என் மலர்
நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"
- திருமங்கலம் அருகே வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்கள் ரெயில் நிலையத்தில் பதுங்கியிருந்தபோது சிக்கினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பாரதிராஜா (வயது 35). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
2 மாதத்திற்கு முன்பு புதுப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், சந்தனபாண்டிக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் பாரதிராஜாவை கைது செய்ய முயன்றபோது அங்கிருந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் ஜாமீன் பெற்று கடந்த 10-ந் தேதி பாரதிராஜா சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு புதுப்பட்டியில் உள்ள டீக்கடையில் நண்பர் சரவணகுமாருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாரதிராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
உடனிருந்த சரவணக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாரதிராஜாவை கொலை செய்தது சந்தனபாண்டியும், அவரது நண்பர்களும் என தெரியவந்தது. இதையடுத்து சந்தனபாண்டி, ராம கிருஷ்ணன், கோகுல்,பரத் பாக்கியராஜ் விக்கி ஆகிய 6 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
மற்ற 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த போலீசார் கைது செய்தனர். 5 பேரையும் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு 5 பேரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பைப் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனம் 5ஜி இணைப்பு கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இதற்காக நகர் முழுவதும் புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் காமராஜபுரம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இங்கு 49 பைப்புகள் ஒரு இடத்தில் தொலைதொடர்பு நிறுவனம் சார்பில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 29 பைப்புகளை கடந்த 2-ந் தேதி முதல் காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் மதுரை கூடல்நகரை சேர்ந்த சீனிநிதன் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சென்னப்ப நாயக்கனூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது35) மற்றும் ஆரப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (42), செல்லூர் விஸ்வநாதன் (40), கோரிப்பாளையம் பிரவீன்ராஜ் (32) உள்பட 5 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைப் மற்றும் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
- ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், சுரேஷ் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவிதி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, தளவாய்பள்ளியை சேர்ந்த ஆனந்தராஜ், விமல்ராஜ், சிஞ்சுப்பள்ளியை சேர்ந்த ஜெயபால், மேல்கரடிகுறி பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 2800 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கொரமடை கடத்தூர் கொரங்காட்டு தோட்டம் பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
- இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரமடை கடத்தூர், கொரங்காட்டு தோட்டம், பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் நம்பியூரை சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22), கடத்தூரை சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.950 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- மாணவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- மொரீசியஸ் மருத்துவக்கல்லூரி முகவரின் சேவை குறைபாடு
அரியலூர்:
கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை காவலர் சாமுவேல். இவரது மகன் ரெனால்ட் ஏசுதாசன் (வயது 21). கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மருத்துவ படிப்பில் சேர சென்னையில் உள்ள அந்த கல்லூரியின் முகவர் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.
பின்னர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களுடன் கல்விக் கட்டணமாக ரூ.11,50,000 ஆயிரம் செலுத்தியுள்ளார். இவ்வாறு மொரிசியஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரெனால்ட் ஏசுதாசன் ஒரு ஆண்டு காலம் அங்கு படித்து விட்டு இந்த மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் தமிழகத்திற்கு திரும்பி வந்து விட்டார்.
இதையடுத்து அவர், தாம் செலுத்திய கல்விக் கட்டணத்தையும், சமர்ப்பித்த மதிப்பெண் பட்டியல்களையும் திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்தையும் அதன் சென்னை முகவரையும் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை கிடைக்காததால், அந்த மருத்துவக் கல்லூரி மீதும், அதன் சென்னை முகவர் மீதும், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
அதனை அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் விசாரித்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் அவரது புகாரை விசாரிக்குமாறு உத்தரவிட்டதன் காரணமாக அடையார் காவல் நிலைய ஆய்வாளர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரியின் முகவர் அசல் சான்றிதழ்களை மட்டும் திருப்பி வழங்கியுள்ளார். முதலாம் ஆண்டு படிப்பிற்கான கட்டணத்தைத் தவிர மீதித் தொகையை வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ரெனால்ட் ஏசுதாசன், தாம் செலுத்திய கல்விக் கட்டணம் ரூ.11,50,000 பணத்தை கல்லூரியும், அதன் முகவரும் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அவர்களது சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பில், மாணவர் சொந்த விருப்பத்தின் பேரில் கல்லூரியை விட்டு வந்து விட்டார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மொரீசியசில் உள்ள அண்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
ஆனால், அந்த கல்லூரியின் சென்னை முகவர், மாணவரின் அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகள் காலதாமதம் செய்துள்ளார் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முகவர் சேவை குறைபாடு புரிந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மாணவர் ரெனால்ட் ஏசுதாசனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை நான்கு வாரத்துக்குள் கல்லூரியின் முகவராக செயல்பட்ட சென்னை முகவாண்மை அலுவலக தலைமை நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
- உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
- தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுப்ரமணிய பிரசாத் துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஒலினா. இவர்களது மகன் லெயான்ஷ் பிராசாத்(வயது5). தற்பொழுது துபாயில் யூ.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் கலாம் சாதனையாளர் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
இதற்கான விருதுகளை இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியனிடமிருந்தும் தனித்துவம் வாய்ந்த சாதனையாளர் விருதினை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜூலியட்டிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
இவர் மேலும் பல உலக சாதனைகள் புரிந்து பல புத்தகங்களில் இடம் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை ஏற்கனவே தனது இரு கைகளையும் எதிரெதிர் திசையில் ஒருநிமிடத்தில் அதிக அளவில் சுற்றி உலக சாதனை புரிந்து உலக சாதனையாளர் புத்தகம், ஆசிய சாதனையாளர் புத்தகம், இந்திய சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.
- மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
மேட்டுப்பாளையம்,
கர்நாடக மாநிலம் ஒயிலாண்ட நல்லி பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா. இவரது மகன் அன்வர் பாஷா. இவர் சொந்தமாக மினி வேன் வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது மினிவேனில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 16 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நீலகிரியில் பல்வேறு இடங்களைசுற்றி பார்த்த அவர்கள், நேற்று தங்களது ஊருக்கு புறப்பட்டனர்.
வாகனத்தை அன்வர் பாஷா ஒட்டினார். மினிவேன் ஊட்டி சாலை 2-வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது பிரேக் பிடிக்காமல், சாலையில் இருந்த இடது பக்க சுவற்றில் மோதி மினிவேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஜெகதீஷ் படிகர்(30), மல்லன்ன கவுடா(29), பிரகாஷ்(29), சிவப்பா(41), நாகன்கவுடா(29) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர் முருகநாதன் மற்றும் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைச்சாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ்படிகர்(30) மற்றும் மல்லன்ன கவுடா(29) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது28). இவர் சம்பவத்தன்று சிறுகுளம் கண்மாய் பகுதியில் சென்றார். அப்போது அங்கு வந்த பராசக்தி நகரை சேர்ந்த குருசங்கர் (எ) குண்டு காளி (37) என்பவர் அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் குண்டு காளியை கைது செய்தனர்.
சிவகாசி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (21). இவர் பள்ளப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது லிங்கபுரம் காலனியை சேர்ந்த விசால் முருகன் (31), நேரு காலனி சோனு குமார் (31) ஆகியோர் வாளால் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (25). பட்டாசு தொழிலாளியான இவர் நாரணாபுரம் ரோட்டில் சென்ற போது சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த கருப்பசாமி (36), முனீஸ்வரன் (21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
- சிகரெட் தர மறுத்ததால் பெண்ணை தாக்கிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் தராமல் சிகரெட் கேட்டுள்ளனர். காளியம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மகனின் மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.
இதுகுறித்து காளியம்மாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம், பெரியசாமி தெரு பாஸ்கரன் மகன் ஆப்ரகாம் (வயது 24), ஜே.ஜே நகர் பாலசுப்பிரமணியம் மகன் மணிகண்டன் ( 21), அவனியாபுரம், அம்பேத்கார் நகர் பாறைகனி மகன் அருண்குமார் ( 19), பிரசன்னா காலணியை சேர்ந்த 17 வயது சிறுவன், அவனியாபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜா ( 39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- ரூ.5 லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
- தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் கணேஷ்(வயது 45) என்பவர் காலணி, ஷூக்கள் மற்றும் பேக்குகள் வியாபாரம் செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்கள், பேக்குகள் மாடி அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் திடீரென தீப்பற்றி, கரும் புகையாக புகைந்து, புகைமூட்டம் வந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து கணேசனிடம் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டினர்
- வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே உள்ள சந்தன கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47) முன்னாள் ராணுவ வீரர்.
நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே நின்றிருந்த பூங்காவனத்தை தேடி 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.
அவர்கள் அருகே கிடந்த மூங்கில் குச்சிகளை எடுத்து பூங்காவனத்தின் தலையில் தாக்கினர். தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்தனர். அவர் கீழே விழுந்தபோதும் தாக்கியுள்ளனர்.
இதில் பூங்காவனம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவரது மனைவிக்கும் கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாதுரை (56) ராஜசேகர் (31) ஜெகதீஷ் (30) ஜெயவேல் (57) ஆகியோர் சேர்ந்து பூங்காவனத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.