search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "60 பவுன் நகை கொள்ளை"

    திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கணசேபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). அப்பள வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை சேகர் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 60 பவுன் நகை, பணம் மற்றும் வீட்டின் பத்திரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சேகர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளா மாநிலம் கண்ணூரில் சிறுமியை கற்பழித்த வழக்கில் பாதிரியார் ராபின் வடக்கும்சேரி என்பவருக்கு இன்று 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. #Keralapriest #RobinVadakkumchery
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூரில் உள்ள ஒரு  கத்தோலிக்க தேவாலயத்தில் ராபின் வடக்கும்சேரி (51)  என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார். சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றார்.

    பின்னர்  போலீசாருக்கு அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார்.  இதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், சிறுமி கற்பழிப்பு தொடர்பாக ராபின் வடக்கும்சேரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 5 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் கூறப்பட்ட  நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும்  தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.



    சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் தலச்சேரி ‘போஸ்கோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ராபின் வடக்கும்சேரிக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் உள்பட மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி இந்த தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். #Keralapriest #RobinVadakkumchery #60yearsimprisonment  
    ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் விமர்சனம். #60VayaduMaaniram #60VayaduMaaniramReview
    சாப்ட்வேர் இன்ஜினியரிங் வேலை செய்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவருடைய அப்பா பிரகாஷ் ராஜ். பேராசிரியரான இவர், தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ தந்தை மீது அதிக அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

    வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கும் பிரகாஷ் ராஜ்க்கு, ஞாபக மறதி ஏற்படுகிறது. மேலும் தனது மகனை சிறு பையனாக நினைத்து வருகிறார். இதனால், பிரகாஷ் ராஜ்க்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்கிறார் விக்ரம்பிரபு.

    இதே நேரத்தில் விக்ரம் பிரபுவுக்கு மும்பையில் வேலை கிடைக்கிறது. இதற்காக பிரகாஷ் ராஜை சிகிச்சை அளிக்க கூடிய ஒரு ஆசிரமத்தில் விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜை அங்கு டாக்டராக பணிபுரியும் இந்துஜா கவனித்து வருகிறார்.

    விக்ரம் பிரபுவு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக தந்தை பிரகாஷ் ராஜ்க்கு துணிகள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்ல முடிவு செய்கிறார்.



    அப்போது கடையில் பிரகாஷ் ராஜால் சிறு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடையும் விக்ரம்பிரபு, பிரகாஷ் ராஜை அப்படியே விட்டு செல்கிறார். பிரகாஷ் ராஜ் ஆசிரமத்திற்கு செல்லாமல் கொலைகாரன் சமுத்திரகனி பிடியில் சிக்குகிறார்.

    இறுதியில், சமுத்திரகனி பிடியில் இருந்து பிரகாஷ் ராஜ் தப்பித்தாரா? காணாமல் போன தந்தையை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. தந்தை பிரகாஷ் ராஜ் மீது அக்கறை இல்லாமல் இருப்பது. பின்னர் அவரைப் பற்றி தெரிந்த பிறகு பாசம் காட்டுவது, தேடுவது என நடிப்பில் முதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. தான் ஒரு அனுபவ நடிகன் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். பல காட்சிகளில் அசர வைத்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே அவர் மீது ஒருவிதமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.

    அதுபோல் தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமுத்திரகனி. டாக்டராக வரும் இந்துஜா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    தந்தை மகனுக்கும் இடையேயான பாசத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து, ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். குழந்தைகளை சிறுவயதில் இருந்து நல்லது, கெட்டது எது என்று பார்த்து பார்த்து வளர்த்தால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறார்கள். பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார் ராதாமோகன். 

    இளையராஜாவின் இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது பின்னணி இசை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறது. விவேக் ஆனந்தனின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘60 வயது மாநிறம்’ தந்தை மகன் பாசப்பிணைப்பு.

    60 வயது மாநிறம் வீடியோ விமர்சனம் பார்க்க:


    கலைப்புலி தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் முன்னோட்டம். #60VayaduMaaniram
    இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

    படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். 

    படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja
    விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அப்படத்தை பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார். #VikramPrabhu
    விக்ரம் பிரபு நடிப்பில் 60 வயது மாநிறம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    60 வயது மாநிறம்?

    இது என்னுடைய முதல் ரீமேக் படம். ரீமேக் படங்களை கவனமாக தவிர்த்து வந்தேன். ஒரு படம் பண்ணினால் தொடர்ந்து அதேபோன்ற படங்களில் நடிக்க வேண்டிய சூழல் உருவாகுமோ என்று பயந்தேன். ஆனால் இந்த படத்தின் கதை என்னை மாற்றியது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான புரிதல் பற்றிய படம். தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் பிரச்சினைகளை விரிவாக பேசுகிறது.

    அப்பாவுடன் எப்போது நடிப்பீர்கள்?

    அப்பாவுடன் நடிக்க ஆசை. நல்ல கதைகளாக அமைந்தால் அது நடக்கும்.

    பிரகாஷ் ராஜ், சமுத்திரகனியுடன் நடித்த அனுபவம்?

    இருவரையுமே திரையில் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். எனக்கு பிரகாஷ்ராஜ் சாருடன் தான் அதிக காட்சிகள் இருந்தன. இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன்.



    தாணுவுடன் 3 படங்கள்?

    ஒரு படத்திற்கு நான் மட்டுமே 120 சதவீத உழைப்பை கொடுத்தால் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களும் தரவேண்டும். ஒரு தயாரிப்பாளராக 200 சதவீத உழைப்பை தருபவர் தாணு. அவர் எந்த சூழலில் கேட்டாலும் மறுக்கவே மாட்டேன். ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ அதை சரியாக கொடுப்பவர்.

    அப்பா என்ன சொன்னார்?

    கும்கி நடித்து முடித்த பின்னும் கூட சில நாட்கள் அந்த கிளைமாக்ஸ் காட்சி எமோ‌ஷனலோடே திரிந்தேன். நிஜ வாழ்க்கையை சினிமாவோடு இணைத்து குழப்ப கூடாது. ஆனால் சில இடங்களில் தவிர்க்கவே முடியாமல் பயன்படுத்த வேண்டி வரும். அப்படி இந்த படம் பண்ணும்போது என் அப்பாவுடனான உறவு, எமோ‌ஷனலை பயன்படுத்தி இருக்கிறேன். இன்னும் அப்பா படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு என்ன சொல்வாரோ என்ற பதற்றம் சின்னதாக இருக்கிறது.



    வாரிசு என்ற அழுத்தம் இருக்கிறதா?

    நடிக்க தொடங்கியபோதே ஏதோ ஒரு நம்பிக்கையுடன் தான் இறங்கினேன். தாத்தா, அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எப்போதுமே இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து நடிக்கிறேன்.

    அதிகமாக புது இயக்குனர்களுடன் பணியாற்றுகிறீர்களே?

    எல்லா இயக்குனர்களுடனும் பணியாற்ற விரும்புகிறேன். புது இயக்குனர்கள், அனுபவ இயக்குனர்கள் என்று பார்ப்பதில்லை. நல்ல கதை என்றால் உடனே சம்மதித்து விடுவேன்.

    தாத்தா, அப்பா இருவருமே பிற ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்தார்கள். நீங்கள் அப்படி நடிப்பீர்களா?

    60 வயது மாநிறம் படத்தில் பிரகாஷ்ராஜ் சாருக்கு தான் முக்கியத்துவம் உள்ள வேடம். பிற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க தயார். அதற்கேற்ற கதை அமைய வேண்டும். ஒரு படமாக தான் பார்ப்பேனே தவிர நாம் இதில் எப்படி இருப்போம் என்று பார்ப்பதில்லை.
    களத்தில் இறங்கினால் தான் அரசியல்வாதி என்றில்லை, கேள்வி கேட்பவனும் அரசியல்வாதி தான் என்று கூறிய பிரகாஷ்ராஜ் ரஜினி, கமலோடு இணையும் முடிவில் இல்லை என்றார். #PrakshRaj
    நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி, இந்துஜா நடிப்பில் உருவாகி உள்ள படம் 60 வயது மாநிறம். கலைப்புலி தாணு தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி: தயாரிப்பாளர் சங்கத்தில் துணைதலைவர் நீங்கள். உங்கள் செயல்பாடுகளில் சிலர் அதிருப்தி தெரிவிக்கிறார்களே?

    பதில்: சிலர் நான் நிறைய வேலைகள் செய்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். எதை எடுத்துக்கொள்வது? பேசுபவர்கள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எல்லாவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு அணியாக இணைந்தோம். நிறைய மாற்றங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

    கே: படங்களை எடுப்பதை விட வெளியிடுவது சிரமமான ஒன்றாகி விட்டதே?

    ப: சினிமா ஒரு கலை. ஆனால் அது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகிவிட்டது. அதனால் நிறைய பார்முலாக்களில் சிக்கிக்கொண்டுள்ளோம். தமிழ் சினிமாவில் நல்ல படங்களை எடுத்து ரிலீஸ் செய்யும்போதுதான் அதன் வலி தெரியும். சிரித்துக்கொண்டே படம் எடுத்து அதை ரிலீஸ் செய்யும்போது அழுவது என்பது அவமானமான ஒன்று.

    கே. சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறீர்களே?

    ப: தமிழ்நாடு, கர்நாடகாவில் கிராமங்களை தத்தெடுத்துள்ளேன். தெலுங்கானாவில் 10 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன்.

    அந்த பள்ளிகளை டிஜிட்டலாக்கி இருக்கிறேன். 15 ஆசிரியர்கள் எனது நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்கான தேவை நிறைய இருக்கிறது. என்னால் முடிந்ததை செய்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் போதும். எல்லா பொறுப்புகளையும் ஒருவரே எடுத்துக்கொள்ள முடியாது. 60 வயது மாநிறம் போன்ற படங்களும் சமூக பொறுப்பில் உருவாவது தான்.

    கே: அரசியலில் இறங்குவது எப்போது?

    ப: இப்போதே அரசியலில் தானே இருக்கிறேன். களத்தில் இறங்கித் தான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. கேள்வி கேட்பவனாக இருப்பதும் அரசியல் தான். இதுவும் சமூகத்துக்கு அவசியம்.



    கே: ரஜினி, கமல் அரசியல் பற்றி?

    ப: இருவரும் நல்ல நோக்கத்தோடுதான் வந்து இருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வது பற்றி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். நான் அவர்களோடு இணையும் முடிவில் இல்லை. தனியாக செயல்படுவேன்.

    கே: சினிமா போரடிக்கவில்லையா?

    ப: இல்லை. அதனால் தான் வித்தியாசமான வேடங்களில் மட்டும் நடிக்கிறேன். அரசியல், இலக்கியம் என்று என்னை புதுப்பித்துக்கொள்கிறேன். கற்றுக்கொள்கிறேன். ஒரு பறவை போல பயணிக்கிறேன்.

    அரசியல் ஆர்வம் எப்படி?

    ப: இதுவும் நம் கடமைகளில் ஒன்றுதான். தகப்பன், கணவன், நடிகன், இயக்குனர் போல நாட்டின் குடிமகன் என்பதும் ஒரு பொறுப்பு. அந்த பொறுப்பை சரியாக செய்ய விரும்புகிறேன். அதை கேள்வியாக வெளிப்படுத்துகிறேன்.

    கே: அரசியல் மிரட்டல்கள்?

    ப: நான் பயந்தால் தானே அது மிரட்டல். அடி விழுந்து அது எனக்கு வலித்தால் தான் அதற்கு பெயர் அடி. இல்லாவிட்டால் அது அடி இல்லை. அப்படித்தான்.

    கே: வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    ப: அதிகாரத்துக்கு வந்தால் தான் அரசியல் என்று இல்லை. அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பதும் அரசியல் தான். நான் எங்கும் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியல்வாதி இல்லை.

    இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். #PrakshRaj

    60 வயது மாநிறம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், முக்கியமான ஒரு விஷயத்தை சிரிப்பின் மூலமே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்த வைப்பவர் ராதாமோகன் என்று கூறினார். #60VayaduMaaniram #Prakashraj
    ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘60 வயது மாநிறம்’. இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 

    அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாவது,

    ஒரு அழகான விஷயம், ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை. காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியது. இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன். 

    ஈர்க்கக்கூடிய ஒரு விஷயத்தை காமெடியுடனும், தாக்கத்தை ஏற்டுத்தும்படியும் காட்டுவதற்கு ராதாமோகன் - விஜியால் மட்டுமே முடியும். ராதாமோகனை ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு நண்பராக தான் அதிகமாக பார்க்கிறேன். அவர் உலகத்தை பார்க்கும் பார்வையே வேறுவிதமாக இருக்கிறது. 



    முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது. இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன்வந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.

    நான் அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்தால் இந்த படத்திற்கு நான் டப்பிங் பேசவில்லை. இளைராஜா சார் என்னை தொடர்புகொண்டு எனது குரல் வேண்டும் என்று மட்டும் தான் கேட்டார். மற்றபடி ராதாமோகன் எனக்காக டப்பிங் பேசினார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது. 

    விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல தீனியாக நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது என்றார். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja #Prakashraj
    ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படக்குழுவை பாராட்டியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu
    இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

    படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja
    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #KeralaFloods #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன் பிறகு விட்டு விட்டு பெய்த மழை ஜூலை மாத இறுதியில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. ஆகஸ்டு முதல் வாரத்தில் மிகப்பலத்த மழை பெய்தது.

    மாநிலத்தின் மலையோர மாவட்டங்கள் தொடர்மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. நிலச்சரிவு, வீடுகள் இடிந்தது, வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது என 40-க்கும் மேற்பட்டோர் மழையால் பலியானார்கள்.

    எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, பாலக்காடு, இடுக்கி, கண்ணூர் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 8-ந்தேதிக்கு மேல் தொடங்கிய மழை இன்று வரை இடைவிடாமல் பெய்து வருகிறது.

    தொடர் மழை காரணமாக இம்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. தரைப்பாலங்கள், சாலைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன.

    கேரளத்தின் பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையும் மழையால் நிரம்பியது. 2403 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2401.90 அடியாக உயர்ந்தது.

    அணையின் நீர்மட்டம் 2398 அடியை எட்டியதும் மதகுகள் திறக்கப்பட வேண்டும். கடந்த 26 ஆண்டுகளாக அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை. இந்த ஆண்டு தான் நீர்மட்டம் 2400 அடியையும் தாண்டி விட்டது. இதனால் அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அணையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம் அணையையொட்டி செறுதோனி நகருக்குள் புகுந்தது. அங்கிருந்த பாலம், கட்டிடங்களையும் வெள்ளம் அடித்துச்சென்றது. இதனால் அணையையொட்டி கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுபோல கேரளத்தின் 24 அணைகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது. இதன் காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலுவா சிவன்கோவில் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. பல கிராமங்களும் அழிந்தன. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.



    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கேரளம் விரைந்தனர். அவர்கள் கொச்சி, ஆலுவா, கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

    கடற்படையினர் படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவத்தினர் சேதமடைந்த சாலைகளையும், உடைந்த பாலங்களையும் தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களையும், முதியவர்களையும் மீட்டு வந்தனர்.

    கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. நேற்றும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல மழை வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

    இவர்களையும் சேர்த்தால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டும் என கூறப்படுகிறது.

    கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கேரள அணைகள் நிரம்பியதையே சாட்சியாக கூறுகிறார்கள்.

    பல கிராம மக்களும் இப்படியொரு மழையை இதுவரை பார்த்ததில்லை என்று மிரட்சியுடன் கூறினர். கேரளாவின் ஆதிவாசி கிராமங்களும் மழையால் முழுமையாக சேதமடைந்து விட்டது. இங்கும் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இப்போது மழை பெய்து வரும் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது.

    வானிலை மைய எச்சரிக்கையையடுத்து கேரளாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRains
    பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, என் கலையின் தாகத்தை 60 வயது மாநிறம் திரைப்படம் தீர்த்துள்ளது என்று கூறியிருக்கிறார். #60VayadhuMaaniram
    பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். 

    தந்தை மகனுக்குமான இடையேயான உறவை சொல்லும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.



    இந்நிலையில், இப்படம் பற்றி தாணு கூறும்போது, ‘கிழக்கு சீமையிலே எனும் கிராமத்து காவியம் வெளிவந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு, என் கலையின் தாகத்தை தீர்க்கும் விதமாக, நான் என்றும் பெருமைக்கொள்ளும் படைப்பாக ‘60 வயது மாநிறம்’ அமைய பெற்றுள்ளது. எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது’ என்று கூறியிருக்கிறார்.
    பல வெற்றி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு, தற்போது தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. #Thanu #60VayaduMaaniram
    பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் கலைப்புலி தாணு. இவர் தனது வி.கிரியேஷன்ஸ் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    தற்போது அடுத்த படத்தை தயாரிக்க தொடங்கிவிட்டார் தாணு. ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
    லிபியா கடல் பகுதியில் தத்தளித்த அகதிகளை ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். #migrantboat
    மாட்ரிட்:

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.

    இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

    லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

    இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த மாதம் 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இத்தாலி நாடு அனுமதி மறுத்ததால் லிபியா கடல் பகுதியில் 60க்கு மேற்பட்ட அகதிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மீட்புக் கப்பலில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 60 அகதிகளை இன்று பத்திரமாக மீட்டனர்.

    அவர்களில் 5 குழந்தைகள்,  5 பெண்கள் , 50 ஆண்கள் உள்பட மொத்தம் 60 பேர் இருந்தனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். #migrantboat
    ×