search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "63 பேர் கைது"

    • 63 நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார்.
    • இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

    அறுபத்துமூன்று நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

    பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.

    அப்போது அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், 'அம்மையே அமர்க!' என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

    • மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
    • பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும்கி.பி.400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால் இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

    அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 'அறுபத்து மூவர் திருவிழா' என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது.

    ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிலர், திருக்கயிலாய வாத்தியம் இசைத்தும், சிவ நடனமாடியும் சாமியை வரவேற்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    மாடவீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சியில் விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீரபத்திர சுவாமிகள், திருவள்ளுவர்-வாசுகி ஆகியோர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.

    விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்ற தலைவர் பேராசிரியர் நல்லூர்சா.சரவணன் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    இதேபோன்று பெண்கள் பலர் கோவிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.

    மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். முன்னதாக நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.

    அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலைச் சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெண்களின் நகைகளை பாதுகாப்பதற்காக ஊக்குகளை போலீசார் இலவசமாக பெண்களுக்கு அளித்தனர். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது.
    • பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது.

    பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது. பிற்பகலில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலே குவிய தொடங்கினார்கள். சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.

    கோவிலின் முன் பகுதியிலும், உள்ளேயும் பக்தர்கள் கூடினார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதனை பக்தர்கள் வணங்கினார்கள். பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    மாலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வடம் பிடித்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு மாலையில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    பங்குனி திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கி தானமாக வழங்கினார்கள்.

    • பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் காண்பித்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
    • வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடியதும், உலக புகழ் பெற்றதுமான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் 6-ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளி முன்னால் செல்ல, 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புடைச்சூழ பின் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் காண்பித்து பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63 நாயன்மார்களுடன் படைச்சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி வணங்கி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

    • எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
    • அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

    ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.

    இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

    இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

    • இன்று சனிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    செய்யாறு டவுன் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பள்ளி சிறுவர்களும், 63 நாயன்மார்கள் மற்றும் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் என பல்வேறு வேடங்களில் சாமிகளோடு உலா வந்தனர்.

    முன்னதாக 63 நாயன்மார்களுக்கு அலங்காரம், பாலகுஜாம்பிகை அம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் தூவி அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று தேரோட்டம் நடக்கிறது.
    • காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் செல்ல தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் வீதி உலா வந்தனர்.

    பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 2 வருடங்களாக தீபத் திருவிழாவின் போது 63 நாயன்மார்கள் உற்சவ வீதிஉலா நடைபெறவில்லை.2 ஆண்டுகளுக்கு பிறகு நாயன்மார்களை மாணவர்கள் சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

    இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி தேரையொட்டி திருவண்ணாமலை நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் திருவண்ணாமலை நகர மற்றும் மாட வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.
    • இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    நாகையில் நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நுழைப்பாடி எனும் நம்பியார் நகரில் மீனவ சமுதாயத்தில் பிறந்தவர். சிவ பக்தரான அவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார். சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு இருந்த அதிபத்தர் தினமும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவது வழக்கம்.

    சில நேரங்களில் வலையில் சிக்கும் ஒரு மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்வார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவரது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் அவரது வலையில் வெள்ளி மீனை சிக்க வைத்தார். இந்த வெள்ளி மீனை அதிபத்தர் கடலில் விட்டார்.

    அடுத்த நாள், தங்க மீனை சிக்க வைத்தார். அந்த தங்க மீனையும் அவர் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விட்டார். அவரது பக்தியை உணா்ந்த சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.

    இந்த நிகழ்வை நினைவு கூரும்வகையில் ஆண்டு தோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தஆண்டு அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடந்தது. வழக்கமாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த கோவிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடந்து வருவதால் ஊர்வலம் நடைபெறவில்லை.

    இதனால் நேற்று நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்தர் நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களையும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்கள் சீர்வரிசை பொருட்களையும் ஊர்வலமாக புதிய கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து புதிய கடற்கரையில், சீர்வரிசை தட்டுக்களை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை பைபர் படகில் ஏற்றி கடலுக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அதிபத்த நாயனார் வெள்ளி மற்றும் தங்க மீனை பிடிக்கும் காட்சியும், அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடும் காட்சியும் அப்போது சிவபெருமான், பார்வதியுடன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் அதிபத்தநாயனார்.
    • அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர். ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர்.

    சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.

    நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.

    நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

    • கலிய நாயனார் கதையை அறிந்து கொள்ளலாம்.
    • ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

    63 நாயன்மார்களில் கலிய நாயனாரும் ஒருவர். இவர் சென்னை திருவொற்றியூரில் பிரபலமான எண்ணெய் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சிவபெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோவிலில் தினமும் விளக்கேற்றி தொண்டு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் கூட தவறாமல் இவர் சிவனுக்கு விளக்கேற்றி வந்தார்.

    இவரது பக்தியை பரிசோதிக்க சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி கலிய நாயனாரின் செல்வங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. துன்பங்களும், வறுமையும் அவரை வாட்டி வதைத்தன. என்றாலும், கலிய நாயனார் திருவொற்றியூர் ஆலயத்தில் தினமும் விளக் கேற்றி வழிபட தவறவில்லை. பணம் எல்லாம் கைநழுவி சென்றதால் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வந்தார். கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விளக்கேற்ற செலவழித்தார்.

    சொந்த வீடு, நிலம் அத்தனையையும் விற்று அவர் திருவொற்றியூர் ஆலயத்தில் விளக்கேற்றும் கடமையை செய்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் ஒரு பைசாகூட இல்லாத நிலை உருவானது. விளக்கேற்ற எண்ணெய் வாங்க பணம் இல்லாததால் மிகவும் வருந்தினார். திருவொற்றியூர் ஆலயத்துக்குள் சென்று தனது உடலை வெட்டி ரத்தத்தை எடுத்து அதில் விளக்கேற்ற முடிவு செய்தார். வாளை ஓங்கிய அவர் தன்னை வெட்டிக்கொள்ள தயாரானார். அப்போது சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார்.

    அன்று முதல் அவரது சிறப்பு அனைவராலும் பேசப்பட்டது. சிவபெருமானின் காட்சியை நேரில் தரிசித்த அவருக்கு திருவொற்றியூர் ஆலயத்தில் உள் பிரகாரத்தில் ஒரு பகுதியில் நினைவு குறிப்புகள் உள்ளன. அங்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) இந்த குருபூஜை நடத்தப்பட உள்ளது.

    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வில்லியனூர் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆலய தேரோட்ட பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.

    நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது. காலையில் 63 நாயன்மார்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வன்னியர் பாதுகாப்பு தலைவர் செந்தில்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய விழாவான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வன்னியர் மடம் தனி அதிகாரி ராமதாஸ் மற்றும் ஆலய சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தொடர்புடைய கீழசரக்கல்விளையை சேர்ந்த பிரதீப் (வயது 22). இளங்கடை பகுதியை சேர்ந்த மனோ என்ற உஷ்மான் (30), கோட்டார்கம்பளம் தெருவை சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இதேபோன்று மற்றொரு கொலை முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    ×