search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 பெண்கள் கற்பழிப்பு"

    • வேலூர் பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்த அனுமதி கேட்டனர்.
    • 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஆட்டோக்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வேலூர் வடக்கு போலீஸ் சார்பில் ஆட்டோக்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோ களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் நாங்கள் பழைய பஸ் நிலைய பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறோம். திடீரென வடக்கு போலீசார் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்த கூடாது என கூறிவிட்டனர்.

    இதுபற்றி கேட்டதற்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ஆட்டோக்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதனால் சுமார் 130-க்கும்மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

    பழைய பஸ் நிலையத்தில் திருவள்ளூர் சிலை அருகே ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர் திருவள்ளுவர் சிலை அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் 5 ஆட்டோக்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி அளித்ததாக தெரிவித்தனர்.

    • ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பணம்-நகை பெற்று மோசடி செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஈரோடு:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 60) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்கள் உறவினர் மூலம் அறிமுகமாகி எங்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிக கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் எனது மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை தனது தங்கைக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி எனது மகளிடம் சிறிது சிறிதாக அந்த வாலிபர் ரூ.43 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டு இன்று வரை தராமல் மோசடி செய்துள்ளார்.

    இதற்கிடையில் பணம் எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறி எங்களது ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை அந்த வாலிபர் எடுத்து சென்று விட்டு பெயர் மாற்றம் செய்து அதையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளார்.

    பணம் கொடுத்தது தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார். மேலும் எனது மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.

    பணம் எதுவும் கேட்டால் உங்கள் மகளின் புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும், எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டுகிறார். ஆகையால் தாங்கள் எனது புகாரை ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் நகையை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    • தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
    • 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சி கரட்டுவலசு பகுதியில் கூடுதல் இயக்குநர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னை) சரவணன் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாடு மற்றும் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பவானி ஊராட்சி ஒன்றியம் மைலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கரட்டுவலசு பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெள்ளித்திருப்பூர் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியினையும்,

    காந்தி நகர் காலனியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.93.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் சாலை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் மைலம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சிவானந்தம், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிமுத்து, சாந்தி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டிவனம் அருகே தோஷத்தை போக்குவதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய போலி சாமியாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    திண்டிவனம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    மணியின் நடத்தை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மணி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூருக்கு வந்தார்.

    அங்கு ஒரு வீட்டில் வசித்து வந்தார். பின்னர் அங்கேயே ஒரு கோவில் கட்டி பில்லி, சூனியம், மாந்திரீகம் செய்யும் தொழில் நடத்தி வந்தார்.

    அவரை தேடி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று தங்களது குறைகளை கூறினர். அப்போது மணி தன்னிடம் உள்ள மந்திர சக்தியால் குறைகளை தீர்த்து வைப்பதாக கூறினார்.

    மேலும் பலருக்கு பில்லி, சூனியம் உங்களுக்கு வைத்துள்ளனர். அதை எடுத்தால் உங்களது வாழ்க்கை வெற்றியடையும் என்று தெரிவித்தார். இதை நம்பிய பலர் அவரிடம் பணத்தை கொடுத்தனர்.

    விழுப்புரம், புதுவை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், தருமபுரி, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல பெண்கள் அவரை சந்தித்து தங்களது குறைகளை கூறி வந்தனர்.

    தன்னை நாடிவந்த பெண்களை அடைய மணி திட்டம் தீட்டினார். உங்களுக்கு பில்லி, சூனியம் வைத்துள்ளனர். அதனை எடுத்தால்தான் உங்களது பிரச்சனைகள் தீரும் என்று கூறுவார். அதை பெண்கள் நம்பினர்.

    இதன்மூலம் பல பெண்களை கவர்ந்து அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்தார். பின்னர் அவர் தன்னை நம்பி வந்த பெண்களை ஏமாற்றி விட்டு வேறு வேறு பெண்களை தேடி தன் வசமாக்குவதை வழக்கமாக கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்பவரது வீட்டுக்கும் மணி சென்றார். அவரை மயக்கி தன்வசமாக்கினார். பின்னர் கணவர் பவுன்ராஜிடம் இருந்து ஹேமாவை பிரித்து தன்னுடன் அழைத்து வந்து ஓங்கூரில் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு ஹேமா சிஷ்யை போல் செயல்பட்டு வந்தார்.

    கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டுக்கு மணி சென்றார். அப்போது கருணாகரன் தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்குமாறு மணியிடம் கேட்டார்.

    அப்போது, கருணாகரனுக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை மணி அறிந்தார். உடனே அந்த இளம்பெண்ணை அடைய வேண்டும் என்ற எண்ணம் மணிக்கு ஏற்பட்டது.

    கைதான போலி சாமியார் மணி-  சிஷ்யை ஹேமா.

    உடனே கருணாகரனிடம், உங்களது பிரச்சனையை தீர்த்து வைக்க இந்த ஊரில் ஒரு கோவில் கட்ட வேண்டும். அப்போது உங்கள் மகள் வீட்டில் இருக்கக்கூடாது. இங்கு அவள் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே அவளை எனது வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அவளை எனது மகள்போல் பாதுகாத்து கொள்கிறேன் என்றார்.

    சாமியாரின் இந்த கோரிக்கையை கேட்ட கருணாகரன் முதலில் திடுக்கிட்டார். பின்னர் சாமியாரின் வசிய பேச்சை கேட்டு கருணாகரன் தனது மகளை அவருடன் அனுப்பி வைக்க சம்மதித்தார்.

    அதனை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் மணி தங்க வைத்தார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 19-வது வயது ஆகியது. இதனால் சாமியார் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார். கன்னி பெண்ணை திருமணம் செய்தால் அதிக சக்தி கிடைக்கும் என்று நினைத்தார். எனவே உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கருணாகரனிடம் கேட்டார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    மேலும் அந்த இளம்பெண்ணும் சாமியாரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி போலி சாமியார் அந்த பெண்ணிடம் கேட்டார். நீ என்னுடன் சேர்ந்தால்தான் உனது அண்ணனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறினார்.

    பின்னர் அந்த இளம்பெண்ணை சாமியார் பலவந்தமாக கற்பழித்தார். இதற்கு அவரது சிஷ்யை ஹேமா உதவி செய்துள்ளார். தன்னை சாமியார் கற்பழித்ததை அறிந்து அந்த பெண் கதறி அழுது துடித்தார்.

    பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தந்தையிடம் கூறி அழுதார். இதை கேட்டதும் கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் ஓங்கூருக்கு வந்தார். தனது மகளின் வாழ்க்கையை நாசமாக்கிய போலி சாமியார் குறித்து அவர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ஓங்கூருக்கு சென்றனர். அங்கிருந்த போலி சாமியார் மணியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சிஷ்யை ஹேமாவையும் கைது செய்தனர்.

    வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த பூஜை அறையில் நிறைய சாமி படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    கைது செய்யப்பட்ட மணியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    போலி சாமியார் பகல் வேளையில் டிப்-டாப் உடை அணிந்து வெளியில் சென்றுள்ளார். இரவில் நீண்ட மீசை, தாடியுடனும் வலம் வந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    சாமியாரானால் பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. இதனை தொடர்ந்து ஜோதிடம், மாந்திரீகம் பார்க்க தொடங்கினார். அப்போது வசதி படைத்த மற்றும் அழகான பெண்கள் அவரை நாடி வந்துள்ளனர். பெண்களிடம் அவர் கனிவாக பேசி அவர்களை தனது வசமாக்கி அனுபவித்துள்ளார்.

    திருமண தடை, குழந்தையின்மை, கணவன்- மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு பரிகாரம் தேடி ஏராளமான பெண்கள் இவரை நாடி வந்துள்ளனர்.

    அவர்களிடம் உங்களின் தோ‌ஷத்தை நிவர்த்தி செய்ய சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுவார். அப்போது பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களை வசியம் செய்து மயக்க நிலைக்கு சென்றதும் அந்த பெண்களின் கற்பை சூறையாடி உள்ளார்.

    போலி சாமியார் மணி 50-க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட போலி சாமியார் மணி மற்றும் அவரது சிஷ்யை ஹேமா ஆகியோரை திண்டிவனம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மணி, ஹேமா ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலி சாமியார் மணியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் போலீசில் புகார் செய்ய இதுவரை முன்வரவில்லை. அப்படி புகார் செய்தால் போலி சாமியாரின் காமலீலைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் தட்டி சென்றார். #AndreRussell
    கொல்கத்தா:

    களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) நொறுக்கி இருக்கிறார்.



    ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார். #AndreRussell
    மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
    யாங்கூன்:

    மியான்மர் நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டி எடுக்கும் சில சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.



    அவற்றில் ஒரு சுரங்கத்தில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 55 தொழிலாளர்கள் சுரங்கத்தின் ஆழமான பகுதியில் இருந்தபோது ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் இறந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #50fearedkilled #Myanmarlandslide #Myanmarjademine #jademinelandslide
    பொன்னமராவதி தாலுகாவிற்குட்பட்ட 50 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #PonnamaravathiViolence

    பொன்னமராவதி:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது சமூகம் தொடர்பாக 2 பேர் அவதூறாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதை கண்டித்தும் அதில் பேசிய இருவரையும் கைது செய்தால்தான் தங்கள் ஊரில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக் கூறியும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பு குடிப்பட்டி கிராமமக்கள் நேற்று முன்தினம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்துநடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் உறுதி அளித்து வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். அதன்பிறகு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கருப்புக்குடிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டனர்.

    பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உடனே கைது நடவடிக்கை மேற்கொள்வதாக புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று உறுதி அளித்ததையடுத்து நள்ளிரவில் மறியல் கைவிடப்பட்டது.

    இந்தநிலையில் மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்த 4 கார்கள், 2 வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

     


    இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பொன்னமராவதி அருகே சித்தூர், மீனாட்சிபுரம், குழிபிறைப்பட்டி, வீரணாம்பட்டி, பனையப்பட்டி, தேனிமலை, நமண சமுத்திரம் உள்பட மொத்தம் 50 இடங்களில் மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று சில இடங்களில் போராட்டம் கைவிடப்பட்டாலும் சில இடங்களில் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் பொன்னமராவதி செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் கலெக்டர் உமா மகேஸ்வரி, ஐ.ஜி.வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லட்சுமி (திருச்சி), லோகநாதன் (புதுக்கோட்டை), மாவட்ட எஸ்.பி.க்கள் செல்வராஜ், ஜியாஉல்ஹக் உள்ளிட்டோர் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

    அதில், ஏப்ரல்19-ந்தேதி முதல் 21-ந்தேதி இரவு 12 மணி வரை பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட 49 கிராமங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்மூலம் ஒரே இடத்தில் 4பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் பொன்னமராவதி தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     


    இதற்கிடையே கலவரம் தொடர்பாக பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நபர்கள் யாரென்று சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவதூறு பரப்பியவர்கள் தஞ்சை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால் அங்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    பொன்னமராவதி பகுதியில் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் போக்குவரத்து கழக அதிகாரிகள் இன்று முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி பொன்னமராவதியில் இன்று பஸ்கள் ஓடவில்லை.

    புதுக்கோட்டையிலும் பஸ்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுபோல ஆலங்குடியிலும் பஸ் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    இன்று காலை 8 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    144 தடை உத்தரவால் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூடப்பட்டது. இதனால் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக வெளியூர்களில் இருந்து ஆலங்குடி பகுதிக்கு வந்திருந்த பொது மக்கள் மீண்டும் ஊர் திரும்ப முடியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    மேலும் ஆலங்குடி பணிமனையில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சை, பேராவூரணி, சிவகங்கை, திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு டவுன் பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். இன்று இரவுக்குள் பஸ்களை இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதனிடையே நேற்றிரவு பொன்னமராவதி கட்டியா வயலில் 3 அரசு பஸ்கள் மற்றும் ஒரு லாரியின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். #PonnamaravathiViolence

    இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டியில் 200 வீரர்கள் மொத்தம் ரூ.50 கோடிக்கு ஏலம் போனார்கள். #ProKabaddi #Auction
    மும்பை:

    7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. ஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். கடந்த ஆண்டில் மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஏலத்தில் ‘டேக்கிள்’ செய்வதில் சிறந்தவரான நீரஜ் குமார் அதிக விலைக்கு போனார். அவரை வாங்க பெங்கால், குஜராத், அரியானா, பாட்னா, தமிழ் தலைவாஸ் அணிகள் கடும் போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.44.75 லட்சத்துக்கு பாட்னா பைரட்ஸ் அணி வாங்கியது.

    விகாஸ் காலே (அரியானா) ரூ.34.25 லட்சத்துக்கும், நவீன் (அரியானா) ரூ.33.5 லட்சத்துக்கும், அஜித் (தமிழ் தலைவாஸ்) ரூ.32 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். தமிழகத்தை சேர்ந்த கே.செல்வமணி ரூ.16.05 லட்சத்துக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதேபோல் மற்றொரு தமிழக வீரர் சி.அருணை ரூ.10 லட்சத்துக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கியது

    தமிழ் தலைவாஸ் அணியில் அஜய் தாகூர், மன்ஜீத் சில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகியோர் தக்க வைக்கப்பட்டு இருந்தனர். ஏலத்தின் மூலம் ஹிமான்சு, அபிஷேக், ராகுல் சவுத்ரி, ரன் சிங், மொகித் சில்லார், அஜித், மிலாட் ஷேபக், ஷபீர் பாபு, யஷ்வந்த் பிஸ்னோய், வினித் ஷர்மா ஆகிய வீரர்களை தமிழ் தலைவாஸ் அணி தனதாக்கி உள்ளது. கடந்த 2 நாள் நடைபெற்ற ஏலத்தின் முடிவில் 12 அணிகளும் சேர்ந்து மொத்தம் 200 வீரர்களை (173 பேர் உள்ளூர், 27 பேர் வெளிநாட்டினர்) ரூ.50 கோடிக்கு வாங்கி இருக்கின்றன.
    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

    அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் வடவள்ளி நவாவூர் பிரிவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகம் ஆர். 2017 என்ற கல்வி முறையை கொண்டு வந்து மாணவர்களை பாதிப்படைய செய்து உள்ளது. மேலும் பல என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., படித்த ஆசிரியர்களை வைத்தே பாடம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த மாதிரியான சூழ்நிலையில் ஆர் 2017 தேர்வு முறையை நடைமுறைப்படுத்தினால் கிராமபுறத்தில் உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிப்பு அடைவார்கள். தேர்வில் புதியதாக அமல்படுத்திய முறைகளை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து டீன் (பொறுப்பு) விக்ரமனிடம் மனு அளித்தனர். #tamilnews
    பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PhilippinesEarthquake
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிலிப்பைன்சில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #PhilippinesEarthquake
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடு-வீடாகபுகுந்து ஆய்வு செய்கிறார். வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரில் ஆய்வு செய்து டெங்குவை பரப்பும் கொசுவை கண்டறிந்து அதை ஒழிக்க உத்தரவிட்டு வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்களின் தீவிர நடவடிக்கையால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பொதுமக்களில் பலர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி, இருமல் மற்றும் வி‌ஷக்காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அமிர்தசரசில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. #Dussehra #Amritsar #TrainAccident
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இன்றிரவு தசரா விழா கொண்டாட்டம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
    ராவணன் கொடும்பாவி தீயிட்டு எரிக்கப்பட்டதை 27-ம் எண் ரெயில்வே கேட்டின் தண்டவாளம் அருகே நின்றவாறு பலர் தங்களது கைபேசிகளில் பதிவு செய்தனர்.
     
    அப்போது அந்த தண்டவாளம் வழியாக இரு ரெயில்கள் எதிர் எதிர் திசையில் வந்தன. ஜலந்தர் நகரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற ரெயில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின்மீது வேகமாக மோதியது.

    இதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், பஞ்சாப் ரெயில் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    #Dussehra #Amritsar #TrainAccident
    ×