search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness rally"

    • முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
    • நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    சென்னை:

    சென்னை, அகரம், ஜெகநாதன் தெருவில், வட சென்னை பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் தினந்தோறும் தேர்தல் பணியை எப்போதும் செய்து கொண்டிருக்கின்ற கழகத் தோழர்கள் நிறைந்த பகுதி, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவரின் நல்வழியை பின்பற்றுகின்ற மக்கள் நல விரும்பிகள் தான், இந்த தொகுதியில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியினுடைய முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் மக்களோடு தினசரி மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதால் இந்த முறை இந்த கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு தி.மு.க. உதயசூரியன் சின்னம் பெறும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

    கலாநிதி, நமது ஆட்சி வந்த பிறகு 34 மாதங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஆட்சி இல்லாத போது அரசிடம் போராடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றவர், பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய காலத்தில் கொடுங்கையூர் குப்பைகள் கொட்டும் வளாகம், கணேசபுரம் மேம்பாலம். ஆர்.கே. நகர் மேம்பாலம் போன்ற, மக்களுக்கு கால காலத்துக்கும் பயன்படுகின்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.

    மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த வட சென்னை பாராளுமன்ற தொகுதியினுடைய வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கும் தொடர்ந்து இப்போது போல் பாடுபடுவார்.


    முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தற்போது வட சென்னையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூங்காக்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், கடற்கரையை அழகுபடுத்துகின்ற பணிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அதேபோல டயாலிசிஸ் அமைப்புகள் என்று கிட்டத்தட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் என்று 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏற்கனவே வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்த மாதம் 14-ந் தேதி, சென்னை தங்க சாலை மணிக் கூண்டு அருகிலே ரூபாய் 4,414 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். அறிவித்தார் என்பதைவிட பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.

    நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.

    அனைவருடைய மேம்பாட்டிற்காகவும் நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்.

    தொடர் பயணமாக 20 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தை முன்னேற்றத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக கொண்டு வருவதற்கு அனைத்து பணிகளையும் தொலைதூர நோக்கோடு திட்டமிட்டு இருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்திலேயே என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார். அங்கு பெண்மணியிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து அருகில் இருந்த பூக்கடைக்கு சென்று கூவி கூவி பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது என்னை வெற்றி பெற செய்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என கூறினார்.

    இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    • பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது.
    • பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்த்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    மொத்தம் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 10 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ந் தேதி நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு காலை முதல் மாலை வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    அதன்படி மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளில் 3,779 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 12,294 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு என மொத்தம் 15,073 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பயிற்சி நாளில் விடுமுறை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். பலர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்றும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கடந்த முறை பங்கேற்காத 980 பேரும் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில் மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள மிக முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, போல் மானிடரிங் சிஸ்டம் செயலி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    • வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
    • காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிராக்டர் பேரணி தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது.

    அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    டிராக்டர்கள் அணி வகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் நர்மதா, காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    தேனி:

    ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது,

    பெண்களுக்கு எதிரான மற்றும் மனரீதியான துன்புறுத்தலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நமது சுற்றுப்புறங்களில் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. பெண்கள் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வெளியில் சொல்வது கிடையாது, பாதிப்பு அதிகமான பிறகு தான் வெளியில் சொல்கிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக,

    தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஒன்ஸ்டாப் சென்டர் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர அழைப்புகளில் தொடர்பு கொண்டு இதன் மூலம் பலர் தீர்வு காணப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நல்ல சூழ்நிலை உருவாவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருமணமான பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் தற்பொழுது குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர்களுக்கு இதுபோன்ற மனநிலை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    இதையொட்டி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது என பேசினார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    • பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கபிலர் மலை வட்டார வளமைய பயிற்றுநர் வினோதா, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியைகள் ஜீவா, மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி இந்தியன் வங்கி, மின்சார வாரிய சேமிப்புக் கிடங்கு, சரளைமேடு, அரசுப் பொது மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்னதாக சுற்றுச்சூழல் மன்ற மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத் தூய்மை. தேவையற்ற மரக் கிளைகளை வெட்டி அகற்றுதல், கட்டிட மேல் தளங்களில் உள்ள ஈரக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஆசிரியர் வழிகாட்டுதலில் பேரில் பாதுகாப்பான முறையில் மேற்கொண்டனர். முடிவில் சாரண ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சார்பில் நவம்பர் 14-ந்தேதி தேசிய குழந்தைகள் தினம் மற்றும் நவம்பர் 20-ந்தேதி சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற தலைப்பில் மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மேல்நிலை ப்பள்ளியில் முடிவடைந்தது.

    ஊர்வலத்தில் சுமார் 200 மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    • நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர், சுகுமாரன், செயலாளர். டாக்டர் நாராயணசாமி, பொருளாளர் ராஜரா ஜன், கல்லூரி இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகி யோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமின் இறுதி நாளில் டெங்கு காய்ச்சல் விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவ அதிகாரி முகந்தி, நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், வேளாண் கல்லூரி முதல்வர் முகமது யாசின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இப்பேரணி கரிய மாணிக்கம் உழவர் உதவி யகத்தில் தொடங்கி, நெட்டப்பாக்கம் சிவன் கோவில் திடலில் முடிவ டைந்தது. இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிறை வாக பண்ட சோழநல்லூர் கிராமத்தி லுள்ள அரசு நடு நிலை பள்ளி வளாகத்தில் பூந்தோட்டம் அமைத்துத்த ரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரையாற்றினார்.
    • பேரணியானது திருமருகலில் தொடங்கப்பட்டு திட்டச்சேரியில் முடிவடைந்தது.

    நாகப்பட்டினம்:

    பெருகிவரும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளிலில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

    திட்டச்சேரி(ப.கொந்தகை) கடை வீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர் திட்டச்சேரி (ப.கொந்தகை) கடைவீதியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி திருமருகல் கடைவீதியில் முடிக்கப்பட்டு பின்பு பொது மக்கள் மத்தியில்தலை க்கவசம் உயிர்க்கவசம் என்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    மீண்டும் பேரணியானது திருமருகல் கடைவீதியில் இருந்து தொடங்கப்பட்டு திட்டச்சேரி காவல் நிலை யத்தில் முடிக்கப்பட்டது.

    • பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    பவானி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் பெயர் சேர்த்தல் நீக்கம் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் போன்ற வற்றினை செய்து கொள்ளும் வகையில் வாக்காளர்கள் அந்த அந்த வாக்குச்சாவடி முகாமிற்கு சென்று விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதனை த்தொடர்ந்து பவானி அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் மூலம் முகாம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளியை அடைந்தது.

    இந்த பேரணியில் பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×