search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young girl"

    • காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் பெண்ணை கண்டித்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இளம் பெண்ணை வீட்டில் காணவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உறவினர் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டில் இளம்பெண் தன் கைப்பட எழுதியிருந்த கடிதம் கிடைத்தது.

    அதில் தன்னை தேட வேண்டாம் என்று எழுதியிருந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்க ன்கோ ட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்க டேஷ். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் வீட்டில் இருந்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வெங்கடேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காயத்திரி குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.

    வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவி ல்லை.

    இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீக்குளித்த இளம்பெண் உடல் கருகி பலியானார்.
    • ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மதியழகி (வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மதியழகி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதியழகி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்."

    • கோபிசெட்டிபாளையம் அருகே கணவன் மனைவியை திட்டியதால் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.
    • இது குறித்து கணவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொரவம் பாளையம் நடராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரத்தினாள் (34). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்னர்.

    இந்த நிலையில் ரதினால் வேலைக்கு சென்று விட்டு வந்து சரியாக வீட்டு வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியை கணவன் கண்டித்து வந்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து தங்கராஜ், ரதினாலை திட்டினார். இதனால் ரத்தினாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.

    அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து தங்கராஜ் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×