search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "65 நாட்கள் பூஜை"

    சபரிமலையில் சுமார் 65 நாட்கள் பூஜைக்குப்பின் நேற்று நடை அடைக்கப்பட்டது. #Sabarimala #AnnualPilgrimage
    சபரிமலை:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.

    இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் அய்யப்பனை தரிசிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் வன்முறை அரங்கேறியது.

    இதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27-ந் தேதி வரை மண்டல பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலையின் முக்கியமான இந்த விழா காலத்திலும் அங்கு போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு குறைவில்லை. எனவே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. இந்த நாட்களிலும் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது.

    எனினும் கடந்த 2-ந்தேதி அதிகாலையில் பிந்து (வயது 42) மற்றும் கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள் திடீரென சபரிமலையில் அய்யப்பனை தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதைப்போல இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் சபரிமலையில் தரிசனம் செய்தார். இந்த மண்டல பூஜை-மகரவிளக்கு காலகட்டத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் அய்யப்பனை தரிசனம் செய்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு கூறியுள்ளது.

    இவ்வாறு மிகவும் பரபரப்பும், பதற்றமுமாக கடந்த சபரிமலையின் தற்போதைய விழா நாட்கள் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 65 நாட்கள் நடந்த இந்த விழாக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    நேற்று அதிகாலையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராகவ வர்மா ராஜா சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து பஸ்மாபிஷேகம் நடந்தது. பின்னர் ஹரிவராசனம் இசைக்க 6.15 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டது.

    அடுத்ததாக சபரிமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைக்காக அப்போது 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

    சபரிமலையில் தற்போது நடை அடைக்கப்பட்ட போதும், மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையிலான மோதல் தீர்ந்தபாடில்லை. ஆளும் இடதுசாரிகளும், பா.ஜனதாவினரும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் அனைத்தும் தோல்வியடைந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

    ஆனால் சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க நடத்தப்பட்ட போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்து உள்ளார். முன்னதாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் 49 நாட்களாக பா.ஜனதாவினர் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று முடித்துக்கொள்ளப்பட்டது. 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியத்தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் தலைமையில் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் முன்னிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    பின்னர் இட்டமொழி மெயின் ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட திரளானபேர்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க துணைத்தலைவர் சேசுமணி, வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    மெயின் பஜாரில் சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் கோ‌ஷம் போட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் 57 பேர் உள்பட 65 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் கைது செய்தார். #tamilnews
    வேலூரில் 28 ஆண்டு ஜெயில் வாழ்க்கைக்கு பின் இப்போது 65 வயதான நபர் தனது காதல் மனைவியுடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று வேலூர் ஆண்கள் ஜெயிலில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்பிரமணியம் (வயது 65) என்பவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார்.

    அவரது விடுதலையும் அவர் காதல் மனைவியுடன் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் வருமாறு:-

    இலங்கையை சேர்ந்தவர் பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60). இவர் இலங்கை தமிழர் பிரச்சினையின் போது அகதியாய் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தவர். அகதியாய் வந்த அவர் தெருக்களில் நடனம் ஆடி அதில் வரும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

    கலைக்கூத்தாடியான விஜயாவின் நடனத்தால் மிகவும் கவரப்பட்டு அவரை காதலித்தார். இந்த காதலை அவரது வீட்டார் ஏற்க மறுத்தனர். இதனால் சுப்பிரமணியம் 1985-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி விஜயாவுடன் சேர்ந்தார். அதை தொடர்ந்து விஜயா, சுப்பிரமணியத்துக்கு நடனம் ஆடவும் கற்றுக்கொடுத்தார்.

    இருவரும் திருமணம் செய்து கொண்டு நடனமாடி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தனர். நடனமாட செல்லும் இடங்களில் தங்கி தங்களது அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். சுமார் 5 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை.

    இந்த நிலையில் ஒருநாள் இரவு இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை காலம் புரட்டிப்போட்டது. இவர்கள் நடனம் ஆடி முடித்த களைப்பில் சாலை ஓரம் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பக்கா விஜயாவை ஒருவர் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் விஜயாவை காப்பாற்ற தாக்கியுள்ளார். அதில் அவர் தலையில் அடிபட்டு இறந்தார்.

    வழிப்பறியில் கொலை செய்ததாக தம்பதிகள் 2 பேர் மீதும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயாவையும், சுப்பிரமணியத்தையும் 1990-ம் ஆண்டு கைது செய்தனர். இருவருக்கும் கோவை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

    இதையடுத்து வேலூர் பெண்கள் சிறையில் விஜயாவும், ஆண்கள் ஜெயிலில் சுப்பிரமணியமும் அடைக்கப்பட்டனர்.

    தங்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் இருவரும் 25 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். சிறையில் இருந்த விஜயாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனநோயாளியாக மாறினார். அவரது பேச்சும் பறிபோனது. பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார். பின்னர் அவர் வேலூர் அருகே அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார். அவர், தனது காதல் கணவருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தார்.

    இந்நிலையில் தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவையொட்டி நேற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவர் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார்.

    அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்த விஜயா சிறு குழந்தையாக மாறி சுப்பிரமணியத்தை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து அழுது கண்ணீர் வடித்தார். இந்தநிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    சுப்பிரமணியத்தை மாமா என்றழைக்கும் விஜயா தனது மாமாவை முதியோர் இல்லத்தில் கூடியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார்.

    விஜயாவை பார்த்த சுப்பிரமணியம் 20 முறையேனும் நலம் விசாரித்து சாப்பிட்டாயா.. சாப்பிட்டாயா.. என கேட்டது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. அவரது வாழ்வில் காதல் அத்தியாயம் மீண்டும் மலர்ந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியம் கூறும்போது, எங்களை காப்பாற்றிக்கொள்ள செய்த செயலால் நாங்கள் தண்டனையை அனுபவித்து விட்டோம். இனி நாங்கள் இருவரும் எங்களது சொந்த ஊருக்கே செல்ல இருக்கிறோம். அங்கு எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் கிடைக்கும் வேலையை வைத்து வாழ்ந்து கொள்வோம். எனது உயிர் இருக்கும் வரை அவளை கைவிடமாட்டேன்.

    நான் காப்பாற்றுவேன். இனி அவளுக்கென்று என்னை விட்டால் யாரும் கிடையாது. அவளுக்கு ஒன்றும் தெரியாது. என்னை மட்டுமே நம்பி உள்ள அவளை நான் காப்பாற்றவில்லையெனில் அந்த பாவம் என்னை சும்மாவிடாது என்றார்.

    ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. #Japan #NaturalDisaster #65Dead
    டோக்கியோ:

    ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) 106 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.



    ஆகஸ்டு மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி அமைப்பு கூறி உள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் நிறைய தண்ணீர் பருகுமாறும், குளுகுளு வசதியை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.#Japan #NaturalDisaster #Tamilnews 
    ×