ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.

    இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது.

    ஆடி வெள்ளியன்று இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

    எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

    திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமி தேவியாகவும்

    உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

    ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம்

    உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது.

    அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.

    காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

    திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது.

    இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    • அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
    • கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.

    1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள்

    மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான்

    ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.

    4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

    5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும்.

    சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    6. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.

    இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    7. ஆடிப் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

    அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    8. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில்,

    ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.

    9. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப் பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

    10. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள்.

    அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.

    • பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.
    • அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.

    பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.

    எந்த சூழ்நிலையிலும் ஆடி மாதம் திருமணம் செய்வதை முன்னோர்கள் ஆமோதிப்பதில்லை.

    தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடிமாதத்தை ராசியில்லாத மாதமாகவே கருதி வருகின்றனர்.

    இதிலிருந்து ஏதோ ஒரு விஷயம் இதன் பின்னால் உள்ளதை உணரலாம்.

    ஆடி மாதத்துக்குப் பின் வரும் ஆவணி மாதம் நிலவின் குளுமை நிறைந்த மாதம் என்றும்

    அதனால் ஆவணியிலே திருமணம் செய்யலாம் என்று சொல்வது வழக்கம்.

    திருமணம் மட்டுமின்றி முக்கிய சடங்குகளும் ஆடிமாதம் நிகழ்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.

    திருமணம் என்பது மனதாலும், உடலாலும் எதிர்கொள்ள வேண்டிய வைபவம்.

    அதனால் இதற்கு மிகவும் கவனம் தேவை.

    ஆடிமாதம் பொதுவாக உடல் நலத்துக்கு உகந்த மாதம் அல்ல.

    இயற்கை உடல் நலத்துக்கு எதிராக இருக்கும்.

    அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.

    இந்த காரணத்தாலேயே ஆடிமாதம் திருமணம் போன்ற சடங்குகள் நிகழ்வதில் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
    • அம்மன் வழிபாடு நம் துன்பங்களை போக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.

    * ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

    * ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

    * ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    * அம்மனை வழிபடும் போது மறக்காமல் 'லலிதாசகஸ்ர நாமம்' சொல்ல வேண்டும்.

    * ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    * ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

    * ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    * ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    * பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    * ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    * பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.

    * ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    • பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
    • மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    தேவர்களின் இரவு பொழுதாக கருதப்படும் தட்சணாயன புண்ணிய காலம் இன்று தொடங்குகிறது. இதேபோல ஆடிமாத பிறப்பும் இன்று தொடங்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான பாளையில் அமைந்திருக்கும் அழகிய மன்னார் ராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை மற்றும் சிறப்பு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

    இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராஜ கோபால சுவாமி விஸ்வரூப தரிசன மும், அதனை தொடர்ந்து கருடன் சன்னதி முன்பு கோபூஜையும் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொ டர்ந்து லட்சுமி அஷ்டோத்திர சிறப்பு பூஜை களும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட பக்தர்களும் பசுவிற்கு அகத்திக்கீரை- பழ வகைகளை வழங்கி வழிபாடு செய்தனர்.

    • மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும்.
    • சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

    சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது.

    வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம்.

    அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது.

    மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

    ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது.

    இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான்.

    ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது.

    ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே.

    என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?

    -கோகுல மணிகண்டன்

    ×