search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "95 வயது மூதாட்டி"

    பெற்ற பிள்ளைகள் 9 பேர் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட 95 வயது மூதாட்டியை சமூக ஆர்வலர் மீட்டு, முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை கொழிஞ்சாறையை சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி அந்தோணியம்மாள். இவரது கணவர் தேவராஜ்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அந்தோணியம்மாள் தேவராஜை பார்த்து கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் காட்பாடியில் உள்ள தனது மகள் ஜெய்சிராணி வீட்டுக்கு அந்தோணியம்மாள் வந்தார். அவரை மருமகன் நந்தகுமார் நன்றாக கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நந்தகுமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதற்கு பிறகு மகள் ஜெய்சிராணி அந்தோணியம்மாளை கவனிக்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்த அந்தோணியம்மாள் கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். அந்த பணத்தையும் அவரது மகள் வாங்கி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த மாதம் அந்தோணியம்மாள் கீழே விழுந்தததில் அவரது வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கிருந்த ஒரு பெண் பாதுகாத்து பணிவிடை செய்து வந்தார்.

    இது குறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் மணிமாறன் என்பவர் மூதாட்டியை அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

    அதில் அந்தோணியம்மாளுக்கு உணவு தங்க இடம் வழங்க வேண்டும். இவரை கைவிட்ட உறவுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து கலெக்டர் ராமன் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்திக்கு தகவல் தெரிவித்து முதியோர் காப்பகத்தில் மூதாட்டியை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    எங்களுக்கு 13 குழந்தைகள் பிறந்தன. சிலர் இறந்து விட்டனர். தற்போது 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

    20 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும், எனது கணவரையும் பார்த்துக் கொள்வதில் மகன், மகள்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. எனது மூத்த மகளை வேலூர் காட்பாடியை சேர்ந்த நந்தகுமார் என்ற போலீஸ்காரருக்கு திருமணம் செய்து வைத்தேன். இதையடுத்து அவர் என்னை பார்த்துக் கொள்வதாக கூறி, வேலூர் அழைத்து வந்தார்.

    என்னையும் அவரது தாய் போல் அரவணைத்து பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பின்பு எனது மகளும், என்னை கைவிட்டு விட்டார். நான் அனாதையானேன். வேலூர் நகரில் பிச்சை எடுத்துத் தான் சாப்பிட்டு வந்தேன். இதுவரை எனது மகன்கள் என்னை பார்க்கவரவில்லை.

    நான் சிறிது, சிறிதாக சேர்த்து வைத்த பணத்தையும் எனது மகள் அவ்வப்போது வந்து வாங்கிச் சென்று விடுவாள். சில மாதங்களுக்கு முன்பு நான் கீழே விழுந்தேன். இதனால் எனது கால்கள் முறிந்து விட்டன. எழுந்து நடக்க முடியவில்லை. பிச்சை எடுக்கக்கூட என்னால் எங்கும் செல்ல முடியவில்லை.

    தற்போது நான் தங்கியிருக்கும் இடத்தில், ஒரு பெண் தான் என்னை தாய் போல் பார்த்துக் கொள்கிறாள். நான் இயற்கை உபாதைகளை கழித்தால், முகம் சுழிக்காமல், என்னை சுத்தப்படுத்துவாள். சாகும் வரை நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். நான் இறந்தால் பெற்ற பிள்ளைகளோ, பேரன்களோ யாரும் வரவேண்டாம் என்றார். அப்போது அவர் அவரையும் அறியாமல் கதறி அழுதார்.

    சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தோணியம்மாள் இறந்து விட்டதாக பொய்யான தகவல் கொடுத்தோம். அப்போது நேரில் வந்த உறவினர்கள் இவர் உயிரோடு இருப்பதை பார்த்து எங்களை திட்டினர். இறந்தால் சொல்லி அனுப்புங்கள். அவரை எங்களுடன் அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர் என்றார். 
    95-வது பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புதுவை சட்டசபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. #Karunanidhi #PuducherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

    1955-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினராக தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பதவி வகித்து வருகிறார். 1967-ம் ஆண்டு முதல்முறையாக முதல்-அமைச்சராகவும் ஆனார். 5 முறை கலைஞர் தமிழக முதல்-அமைச்சராக இருந்துள்ளார். தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் பல்வேறு வகைகளில் பாடுபட்டுள்ளார். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் சிவா பேசியதாவது:- எங்கள் தலைவர் கலைஞருக்கு புதுவை சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் இறுதி மூச்சுவரை போராடுபவர். எங்கள் தலைவர் 13-வது முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து வருகிறார்.

    எழுத்தாற்றல், பேச்சாற்றால், அரசியல், திரைத்துறை என அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்தவர். உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவராக திகழ்பவர் கலைஞர். 63 ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சி வருபவர். இத்தகைய தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில்கூட பார்க்க முடியாது.

    தனது ஆட்சிக்காலத்தில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். இந்திய நாட்டின் பிரதமர், ஜனாதிபதியை உருவாக்கியவர். தற்போது உடல்நலம் குன்றி இருந்தாலும் தன் பிறந்தநாளில் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவருக்கு சட்டசபை வாழ்த்து தெரிவித்ததற்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, 5 முறை தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நீண்ட பல ஆண்டாக தி.மு.க. தலைவராகவும் பதவி வகித்து வருபவர் கலைஞர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். 95-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் தலைவர் கலைஞர். அனைத்து துறைகளிலும் பல அளப்பறியா சாதனைகளை செய்தவர். தமிழர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். 3 முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரான போதும் தனது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆனவர். நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்கு புதுவை மக்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Karunanidhi #PuducherryAssembly
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா, மற்றும் வாழ்த்தரங்கம் திருவாரூர் அண்ணா திடலில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் ஒரே மேடையில் 23 தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா, மற்றும் வாழ்த்தரங்கம் திருவாரூர் அண்ணா திடலில் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    விழாவுக்கு பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேரூரை நிகழ்த்துகிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார்.

    இந்த விழாவில் ஒரே மேடையில் 23 தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைலர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீர பாண்டியன், இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர்எர்ணாவூர் நாராயணன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் தலைவர் பஷிர் அகமது, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக்கை சேர்ந்த அம்மாவாசி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதய ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இந்த விழாவின் மூலம் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருகின்றன. இது பாராளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையும் என்று கருதப்படுகிறது. #DMK #Karunanidhi
    ×