search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 பேர் கைது"

    • ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.
    • 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செங்காடு பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் (26). இவர் ஈரோடு, பெருந்துறை ரோட்டில் உள்ள பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    அந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இரு ம்பு பொருள்கள், பெயிண்ட் டிரம்கள் என 5 டன் எடையிலான பழைய இரும்பு பொருள்கள் நிறுவனத்தின் கிடங்கில் போட்டு வைக்கப்ப ட்டிருந்தன.

    அந்த கிடங்கில் ராஜேஷ் என்பவர் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்த பழைய இரும்பு பொருள்களை அலாவுதீன்பாஷா என்பவர் வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வை யாளர் சுசீந்திரன் கடந்த 16-ந் தேதி கிடங்குக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்க ப்பட்டிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் பழைய இரும்பு பொருள்களை காணவில்லை.

    விசாரணையில் பழைய இரும்பு பொருள்களை வாங்கிச் செல்லும் அலாவூதீன் பாஷா மற்றும் வாட்ச்மேன் ராஜேஷ் மற்றும் 5 பேர் கொ ண்ட கும்பல் ஒரு வேனில் 5 டன் பழைய இரும்பு பொருள்களை எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சுசீந்திரன் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அலா வுதீன்பாஷா, ராஜேஷ் மற்றும் இரும்பு பொரு ள்களை திருடி சென்ற 5 பேர் என 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). விவசாயி.

    இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் தங்கை வாரிசுகளான குப்பன், மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும், நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் இவரது மாமியார் குடும்பத்தினர் வெங்கடேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து, நிலத்தை சுவாதீனம் கொடுப்பதற்காக நேற்று செல்வம் (வயது42), குப்பம் மாள்(55), மாதம்மாள்(52), ஜெயராணி( 50), மாதேஷ்(40), ரவி( 60), மாதேஷ்( 31), ஆகியோர் நிலத்திற்கு சென்று டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர்.

    இதனை தட்டி கேட்ட வெங்கடேஷனை, ஆத்திர மடைந்த 7 பேரும் கத்தி, கட்டையால் தாக்கி யதில் பலத்த காயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து வெங்கடேசன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாைணை நடத்தி வருகின்றனர்.

    • பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
    • பணத்தை அபேஸ் செய்த பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் குமார் (60). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் குமார் தனது மனைவியுடன் திருப்பூரில் 2-வது மகன் வீடு கட்டி வரும் நிலையில் மகனுக்கு பணம் கொடுக்க ரூ.7 லட்சத்துடன் மேட்டூரில் இருந்து பவானி லட்சுமி நகர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்ல 2 பேரும் பஸ் ஏறி உள்ளனர்.

    அப்போது அதே பஸ்சில் 2 பெண்கள் இவரின் சீட்டுக்கு அருகில் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் மயக்கம் வருவதாக கூறி மயக்கம் போட்டு உள்ளார்.

    மற்றொரு பெண் அவரை காப்பாற்றுவது போல காப்பாற்றி உள்ளார். பின்னர் அந்த 2 பெண்களும் மருத்துவமனை செல்வதாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.

    இந்த நிலையில் குமாரின் மனைவி சித்தோடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தான் வைத்து இருந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் சித்தோடு போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    நூதன முறையில் மயக்கம் வருவதாக நாடகமாடி கணவன், மனைவி கொண்டு வந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை அபேஸ் செய்த அந்த மர்ம பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இதனையடுத்து பவானி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் அந்த மர்ம பெண்கள் 2 பேரையும் ஆய்வு மேற்கொண்டதில் 2 பேரும் பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் சென்றது தெரியவந்துள்ளது.

    ஓடும் பஸ்சில் கணவன், மனைவியிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் அபேஸ் செய்து தப்பி ஓடிய 2 பெண்களை போலீசார் தேடி வரும் சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர் புகார்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சுந்த ரம்பள்ளி ஊராட்சியில் நேற்று முன்தினம் எருது விடும் திருவிழா நடைபெற் றது. இதில் 400 காளைகள் பங்கேற்று ஓடியது. மதியம் 2 மணி வரை மட்டுமே எருது விடும் திருவிழா நடத்த அனு மதி அளிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி 2 மணி அளவில் எருது விடும் திருவிழாவை முடித்துக் கொள்ள போலீ சார் மற்றும் வருவாய்த்துறை யினர் கூறினார்கள். ஆனால் விழாக் குழுவினர் விதிகளை மீறி மாலை 4.45 மணி வரை விழா நடத்தினர்.

    பலமுறை விழா குழுவினரிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கூறியும் எருதுகளை விட்டுக் கொண்டே இருந்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் நித்திய கல்யாணி கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறிப் பிட்ட நேரத்திற்குள் விழாவை முடிக்காமல், அதிகாரிகளை பணி செய்யாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

    அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கருணாநிதி, அழகேசன், ராஜ சேகர், மணி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.7 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • தேனி போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(18). இவருக்கு பாரஸ்ட் ரோடு பகுதிைய சேர்ந்த கணேசன் என்பவர் பழக்கமானார்.

    மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார். மேலும் இதற்கு ரூ.7 லட்சம் செலவாகும் எனக்கூறி அவரிடம் இருந்து பணத்தை பெற்றார். ஆனால் வேலை வாங்கிதராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

    பின்னர் போலி ஆவணத்தை தயார் செய்து வேலை உறுதி கடிதம் என கொடுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் பணத்தை திருப்பி தருமாறு தினேஷ்குமார் கேட்டார். அதற்கு கணேசன் வங்கி காசோலையை ெகாடுத்துள்ளார். ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதுகுறித்து தேனி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தேனி போலீசார் கணேசன், சஞ்சய், கீதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில் பொதுமக்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மணலிக்காடு சி.எஸ்.ஐ ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து சாலையில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவடந்ததையடுத்து கிள்ளியூர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் எட்வின் ஜோஸ் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரஷியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர்.
    • இந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    பெர்லின்:

    கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு, ஜெர்மனியின் ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

    உக்ரைன்-ரஷியா போரால் பாதிக்கப்பட்டுள்ள எரிபொருள் வினியோகத்தை சீரமைப்பது, பணவீக்க உயர்வை கட்டுப்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. எரிபொருளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதன்மூலம், ரஷியாவுக்கு லாபத்தை குறைக்க வியூகம் வகுக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் பற்றியும் பேசப்பட்டது.

    உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஐரோப்பிய பேரவையின் தலைவர் சார்லஸ் மிச்சேல் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியா முன்னெடுக்கும் போர் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த போர் உலகத்தையே ஆபத்திற்குள் தள்ளி உள்ளது. , இந்தப் போர் காரணமாக உணவு மற்றும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. விலைகள் அதிகரித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விஷயத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி 7 நாடுகளும் அசையாத ஒற்றுமையுடன் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு நிதி, மனிதாபிமான மற்றும் அரசியல் ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றார்.

    மாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ்சை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். நேட்டோவும் ஜி 7 நாடுகளும் பிளவுபடும் என ஆரம்பத்தில் இருந்தே விளாடிமிர் புதின் எண்ணிக்கொண்டிருக்கிறார். ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அனுமதிக்கக்கூடாது என்றார்.

    இதனிடையே ஜி 7 மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதியைத் தடுக்க ரஷியா முயல்வதால், பணவீக்கத்தை அதிகரித்து, உலகளாவிய உணவுப் பற்றாக்குறை குறித்த அச்சத்தைத் தூண்டிய போரை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தத்தை எவ்வாறு அதிகரிப்பது என்று ஜி 7 தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ரஷியத் தங்க ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.

    அந்தத் தடையால் ரஷியாவில் அரசியல் செல்வாக்குள்ள பெருஞ்செல்வந்தர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவர் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். உலக அளவில் தங்க வர்த்தகத்தில் லண்டனுக்கு முக்கிய பங்கு உண்டு.

    அதனால் தடையின் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும் என்று பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது. ரஷியாவின் பெரிய ஏற்றுமதிகளில் தங்கம் பிரதானமானது . சென்ற ஆண்டு ரஷியத் தங்க ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலர். ரஷியா மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிதிக் கட்டுப்பாடுகளின் தாக்கத்தைத் தவிர்க்க அங்குள்ள செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளைத் தங்கத்திற்கு மாற்றி வருகின்றனர். இந்த சூழலில் ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷிய தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான தடை பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என்ற தகவல் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே ஜி 7 மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று ஜெர்மனியின் முனிச் நகரை அடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய தூதரும், இந்திய வம்சாவளியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    முனிச் நகரை அடைந்தவுடன் பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஜி 7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க முனிச் நகரை வந்தடைந்தேன். உலக தலைவர்களுடன் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஆர்வமாக இருக்கிறேன். பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம், ஜனநாயகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    பிரதமர் மோடி, பிற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளார். இன்றைய மாநாட்டில், பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான ஒரு அமர்விலும் பிற தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    முன்னதாக வரவேற்பு நிகழ்வின்போது இந்தியர்களுடன் மோடி உரையாடினார். பிரதமருடன் அவர்கள் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

    • போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கோவை:

    கோவை உப்புக்கிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள பேக்கரியில் மேலாளராக உள்ளார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    பேக்கரியில் திருச்சி வையம்பட்டி காமா ட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (42) என்பவர் கடந்த 6-6-2021 முதல் 24-4-2022 வரை காசாளராக வேலை பார்த்து வந்தார். அந்த கால கட்டத்தில் பேக்கரி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அவர் போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரிடம் பணம் குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளர் மணிகண்டன் மீது நடவடி க்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித் திருந்தார். அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப ்பதிவு செய்து ஏமாற்றுதல் பிரிவில் வழக்குப ்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நகைக்கடை அதிபரை மிரட்டி பணம், நகைகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் காட்டுபாவா பள்ளிவாசல் கீழக்குடி பற்றி பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 30) இவர் கீழசெவல்பட்டி யில் நகை கடை நடத்தி வருகிறார்.

    பின்னர் தனது உறவினர் சுப்பிரமணியன் என்பவருடன் தனித்தனியாக இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பில்லமங்கலம் சுடுகாடு அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி 2.60 லட்சம் பணத்தையும், ஆறே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அருண்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

    கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தனது சொந்த பொறுப்பில் இதை அமைத்து கொடுக்க உள்ளார்.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேர்மன் விஜய்கண்ணன், கோவில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

    • கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் கிராமம் கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்.

    இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வந்தபின் தவிப்பதை விட வருமுன் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும், காக்க ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்" என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும்படியும், சிறுவர்களையும் உரிய முறையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. 7 பேர் பலியான சம்பவம் நடந்த கெடிலம் பண்ருட்டி முதல் கடலூர் வரையில் தண்ணீர் தேங்கியுள்ள 4 இடங்களிலும், பெண்ணையாற்றில் கண்டரக்கோட்டை பகுதியில் இருந்து கடலுார் மஞ்சக்குப்பம் வரையில் நெல்லிக்குப்பம், சாவடி, செம்மண்டலம் உள்ளிட்ட 5 இடங்களிலும் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    எச்சரிக்கை பலகைவைப்பதுடன், போலீசார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தினால், இனி மாவட்டத்தில் நீர்நிலை உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்

    • கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.

    ×