என் மலர்
நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"
- வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த அமிர்தபாண்டியன் மகன் ஹரி பிரசாத் (23). சம்பவத்தன்று காலை இவர், பூமி உருண்டை தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற வசந்தராஜன் (34) என்பவரை கைது செய்தனர்.
வண்டியூர் ஏஞ்சல் நகர் வாணி முத்து மகன் வஜித்பாலா (24). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
தென்பரங்குன்றம், விஸ்வகர்மா தெருவை சேர்ந்த அலிகான் மகன் ஷாருக்கான் (24). சம்பவத்தன்று இரவு இவர் கிரிவலப் பாதையில் நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், பாலா, சுறா ஆகியோரை கைது செய்தனர்.
- திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞசா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் அறிவுறுத்தலின்படி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அனுமந்தராயன் கோட்டை மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மேலப்பட்டியை சேர்ந்த ரோஸி (வயது 46), பீட்டர் (38), பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (21), செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (22), காந்திநகர் காலனியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக அவர்களுக்குள் பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலப்பட்டியைச் சேர்ந்த ஜான், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை
மதுரை வண்டியூர், சங்கு நகரில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை கைது செ ய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நோட்டமிட்டனர்.
அங்கு 10-க்கும் மேற்பட்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, 4 மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 3 கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை பாலாஜி நகர், செந்தில் மகன் அஜய் (20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, ஜெகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், இந்திரா நகர், சிவராமன் மகன் லோகேஸ்வரன் (20), முனிச்சாலை கான்பாளையம், பாபுஜி மகன் பிரேம்குமார் (19), செங்கல்பட்டு மாவட்டம், செண்டிவாக்கம், மாதா கோவில் தெரு, மனோஜ் குமார் (30) என்பது தெரிய வந்தது.
அவர்கள் கூறுகையில், "மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அஜய் மற்றும் முனிச்சாலை பிரேம்குமார் இருவரும் மதுரையில் கொள்ளை அடிப்பதற்காக நோட்டம் பார்த்து வந்தனர். இதில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த பகுதிகளில் கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்டு வந்தோம். மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக 5 பேரும் வண்டியூரில் கூடி சதி திட்டம் தீட்டினோம். இதனை தெரிந்து கொண்ட போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்ததாக, 5 பேரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.
- கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடந்தார்.
- 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கார்த்திகை ராணி(30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீரிவரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் வாங்கி வரச்சொல்லி கணவர் ரவிச்சந்திரன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகைராணி நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குதொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ரவிச்சந்திரன், பேபி, காமாட்சி, அழகுமலை, மலர்கொடி ஆகிய 5 பேர்மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் விரக்தி
- போலீஸ் விசாரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயகுமாா் (38) இவா் சோளிங்கரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பஸ்சை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த தீபாவிற்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா்.
2-வது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் 8 -ம் தேதி ஜெயகுமார் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் சென்றார்.
இந்நிலையில் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்தினா் அவர் மீது கிருஷ்ணராஜபுரம் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் போலீசார் ஜெயகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயகுமார் நேற்று நள்ளிரவு இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கைஅறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா்.
- பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
- அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கவரை கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது உறவினர் வேலுவின் குழந்தைகளான நேதாஜி (14), சகுந்தலாதேவி (12) ஆகியோரை தனது ஸ்கூட்டியில் உட்கார வைத்துக் கொண்டு அப்பம்பட்டில் இருந்து கவரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கவரை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஸ்கூட்டியில் சென்ற மேற்படி 3 பேரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு, சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த குப்புசாமி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மற்றவர்களுக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.
- சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.
திருப்பதி:
ஒடிசா மாநிலம் பவானி புறத்திலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 60 பயணிகளுடன் தனியார் பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.
பஸ் இன்று காலை 6 மணிக்கு சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பத்ராச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கி தனேஷ்வர் (வயது 25) சுனை ஹரிஜன் (30) அவரது மகன் அர்ஜுன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த 30 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமாரபாளையம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் குமாரபாளையம் நகரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நகரின் அனைத்து பகுதியிலும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், ஹான்ஸ் பதுக்கி வைத்த கே.ஒ.என். தியேட்டர் அருகே நாகராஜ் (வயது 63), ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்ரமணி ( 44), ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி, (56), பூபதி (36), பெராந்தர்காடு பகுதியில் ராஜேந்திரன் (53), ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 32 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
- கணக்காளரை கைது செய்தனர்
- கணக்கை காட்டாமல் மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலின் வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் சார்பில் உணவு மையம் உள்ளது.
இங்கு கடந்த சில மாதங்களாக செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த பாலாஜி செல்வராஜ் (வயது 32) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அங்கு நடைபெறும் கணக்கு வரவு, செலவுகளை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 289 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அங்கு கணக்காளராக பணியாற்றிய பாலாஜி செல்வராஜ் உரிய கணக்கை காட்டாமல் கணக்கை மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் நிர்வாகத்தினர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் நான் பணம் எடுத்து தருகிறேன் என கூறியுள்ளார்
- வாலிபர் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் திருடியது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். (வயது 56). இவர் சாயர்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சுந்தரவள்ளியும் அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். கடந்த 29-ந் தேதி பாலசுப்பிரமணியன் கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது பணம் வரவில்லை. அவரது பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் கார்டை கொடுங்கள், நான் பணம் எடுத்து தருகிறேன் என கூறியுள்ளார்.
இதனை நம்பி அவரும் கார்டை கொடுத்தார். அந்த வாலிபர் எந்திரத்தில் கார்டை செலுத்திய போதும் பணம் வரவில்லை. உடனே அந்த வாலிபர் கார்டை பாலசுப்பிரமணியனிடம் கொடுத்து விட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன் தனது வங்கி பாஸ்புத்தகத்தில் 'என்ட்ரீ' செய்வதற்காக வங்கிக்கு சென்ற போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் குறைந்து இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விபரங்களை கேட்டார்.
அப்போது தான் அவரது கையில் இருக்கும் ஏ.டி.எம். கார்டு அவருடையது இல்லை என்பது தெரியவந்தது. கடந்த 29-ந் தேதி ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்த போது வாலிபர் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் திருடியது தெரியவந்தது.
அதன்பிறகு அந்த வாலிபர் பாலசுப்பிரமணியனின் கார்டை பயன்படுத்தி பாளை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.50 ஆயிரத்திற்கு நகை வாங்கி உள்ளார். மேலும் 2 முறை ஏ.டி.எம். மூலம் தலா ரூ.10 ஆயிரம் எடுத்துள்ளார்.
தொடர்ந்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இவரது கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யுமாறு கூறினர். அதன்பேரில் பாலசுப்பிரமணியன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ந் தேதி குணமடைந்தார்.
அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் கடந்த மே மாதம் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வருசநாடு :
தேனி மாவட்டம் கண்டமனூர் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் நாகராஜ்(40). இவருக்கும் அவரது உடன்பிறந்த சகோதரரான அழகுவாடன் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் கிடாவெட்டும் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று நாகராஜ் தனது மற்றொரு சகோதரரான கணேசனுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அழகுவாடன், பால்பாண்டி, கருப்புசாமி, சின்னசுருளி, காவல்காரன் ஆகிய 5 பேரும் சேர்ந்து அவர்களை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.